
Thursday, May 31, 2007
காந்தியைக் கொல்ல பிராமணர்கள் சூழ்ச்சி செய்தனர்காந்தியின் கொள்ளுப்பேரன் தகவல்
காந்தியைக் கொல்ல பிராமணர்கள் சூழ்ச்சி செய்தனர்காந்தியின் கொள்ளுப்பேரன் தகவல்காந்தியடிகளைப் படுகொலை செய்தவன் நாதுராம் கோட்சே என்ற ஹிந்துத்துவ வெறியன் என்பதும், ஆர்எஸ்எஸ் இயக்கப் பின்னணியை உடைய அந்த ஆசாமி, மகாராஷ்ட் டிரவின் சித்பவன் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதும் வரலாற்று உண்மை.காந்தி படுகொலை செய்யப்பட்டார் என்பது மட்டுமே உண்மை என்பதுபோலவும் கொலையாளிகள் குறித்து எந்தவித விரிவான தகவல்களும் விவரிக்கப்படாத நிலையே இன்றுவரை தொடர்ந்து வருகிறது. காந்தியின் படுகொலையில் சங்பரிவார் அமைப்பின் சதியும், பிராமணர்களின் கைவரிசையும் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளாய் சரித்திரத்தில் அழுத்தமாக பதிவு செய்யப்பட்ட பின்பும்கூட இன்றுவரை முஸ்லிம்களை குற்றப்பரம்பரை யைப் போல அவர்கள் சித்தரித்து வருகின்றனர். இந்நிலையில் ஆதிக்க சக்திகளின் ஆணவத்தை தோலு ரித்துக் காட்டும் வகையில் காந்தியடிகளின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி உலுக்கும் உண்மைகளை வெளியிட்டார்.தமது ''கங்ற்'ள் ஃண்ப்ப் ஏஹய்க்ட்ண்'' என்ற நூலை வெளியிட்டு உரையாற்றுகையில், ''காந்தியடிகளை கொலை செய்ய நடந்த பல்வேறு சம்பவங்களில் பிராமணர்களின் சதி இருந்துள்ளது'' என்று குறிப்பிட்ட துஷார் காந்தி, ''பிராமண சமூகம் இந்தியாவை ஹிந்துத்துவா நாடாக மாற்ற விரும்புகின்றனர்'' என்றும் கூறினார்.'காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு அவர் தேசப் பிரிவினைக்கு காரணமாக இருந்தார். பாகிஸ்தானுக்கு இந்திய அரசு கொடுக்க வேண்டிய 55 கோடி ரூபாயை காந்திதான் வற்புறுத்தி கொடுக்க வைத்தார்; அதனால்தான் அவர் கொலை செய்யப்பட்டார்' என வரலாற்றை திரித்துக்கூறும் சங்பரிவார் இயக்கத்தின் செயலை துஷார் காந்தி வன்மையாகக் கண்டித்தார்.பிராமண சமூகம் இந்தியாவை ஒரு ஹிந்துத்துவ தேசமாக மாற்றும் முயற்சியிலே காந்தியை கொலை செய்ய நடைபெற்ற சம்பவங்களின் பின்னணியில் அவர்கள் செயல்பட்டனர் என அழுத்தமாக தமது நூல் வெளியீட்டு விழாவில் கூறினார்
Sunday, May 27, 2007
hyderabad bomb blast abusalih news in tamil
ஹைதராபாத் பயங்கரம்!தொடரும் முஸ்லிம்களுக்கெதிரான சதித்திட்டங்கள்...
அபூசாலிஹ்
ஆந்திரத் தலைநகர் ஹைதரா பாத்தில் பழம்பெருமை வாய்ந்த மக்கா மஸ்ஜித் (18லி05லி07) வெள்ளிக்கிழமை அன்று ஜும்ஆ தொழுகையின் போது நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 16 பேர் உடல் சிதறி, ரத்த வெள்ளத்தில் பலியாயினர். 50க்கும் மேற்பட்டோர் உஸ்மானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின் றனர்.
முஸ்லிம்களை குறிவைத்து திட்ட மிட்டு தாக்கப்படும் நிகழ்வுகள் தொடர்வது நாடெங்கும் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிவாசல் களின் மீது நிகழ்த்தப்படும் பயங்கரவாத தாக்குதல்கள் பெருகி வருகின்றன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வெளியேயும் முஸ்லிம்களின் மீதான பயங்கரவாத தாக்குதல்கள் சமீபகாலமாக தொடர்ந்து வருகிறது.
2006 ஏப்ரலில் வரலாற்றுச் சிறப்புமிக்க டெல்லி ஜும்மா மஸ்ஜிதில் குண்டு வெடித்தது. பலர் காயமடைந்தனர்.
2006 செப்டம்பர் மாதம் மகாராஷ்ட்ரா மாநிலம் மாலேகான் பள்ளிவாசலில் குண்டு வெடித்தது. 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்து பலர் மரணமடைந்தனர்.
ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் இரண்டு சக்தி வாய்ந்த குண்டுகளை வெடிக்காத நிலையில் கைப்பற்றி விட்டதாக ஆந்திர காவல்துறை தலைவர் பாஸித் தெரிவித்தார். குண்டு வெடிப்புகளால் அப்பாவி மக்கள் பலியாகி வருவது மக்க ளிடையே அவநம்பிக் கையையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முஸ்லிம்களின் சமூக பொருளாதார வாழ்வை சீர்குலைக்கும் நோக்கில் இது நடத்தப்பட்டிருப்பதாகவும் சமூக நல ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.மிகப்பெரிய சதிச்செயல்களான டெல்லி ஜும்மா மஸ்ஜித் குண்டு வெடிப்புக்கு ஊழியர்களிடையே ஏற்பட்ட தகராறு தான் காரணம் என காவல்துறை கூறியது. அதில் ஒரு கும்பல் இந்தச் சதிச்செயலை செய்தது என காவல்துறை விரிவுரை எழுதியது.
பள்ளிவாசல் குண்டு வெடிப்பு சிமி இயக்கத்தினரால் நடத்தப்பட்டது என மகாராஷ்ட்ர காவல்துறை தெரிவித்தது.
கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த ஹைதராபாத் பள்ளிவாசல் குண்டு வெடிப்பில் ஜெய்ஷிலிமுஹம்மத், லஷ்கர்லிஇலிதொய்பா, (முட்டை லாப்பா, கொத்துப் பரோட்டா என்று சொல்லாதது மட்டும் தான் பாக்கி) போன்ற இயக்கங்கள் இன்னும் பல இயக்கங்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என காவல்துறை தரப்பிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதையே ஈயடிச்சான் காப்பியாக சன் டிவி (சங் டிவி?) உள்ளிட்ட ஊடகங்களும் செய்தி ஏடுகளும் பரபரப்பை ஏற்படுத்தின.அதற்கு காவல்துறையின் புலனாய்வுப் பிரிவு கூறும் காரணம் பள்ளிவாசல்களில் குண்டு வெடிப்பு சதி நிகழ்த்துவதின் மூலம் முஸ்லிம்களின் ஆத்திரத்தை ஹிந்துக் களின் மீது திருப்பி கலவரங்களை ஏற்படுத்துவதற்காக நிகழ்ந்த சதி என்று பக்கம் பக்கமாய் காரணம் கூறுகிறார்கள்.
குண்டு வெடிப்பு சதிகாரர்களுக்கு, சவூதியிலிருந்து அதிகமான தொலைபேசி அழைப்புகள் வந்தன என முதலில் அந்திர மாநில புலனாய்வு அமைப்புகள் அறிவித்தன.
குண்டு வெடிப்பு சதிகாரனுக்கு சவூதி அரேபியாவிலிருந்து கட்டளையிடப் பட்டது என்ற செய்திகள் ஊடகங்களில் மதியம் செய்திகளாய் பரப்பப்பட்டது.அதன்பிறகு இரவு துபாய்யிலிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்ததாக செய்திகள் பரப்பப்பட்டது.
அதன்பிறகு இரவு துபாய் இலிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்ததாக செய்திகளை அதே தொலைக்காட்சி சேனல்கள் வாசித்தன. வெடித்த குண்டு நாட்டு வெடிகுண்டு வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம் என உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் கூறுகிறார்.
ஆர்.டி.எக்ஸ்லிவகையைச் சேர்ந்ததாக ஆந்திர காவல்துறை கூறுகிறது.வெடித்தது எதுவாக இருந்தாலும் பலியானவர்கள் ஏதுமறியாத அப்பாவிகள். தங்களின் உயிர் எதற்காக பறிக்கப் படுகிறது, யாரால் இது நடத்தப்பட்டது, ஏன் இது நமக்கு நிகழ்ந்தது என்பதை அறியாத நிலையிலே ரத்த வெள்ளத்தில் மாண்டு போனார்கள்.
இந்த சதிக்கு சஹீத் பிலால் என்னும் நபர் பின்னணியில் இருந்ததாக தகவல்கள் புலனாய்வுத் துறையினரால் வெளியிடப் படுகின்றன.
பர்தா போட்ட பெண், குண்டு வெடிப்புக்கு சில நிமிடங்களுக்கு முன் செல்போனுடன் அலைந்தாக நேரில் பார்த்த ஒரு சாட்சி இருப்பதாக (21லி05லி07) நாளிதழ் ஒன்று குறிப்பிடுகிறது.
ஹைதராபாத் பள்ளிவாசல் குண்டு வெடிப்பு மற்றும் அதற்கு முன்பு நடைபெற்ற குண்டு வெடிப்புகள் குறித்து காவல்துறை கூறும்போது ஹிந்துலிமுஸ்லிம் மத மோதல்களை ஏற்படுத்துவதற்காக இந்தச் சதிகள் முஸ்லிம் பயங்கரவாதி களால் நிகழ்த்தப்பட்டதாக கூறுகின்றன.
இந்த ஒரே ஒரு புள்ளியைச் சுற்றி 18 ஆம் தேதியிலிருந்து புலனாய்வு சுற்றி சுற்றி வருகின்றது. புலனாய்வுத்துறையின் இந்தப் பிரச்சாரம் குறித்து நடுநிலை ஊடகவியலாளர்களும் சமூக நல ஆர்வலர்களும், முஸ்லிம் உரிமை அமைப்புகளும் பெரும் வியப்பும்லி விமர்சனமும் தெரிவித்து வருகின்றனர்.
பள்ளிவாசல்களில் குண்டு வெடித்து விட்டது. வைத்தது ஹிந்துக்கள் தான் என ஆத்திரம் கொண்டு முஸ்லிம்கள் கலவரம் விளைவிப்பார்கள் என மனதிலே திட்டம் போட்டு சில பாகிஸ்தான் தீவிரவாதிகள் இதை செயல்படுத்தி யிருக்கிறார்கள் என புலனாய்வுத்துறை யினர் கிட்டத்தட்ட முடிவெடுத்து விட்டதாகவே தெரிகிறது.
இங்கு தான் நடுநிலையாளர்கள் கடந்த கால சம்பவம் ஒன்றை நினைவு படுத்துகிறார்கள்.
1992 டிசம்பர் 6 அன்று மனித குலத்தையே வெட்கித் தலைகுனிய வைக்கும் வண்ணம் பாபரி மஸ்ஜித் தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டது.
இதை நிகழ்த்தியது சங்லிபரிவார் என்ற ஹிந்துத்துவ வெறியர்கள் தான். ரத்தத்தை கொதிக்கச் செய்யும் இந்த கொடிய செயல் நடந்த போது முஸ்லிம்கள் வேதனையில் துடித்தார்கள். ஆவேசத்தில் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் ஹிந்து சகோதரர்களுக்கு ஒரு சிறு தீங்கும் நிகழா வண்ணம் பார்த்துக் கொண்டார்கள்.
பாபரி பள்ளிவாசலை தகர்க்க விட்டு வேடிக்கை பார்த்த நரசிம்ம ராவ் தலைமையிலான இந்திய அரசை எதிர்த்து அவர்களது கோபம் புறப்பட்டதே தவிர சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படவில்லை.ஆர்ப்பாட்டங்களும் கடையடைப்புகளும் மத்திய அரசை எதிர்த்து நடத்தப்பட்டன.
உ.பியின் பாஜக அரசை எதிர்த்துப் கூட போராட்டம் நடத்தப்படவில்லை. காரணம் உ.பி பாஜக அரசு அப்போது டிஸ்மிஸ் செய்யப்பட்டது.
மும்பையில் (பம்பாய்) சிவசேனா வினரால் வன்முறைகள் கட்ட விழ்த்து விடப்பட்டன. மும்மை முஸ்லிம்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாயினர். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதை போன்ற இந்நிகழ்வை எதிர்த்துக் கூட ஆவேசம் கொண்டு அகில இந்திய அளவில் முஸ்லிம்கள் ஹிந்துக்களின் மீது எந்த தாக்கு தலையும் தொடுக்காது கண்ணியம் காத்தனர்.
வேதனையின் விளிம்பில் இருந்தபோது கூட ஆவேசத்தின் உச்சத்தில் இருந்தபோது கூட முஸ்லிம்கள் ஹிந்துக்களை நேசித்தனர். இதில் முஸ்லிம்களை ஆத்திரம் கொள்ள செய்வதற்காக பள்ளிவாசல் குண்டு வெடிப்புகள் முஸ்லிம் பயங்கரவாத இயக்கங் களால் நடத்தப் பட்டது என்று கூறுவதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றே நடுநிலையாளர்கள் கூறுகின்றனர்.
சமாதான சகவாழ்வை நேசிக்கும் இந்திய முஸ்லிம்களை உசுப்பி விட்டு மதக்கலவரங்களை நடத்தி விடலாம் என்று எந்த தீய சக்திகள் நினைத்தாலும் அது நிறைவேறாது என்பது ஏற்கெனவே (1992ல்) நிரூபிக்கப்பட்ட ஒன்று.
இது புரியாமல் எந்த மக்கு தீவிரவாதி இருக்கிறான் என்பது தெரியவில்லை.
புலனாய்வுப் பிரிவினரின் கண்ணோட்டத்தை உடைப்பதைப் போன்றே ஹைதராபாத் பள்ளி வாசல் குண்டு வெடிப்பு நிகழ்ந்த பிறகு ஒரு முஸ்லிம் எந்த ஹிந்துவையும் குதறியதாகவோ, குறைந்த பட்சம் கிள்ளிவிட்டதாக வோக் கூட தகவல்கள் இல்லை. மாலேகான் பள்ளிவாசலில் 50க்கும் மேற்பட்டோர் பலியான குண்டு வெடிப்பிலும் கூட முஸ்லிம்கள் ஹிந்துக்களின் மீது பாயவில்லை. மதக் கலவரங்கள் ஏற்படவில்லை. ஆனாலும் புலனாய்வுத்துறையினர் மட்டும் ஒரே 'கதையை' அதே கற்பிதத்தை மீண்டும் மீண்டும் கூறி பதட்டத்தை ஏற்படுத்துவதோடு அப்பாவி முஸ்லிம்களை வளைத் துப் பிடிக்கும் சதி இருக்கக்கூடுமோ என சமூகவியலாளர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
குண்டுசட்டியில் குதிரை ஓட்டும் இத்தகைய போக்குகளை புலனாய் வுத் துறையினர் கைவிட வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் கோரிக்கை.
புலனாய்வு பல கோணங்களில் இருக்க வேண்டுமேயொழிய ஒரே செக்கு மாட்டுச் சிந்தனையை, முஸ்லிம்களை மட்டுமே குறைகூறி பழிபோடும் போக்கை கைவிட வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.
பள்ளிவாசல்களில் நடக்கும் குண்டு வெடிப்புகள் தொடர்பாக தீவிரவாத ஹிந்துத்துவ இயக்கம் ஒன்றின் மீது சந்தேகம் எழுப்பப் பட்டது.
மகராஷ்ட்ராவில் பார்பபானியில் உள்ள முஹம்மதி மஸ்ஜித் பள்ளி வாசலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிலர் காயம் அடைந்தனர்.
நான்டெட் என்ற இடத்தில் பஜ்ரங்தள் என்ற ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கத்தின் வெடி குண்டு தொழிற்சாலையில் குண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் போது நால்வர் பலியாயினர். இதைப் போன்ற ஒரு சம்பவம் கடந்த ஆண்டும் நடந்தது.
பூனாவில் உள்ள மஸ்ஜிதிலும் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.
ஜால்னாவில் உள்ள மஸ்ஜிதி லும் குண்டுவெடிப்பு நடந்தது.
50லிக்கும் மேற்பட்டோரை பலிகொண்ட மாலேகான் குண்டு வெடிப்பிலும் பஜ்ரங்தள் இயக்கத் தினரின் கைவரிசை இருந்தாக உள்ளூர் மக்கள் குறிப்பிட்டனர். ஆனால் இந்திய அளவிலான ஊடகங்கள் எல்லாம் சிமி, சிமி என்றே அலறினநான்டெட்டில் பஜ்ரங்கதள் வெடிகுண்டு தொழிற்சாலையில் ஒட்டுத்தாடிகளும் தொப்பிகளும் கண்டு பிடிக்கப்பட்டன. அவ்வாறே மாலேகானில் பள்ளிவாசல் குண்டு வெடிப்புக்குப் பிறகு பலியான உடல்களுக்கு நடுவே தாடியும் தொப்பியும் வைத்திருந்த உடலை ஆம்புலன்ஸில் ஏற்றும்போது தாடி கையோடு வந்துவிட்டதாக பிணத்தை ஆம்புலன்ஸில் ஏற்றிய உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
ஆனால் அவ்வாறு எந்த ஒரு பிணமும் இல்லை இல்லை என மகராஷ்டிரா மாநில காவல்துறையினர் மறுத்திருக்கின்றனர். அதாவது எந்த அசம்பாவிதமும் நிகழ்ந்தாலும் இப்படித்தான் விசாரணையின் போக்கு அமைய வேண்டும் என்று எழுதப்படாத ஒரு விதியை வைத்துக் கொண்டே செயல் படுவதாகத் தெரிகிறது.
ஹைதராபாத் குண்டு வெடிப்பு சம்பவம் அவ்வாறு ஆகிவிடக்கூடாதே என்பது தான் நாட்டு மக்களின் கவலை. புலனாய்வுத் துறையினர் குறிப்பிடும் எந்த இயக்கத்தினர் மீதும் விசாரணை நடத்தட்டும். ஆனால் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வகையில் அது அமைய வேண்டும்.
மாலேகான் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோது ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கமான பஜ்ரங்தள் இயக்கத்தினர் மீது ஏன் விசாரணை நடத்தவில்லை என உள்ளூர் மக்களும் நடுநிலையாளர்களும் காவல்துறை யினரிடம் வினா எழுப்பிய போது அவ்வாறு நடத்தினால் பதட்டம் ஏற்படும் நிலைமை விபரீதம் ஆகும் என மகராஷ்டிரா மாநில காவல்துறை உயர் அதிகாரி பஸ்ரிச்சா அப்போது தெரிவித்தார்.( இது எப்படி இருக்கு)
குறிப்பிட்ட ஹிந்துத்துவ இயக்கத்தினர் தான் இதை நிகழ்த்தியிருப்பார்கள் என இங்கு வேண்டுமென்றே யாரும் கூறவில்லை, நாடெங்கும் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கக் கோரி தமுமுக உள்ளிட்ட இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. ஆனால் அவ்வாறு இருக்கலாம் என்ற சாத்தியக் கூறுகளை மறுக்க முடியாது. பாப்பா கையில் இருக்கும் பலூன் வெடித்தால் கூட பாய்ந்து சென்று முஸ்லிம் இளைஞர்களை இம்சை செய்யும் காவல்துறை மேற்குறிப்பிட்ட இயக்கங்களை விசாரணை செய்வதற்கு தயங்குவது ஏன்?
தப்லீக் ஜமாத்தார்களைக் கொல்ல நடந்த சதியா?ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து மூன்று மணிநேரம் கழித்து சக்தி வாயந்த இரண்டு குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன. அந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பள்ளிவாசல் வளாகத்தில் நுழைகிறார். ஆயிரக்கணக்கான மக்கள் அவரை சூழ்ந்து கொண்டனார்.
குண்டு வெடித்த 100 மீட்டருக்கு இடைவெளியில் இந்த சக்திவாய்ந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. குண்டு வெடிப்புகள் நடைபெற்ற பிறகு மக்கா மஸ்ஜிதில் அஸர், மக்ரிப், இஷா தொழுகைகள் வழக்கம்போல் நடந்தன. வழக்கம்போல் சிறிதுகூட கூட்டம் குறையாமல் மக்கள் தொழுகைக்காக குழுமினர். தப்லீக் ஜமாத் என்ற அமைப்பு உலகளாவிய மாநாடு ஒன்றிற்கு அழைப்பு விடுத்திருந்தது. சிறிது தூரம் உள்ள மிமித பள்ளியில் நடைபெற இருந்தது. லட்சக்கணக்கான தப்லீக் ஜமாத்தினர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
தப்லீக் ஜமாத் இஜ்திமா நடைபெறும்போது குண்டுகள் வெடிப்பது இது மூன்றாவது முறையாகும். கடந்த 2000ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி குண்டூரில் தப்லீக் இஜ்திமா நடக்கவிருந்தது. இதில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 6 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தீன்தார் அன்ஜுமன் இயக்கத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். தப்லீக் இஜ்திமாவின் சேவையைக் கண்டு எரிச்சலுற்ற வி.எச்.பி.யினர் மிரட்டல் கடிதங்களை அனுப்பியுள்ளனர். தொடர்ந்து மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டு வருவது ஹிந்து இயக்கத்தின் வெறித்தனத்திற்கு சான்றாக விளங்குகிறது.
குண்டுவெடிப்பைக் கண்டித்து போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது காவல்துறையினர் வெறிச்செயல்.
ஹைதராபாத் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை 18லி05லி07 அன்று ஜும்ஆ தொழுகையின்போது குண்டு வெடித்ததைக் கண்டு குமுறி எழுந்த இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உண்மை குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கக் கோரி போராட்டங்கள் நடத்தினர். 10,000 மக்கள் ஒரே நேரத்தில் தொழக்கூடிய அந்த மஸ்ஜிதில் நிகழ்ந்த குண்டுவெடிப்பினால் மக்களிடையே பதட்டம் ஏற்பட்டது உணர்ச்சி வசப்பட்ட மக்கள் மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தத் தொடங்கினர். குண்டுவெடிப்பையும் அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளையும் ஒரு தெலுங்கு தனியார் தொலைக்காட்சி படம் பிடித்துக் கொண்டிருந்தது.
ஆந்திர மாநில காவல்துறைத் தலைவர் பாசிச சம்பவ இடத்துக்கு விரைந்தார். மஜ்லீúஸ இத்திஹாதுல் முஸ்லிமீன் அமைப்பின் தலைவர் அசதுத்தீன் ஒவைஸி முழுகடையடைப்புக்கு உத்தரவிட்டார்.
இறந்தவர்களின் போஸ்ட் மார்ட்டம் (பிரேத பரிசோதனை அறிக்கை) அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. இறந்தவர்கள் அனைவரும் நங்ப்ச் ப்ர்ஹக்ண்ய்ஞ் தண்ச்ச்ப்ங் (நகத) என்னும் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளனர். இறந்தவர் களின் உடல்களில் குண்டுகள் துளைத்து வெளியேறியுள்ளன என பிரேத பரிசோதனை அறிக்கையை வெளியிட்ட உஸ்மானியா மருத்துவமனையின் தடய வியல் துறைத்தலைவர் எம்.நாராயணரெட்டி குறிப்பிடுகிறார்.
காவல்துறையினரால் கண்மூடித்தனமாக சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் அஹ்மத்(35) காலில் தோட்டா துளைத்த காயம் உள்ளது. இவர் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த ஒருவரை, தூக்கிக் கொண்டு செல்லும் போது இரக்கமே இல்லாமல் காவல்துறை யினர் காலில் சுட்டதால் அளவுக்கதிகமாக ரத்தம் வெளியேறி இறந்திருக்கிறார். இவர் உடனடியாக கொண்டு வரப்பட்டால் உயிர் பிழைத்திருப்பார் என பேராசிரியர் டாக்டர். நாராயணரெட்டி தெரிவித்தார்.
பழைய ஹைதராபாத்தின் மொகல்புரா பகுதியைச் சேர்ந்தவர் இஃப்திகாருத்தீன். இவர் தொழுகையை முடித்து விட்டு தனது குழந்தைகளுக்கு பிஸ்கட் வாங்குவதற்காக சென்ற போது காவல் துறையினரால் சுடப்பட்டு இறந்திருக்கிறார். நாங்கள் கூட்டத்தை கலைப்பதற்காக ரப்பர் குண்டுகளைத் தான் பயன்படுத்தினோம் என காவல்துறையினர் கூறுகிறார்கள். ஆனால் உயிரைப் பறித்தது ரப்பர் குண்டுகள் அல்ல என தெரிவிக்கிறார் இஃப்தி காருத்தீனின் மாமா ரியாஸ் ரவூஃப்.
முஹம்மத் ஜஹிருத்தீன்(27) இவர் நியூ அஹாபுரா பகுதியைச் சேர்ந்தவர். ஜஹீருத்தினின் இடுப்பெலும்பிலிருந்து டாக்டர் குண்டை வெளியிலெடுத்ததை பார்த்த ஜஹீருத்தினின் சகோதரர் குறிப்பிடுகிறார். எவ்விதமான முன்னறிவிப்பும் இன்றி சுடப்பட்ட இந்தச் சம்பவம் கண்டிக்கத் தக்கது என்கிறார். ஜஹீருத்தீன் சகோதரர் முஷீர் இவர் மக்கா மஸ்ஜிதில் குண்டு வெடித்ததைக் கேள்விப் பட்டு சம்பவ இடத்துக்கு வந்தவர்.
மிஸ்ரி கஞ்சை சேர்ந்த முஹம்மத் அக்தர் முஹியுத்தீன் (15) இவரது வயிற்றில் குண்டு பாய்ந்தது. முஹம்மத் சலிம்கான் (35) இவர் கலாபட்டாரைச் சேர்ந்தவர், சையத் ஆதில் அலி(17) இவர் ஃபலருமா பகுதியைச் சேர்ந்தவர் இவர்கள் இருவருக்கும் மார்பின் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளது. இவை அனைத்துமே முகல்புரா காவல்துறை சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்தது. மேலும் காவல்துறையினரின் கண் மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் படுகாய மடைந்தவர்கள் இவர்கள் அனைவருக்கும் நெஞ்சுக்கு மேல் குறி வைத்து காவல்துறை யினரால் குறிவைத்து சுடப்பட்டவர்கள் இவர்கள் ஓவைஸி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
குண்டு வெடிப்பு 1.30க்கு நிகழ்ந்தது. அதனைத் தொடர்ந்து மக்களின் கோபம் வெடித்தது. சரியாக 2.20 க்கு பொதுமக்களை நோக்கி காவல்துறையினர் 12 ரவுண்டு சுட்டுள்ளனர்.மத்திய உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பாட்டில் முதல் அமைச்சர் ராஜசேகர ரெட்டி இருவரும் மக்கா மஸ்ஜிதிற்கு சனிக்கிழமை வந்தபோது ஆத்திரம் கொண்ட மக்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
வெறித்தனமாக சுட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குண்டு வெடிப்புக்கும் காவல்துறையினரின் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூட்டுக்கும் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்தனர். காவல்துறையினரின் அத்துமீறலுக்காக முதல்வர் ராஜசேகர ரெட்டி மன்னிப்புக் கேட்டார். குண்டு வெடிப்பில் 16 பேர் பலியானார்கள். துப்பாக்கி சூட்டிலே ஏழு பேர் பலியானார்கள். இந்த சமூகம் சந்திக்கும் கொடுமைகளுக்கு விடிவே கிடையாதே?
அபூசாலிஹ்
ஆந்திரத் தலைநகர் ஹைதரா பாத்தில் பழம்பெருமை வாய்ந்த மக்கா மஸ்ஜித் (18லி05லி07) வெள்ளிக்கிழமை அன்று ஜும்ஆ தொழுகையின் போது நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 16 பேர் உடல் சிதறி, ரத்த வெள்ளத்தில் பலியாயினர். 50க்கும் மேற்பட்டோர் உஸ்மானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின் றனர்.
முஸ்லிம்களை குறிவைத்து திட்ட மிட்டு தாக்கப்படும் நிகழ்வுகள் தொடர்வது நாடெங்கும் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிவாசல் களின் மீது நிகழ்த்தப்படும் பயங்கரவாத தாக்குதல்கள் பெருகி வருகின்றன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வெளியேயும் முஸ்லிம்களின் மீதான பயங்கரவாத தாக்குதல்கள் சமீபகாலமாக தொடர்ந்து வருகிறது.
2006 ஏப்ரலில் வரலாற்றுச் சிறப்புமிக்க டெல்லி ஜும்மா மஸ்ஜிதில் குண்டு வெடித்தது. பலர் காயமடைந்தனர்.
2006 செப்டம்பர் மாதம் மகாராஷ்ட்ரா மாநிலம் மாலேகான் பள்ளிவாசலில் குண்டு வெடித்தது. 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்து பலர் மரணமடைந்தனர்.
ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் இரண்டு சக்தி வாய்ந்த குண்டுகளை வெடிக்காத நிலையில் கைப்பற்றி விட்டதாக ஆந்திர காவல்துறை தலைவர் பாஸித் தெரிவித்தார். குண்டு வெடிப்புகளால் அப்பாவி மக்கள் பலியாகி வருவது மக்க ளிடையே அவநம்பிக் கையையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முஸ்லிம்களின் சமூக பொருளாதார வாழ்வை சீர்குலைக்கும் நோக்கில் இது நடத்தப்பட்டிருப்பதாகவும் சமூக நல ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.மிகப்பெரிய சதிச்செயல்களான டெல்லி ஜும்மா மஸ்ஜித் குண்டு வெடிப்புக்கு ஊழியர்களிடையே ஏற்பட்ட தகராறு தான் காரணம் என காவல்துறை கூறியது. அதில் ஒரு கும்பல் இந்தச் சதிச்செயலை செய்தது என காவல்துறை விரிவுரை எழுதியது.
பள்ளிவாசல் குண்டு வெடிப்பு சிமி இயக்கத்தினரால் நடத்தப்பட்டது என மகாராஷ்ட்ர காவல்துறை தெரிவித்தது.
கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த ஹைதராபாத் பள்ளிவாசல் குண்டு வெடிப்பில் ஜெய்ஷிலிமுஹம்மத், லஷ்கர்லிஇலிதொய்பா, (முட்டை லாப்பா, கொத்துப் பரோட்டா என்று சொல்லாதது மட்டும் தான் பாக்கி) போன்ற இயக்கங்கள் இன்னும் பல இயக்கங்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என காவல்துறை தரப்பிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதையே ஈயடிச்சான் காப்பியாக சன் டிவி (சங் டிவி?) உள்ளிட்ட ஊடகங்களும் செய்தி ஏடுகளும் பரபரப்பை ஏற்படுத்தின.அதற்கு காவல்துறையின் புலனாய்வுப் பிரிவு கூறும் காரணம் பள்ளிவாசல்களில் குண்டு வெடிப்பு சதி நிகழ்த்துவதின் மூலம் முஸ்லிம்களின் ஆத்திரத்தை ஹிந்துக் களின் மீது திருப்பி கலவரங்களை ஏற்படுத்துவதற்காக நிகழ்ந்த சதி என்று பக்கம் பக்கமாய் காரணம் கூறுகிறார்கள்.
குண்டு வெடிப்பு சதிகாரர்களுக்கு, சவூதியிலிருந்து அதிகமான தொலைபேசி அழைப்புகள் வந்தன என முதலில் அந்திர மாநில புலனாய்வு அமைப்புகள் அறிவித்தன.
குண்டு வெடிப்பு சதிகாரனுக்கு சவூதி அரேபியாவிலிருந்து கட்டளையிடப் பட்டது என்ற செய்திகள் ஊடகங்களில் மதியம் செய்திகளாய் பரப்பப்பட்டது.அதன்பிறகு இரவு துபாய்யிலிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்ததாக செய்திகள் பரப்பப்பட்டது.
அதன்பிறகு இரவு துபாய் இலிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்ததாக செய்திகளை அதே தொலைக்காட்சி சேனல்கள் வாசித்தன. வெடித்த குண்டு நாட்டு வெடிகுண்டு வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம் என உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் கூறுகிறார்.
ஆர்.டி.எக்ஸ்லிவகையைச் சேர்ந்ததாக ஆந்திர காவல்துறை கூறுகிறது.வெடித்தது எதுவாக இருந்தாலும் பலியானவர்கள் ஏதுமறியாத அப்பாவிகள். தங்களின் உயிர் எதற்காக பறிக்கப் படுகிறது, யாரால் இது நடத்தப்பட்டது, ஏன் இது நமக்கு நிகழ்ந்தது என்பதை அறியாத நிலையிலே ரத்த வெள்ளத்தில் மாண்டு போனார்கள்.
இந்த சதிக்கு சஹீத் பிலால் என்னும் நபர் பின்னணியில் இருந்ததாக தகவல்கள் புலனாய்வுத் துறையினரால் வெளியிடப் படுகின்றன.
பர்தா போட்ட பெண், குண்டு வெடிப்புக்கு சில நிமிடங்களுக்கு முன் செல்போனுடன் அலைந்தாக நேரில் பார்த்த ஒரு சாட்சி இருப்பதாக (21லி05லி07) நாளிதழ் ஒன்று குறிப்பிடுகிறது.
ஹைதராபாத் பள்ளிவாசல் குண்டு வெடிப்பு மற்றும் அதற்கு முன்பு நடைபெற்ற குண்டு வெடிப்புகள் குறித்து காவல்துறை கூறும்போது ஹிந்துலிமுஸ்லிம் மத மோதல்களை ஏற்படுத்துவதற்காக இந்தச் சதிகள் முஸ்லிம் பயங்கரவாதி களால் நிகழ்த்தப்பட்டதாக கூறுகின்றன.
இந்த ஒரே ஒரு புள்ளியைச் சுற்றி 18 ஆம் தேதியிலிருந்து புலனாய்வு சுற்றி சுற்றி வருகின்றது. புலனாய்வுத்துறையின் இந்தப் பிரச்சாரம் குறித்து நடுநிலை ஊடகவியலாளர்களும் சமூக நல ஆர்வலர்களும், முஸ்லிம் உரிமை அமைப்புகளும் பெரும் வியப்பும்லி விமர்சனமும் தெரிவித்து வருகின்றனர்.
பள்ளிவாசல்களில் குண்டு வெடித்து விட்டது. வைத்தது ஹிந்துக்கள் தான் என ஆத்திரம் கொண்டு முஸ்லிம்கள் கலவரம் விளைவிப்பார்கள் என மனதிலே திட்டம் போட்டு சில பாகிஸ்தான் தீவிரவாதிகள் இதை செயல்படுத்தி யிருக்கிறார்கள் என புலனாய்வுத்துறை யினர் கிட்டத்தட்ட முடிவெடுத்து விட்டதாகவே தெரிகிறது.
இங்கு தான் நடுநிலையாளர்கள் கடந்த கால சம்பவம் ஒன்றை நினைவு படுத்துகிறார்கள்.
1992 டிசம்பர் 6 அன்று மனித குலத்தையே வெட்கித் தலைகுனிய வைக்கும் வண்ணம் பாபரி மஸ்ஜித் தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டது.
இதை நிகழ்த்தியது சங்லிபரிவார் என்ற ஹிந்துத்துவ வெறியர்கள் தான். ரத்தத்தை கொதிக்கச் செய்யும் இந்த கொடிய செயல் நடந்த போது முஸ்லிம்கள் வேதனையில் துடித்தார்கள். ஆவேசத்தில் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் ஹிந்து சகோதரர்களுக்கு ஒரு சிறு தீங்கும் நிகழா வண்ணம் பார்த்துக் கொண்டார்கள்.
பாபரி பள்ளிவாசலை தகர்க்க விட்டு வேடிக்கை பார்த்த நரசிம்ம ராவ் தலைமையிலான இந்திய அரசை எதிர்த்து அவர்களது கோபம் புறப்பட்டதே தவிர சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படவில்லை.ஆர்ப்பாட்டங்களும் கடையடைப்புகளும் மத்திய அரசை எதிர்த்து நடத்தப்பட்டன.
உ.பியின் பாஜக அரசை எதிர்த்துப் கூட போராட்டம் நடத்தப்படவில்லை. காரணம் உ.பி பாஜக அரசு அப்போது டிஸ்மிஸ் செய்யப்பட்டது.
மும்பையில் (பம்பாய்) சிவசேனா வினரால் வன்முறைகள் கட்ட விழ்த்து விடப்பட்டன. மும்மை முஸ்லிம்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாயினர். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதை போன்ற இந்நிகழ்வை எதிர்த்துக் கூட ஆவேசம் கொண்டு அகில இந்திய அளவில் முஸ்லிம்கள் ஹிந்துக்களின் மீது எந்த தாக்கு தலையும் தொடுக்காது கண்ணியம் காத்தனர்.
வேதனையின் விளிம்பில் இருந்தபோது கூட ஆவேசத்தின் உச்சத்தில் இருந்தபோது கூட முஸ்லிம்கள் ஹிந்துக்களை நேசித்தனர். இதில் முஸ்லிம்களை ஆத்திரம் கொள்ள செய்வதற்காக பள்ளிவாசல் குண்டு வெடிப்புகள் முஸ்லிம் பயங்கரவாத இயக்கங் களால் நடத்தப் பட்டது என்று கூறுவதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றே நடுநிலையாளர்கள் கூறுகின்றனர்.
சமாதான சகவாழ்வை நேசிக்கும் இந்திய முஸ்லிம்களை உசுப்பி விட்டு மதக்கலவரங்களை நடத்தி விடலாம் என்று எந்த தீய சக்திகள் நினைத்தாலும் அது நிறைவேறாது என்பது ஏற்கெனவே (1992ல்) நிரூபிக்கப்பட்ட ஒன்று.
இது புரியாமல் எந்த மக்கு தீவிரவாதி இருக்கிறான் என்பது தெரியவில்லை.
புலனாய்வுப் பிரிவினரின் கண்ணோட்டத்தை உடைப்பதைப் போன்றே ஹைதராபாத் பள்ளி வாசல் குண்டு வெடிப்பு நிகழ்ந்த பிறகு ஒரு முஸ்லிம் எந்த ஹிந்துவையும் குதறியதாகவோ, குறைந்த பட்சம் கிள்ளிவிட்டதாக வோக் கூட தகவல்கள் இல்லை. மாலேகான் பள்ளிவாசலில் 50க்கும் மேற்பட்டோர் பலியான குண்டு வெடிப்பிலும் கூட முஸ்லிம்கள் ஹிந்துக்களின் மீது பாயவில்லை. மதக் கலவரங்கள் ஏற்படவில்லை. ஆனாலும் புலனாய்வுத்துறையினர் மட்டும் ஒரே 'கதையை' அதே கற்பிதத்தை மீண்டும் மீண்டும் கூறி பதட்டத்தை ஏற்படுத்துவதோடு அப்பாவி முஸ்லிம்களை வளைத் துப் பிடிக்கும் சதி இருக்கக்கூடுமோ என சமூகவியலாளர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
குண்டுசட்டியில் குதிரை ஓட்டும் இத்தகைய போக்குகளை புலனாய் வுத் துறையினர் கைவிட வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் கோரிக்கை.
புலனாய்வு பல கோணங்களில் இருக்க வேண்டுமேயொழிய ஒரே செக்கு மாட்டுச் சிந்தனையை, முஸ்லிம்களை மட்டுமே குறைகூறி பழிபோடும் போக்கை கைவிட வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.
பள்ளிவாசல்களில் நடக்கும் குண்டு வெடிப்புகள் தொடர்பாக தீவிரவாத ஹிந்துத்துவ இயக்கம் ஒன்றின் மீது சந்தேகம் எழுப்பப் பட்டது.
மகராஷ்ட்ராவில் பார்பபானியில் உள்ள முஹம்மதி மஸ்ஜித் பள்ளி வாசலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிலர் காயம் அடைந்தனர்.
நான்டெட் என்ற இடத்தில் பஜ்ரங்தள் என்ற ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கத்தின் வெடி குண்டு தொழிற்சாலையில் குண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் போது நால்வர் பலியாயினர். இதைப் போன்ற ஒரு சம்பவம் கடந்த ஆண்டும் நடந்தது.
பூனாவில் உள்ள மஸ்ஜிதிலும் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.
ஜால்னாவில் உள்ள மஸ்ஜிதி லும் குண்டுவெடிப்பு நடந்தது.
50லிக்கும் மேற்பட்டோரை பலிகொண்ட மாலேகான் குண்டு வெடிப்பிலும் பஜ்ரங்தள் இயக்கத் தினரின் கைவரிசை இருந்தாக உள்ளூர் மக்கள் குறிப்பிட்டனர். ஆனால் இந்திய அளவிலான ஊடகங்கள் எல்லாம் சிமி, சிமி என்றே அலறினநான்டெட்டில் பஜ்ரங்கதள் வெடிகுண்டு தொழிற்சாலையில் ஒட்டுத்தாடிகளும் தொப்பிகளும் கண்டு பிடிக்கப்பட்டன. அவ்வாறே மாலேகானில் பள்ளிவாசல் குண்டு வெடிப்புக்குப் பிறகு பலியான உடல்களுக்கு நடுவே தாடியும் தொப்பியும் வைத்திருந்த உடலை ஆம்புலன்ஸில் ஏற்றும்போது தாடி கையோடு வந்துவிட்டதாக பிணத்தை ஆம்புலன்ஸில் ஏற்றிய உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
ஆனால் அவ்வாறு எந்த ஒரு பிணமும் இல்லை இல்லை என மகராஷ்டிரா மாநில காவல்துறையினர் மறுத்திருக்கின்றனர். அதாவது எந்த அசம்பாவிதமும் நிகழ்ந்தாலும் இப்படித்தான் விசாரணையின் போக்கு அமைய வேண்டும் என்று எழுதப்படாத ஒரு விதியை வைத்துக் கொண்டே செயல் படுவதாகத் தெரிகிறது.
ஹைதராபாத் குண்டு வெடிப்பு சம்பவம் அவ்வாறு ஆகிவிடக்கூடாதே என்பது தான் நாட்டு மக்களின் கவலை. புலனாய்வுத் துறையினர் குறிப்பிடும் எந்த இயக்கத்தினர் மீதும் விசாரணை நடத்தட்டும். ஆனால் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வகையில் அது அமைய வேண்டும்.
மாலேகான் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோது ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கமான பஜ்ரங்தள் இயக்கத்தினர் மீது ஏன் விசாரணை நடத்தவில்லை என உள்ளூர் மக்களும் நடுநிலையாளர்களும் காவல்துறை யினரிடம் வினா எழுப்பிய போது அவ்வாறு நடத்தினால் பதட்டம் ஏற்படும் நிலைமை விபரீதம் ஆகும் என மகராஷ்டிரா மாநில காவல்துறை உயர் அதிகாரி பஸ்ரிச்சா அப்போது தெரிவித்தார்.( இது எப்படி இருக்கு)
குறிப்பிட்ட ஹிந்துத்துவ இயக்கத்தினர் தான் இதை நிகழ்த்தியிருப்பார்கள் என இங்கு வேண்டுமென்றே யாரும் கூறவில்லை, நாடெங்கும் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கக் கோரி தமுமுக உள்ளிட்ட இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. ஆனால் அவ்வாறு இருக்கலாம் என்ற சாத்தியக் கூறுகளை மறுக்க முடியாது. பாப்பா கையில் இருக்கும் பலூன் வெடித்தால் கூட பாய்ந்து சென்று முஸ்லிம் இளைஞர்களை இம்சை செய்யும் காவல்துறை மேற்குறிப்பிட்ட இயக்கங்களை விசாரணை செய்வதற்கு தயங்குவது ஏன்?
தப்லீக் ஜமாத்தார்களைக் கொல்ல நடந்த சதியா?ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து மூன்று மணிநேரம் கழித்து சக்தி வாயந்த இரண்டு குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன. அந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பள்ளிவாசல் வளாகத்தில் நுழைகிறார். ஆயிரக்கணக்கான மக்கள் அவரை சூழ்ந்து கொண்டனார்.
குண்டு வெடித்த 100 மீட்டருக்கு இடைவெளியில் இந்த சக்திவாய்ந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. குண்டு வெடிப்புகள் நடைபெற்ற பிறகு மக்கா மஸ்ஜிதில் அஸர், மக்ரிப், இஷா தொழுகைகள் வழக்கம்போல் நடந்தன. வழக்கம்போல் சிறிதுகூட கூட்டம் குறையாமல் மக்கள் தொழுகைக்காக குழுமினர். தப்லீக் ஜமாத் என்ற அமைப்பு உலகளாவிய மாநாடு ஒன்றிற்கு அழைப்பு விடுத்திருந்தது. சிறிது தூரம் உள்ள மிமித பள்ளியில் நடைபெற இருந்தது. லட்சக்கணக்கான தப்லீக் ஜமாத்தினர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
தப்லீக் ஜமாத் இஜ்திமா நடைபெறும்போது குண்டுகள் வெடிப்பது இது மூன்றாவது முறையாகும். கடந்த 2000ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி குண்டூரில் தப்லீக் இஜ்திமா நடக்கவிருந்தது. இதில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 6 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தீன்தார் அன்ஜுமன் இயக்கத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். தப்லீக் இஜ்திமாவின் சேவையைக் கண்டு எரிச்சலுற்ற வி.எச்.பி.யினர் மிரட்டல் கடிதங்களை அனுப்பியுள்ளனர். தொடர்ந்து மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டு வருவது ஹிந்து இயக்கத்தின் வெறித்தனத்திற்கு சான்றாக விளங்குகிறது.
குண்டுவெடிப்பைக் கண்டித்து போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது காவல்துறையினர் வெறிச்செயல்.
ஹைதராபாத் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை 18லி05லி07 அன்று ஜும்ஆ தொழுகையின்போது குண்டு வெடித்ததைக் கண்டு குமுறி எழுந்த இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உண்மை குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கக் கோரி போராட்டங்கள் நடத்தினர். 10,000 மக்கள் ஒரே நேரத்தில் தொழக்கூடிய அந்த மஸ்ஜிதில் நிகழ்ந்த குண்டுவெடிப்பினால் மக்களிடையே பதட்டம் ஏற்பட்டது உணர்ச்சி வசப்பட்ட மக்கள் மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தத் தொடங்கினர். குண்டுவெடிப்பையும் அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளையும் ஒரு தெலுங்கு தனியார் தொலைக்காட்சி படம் பிடித்துக் கொண்டிருந்தது.
ஆந்திர மாநில காவல்துறைத் தலைவர் பாசிச சம்பவ இடத்துக்கு விரைந்தார். மஜ்லீúஸ இத்திஹாதுல் முஸ்லிமீன் அமைப்பின் தலைவர் அசதுத்தீன் ஒவைஸி முழுகடையடைப்புக்கு உத்தரவிட்டார்.
இறந்தவர்களின் போஸ்ட் மார்ட்டம் (பிரேத பரிசோதனை அறிக்கை) அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. இறந்தவர்கள் அனைவரும் நங்ப்ச் ப்ர்ஹக்ண்ய்ஞ் தண்ச்ச்ப்ங் (நகத) என்னும் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளனர். இறந்தவர் களின் உடல்களில் குண்டுகள் துளைத்து வெளியேறியுள்ளன என பிரேத பரிசோதனை அறிக்கையை வெளியிட்ட உஸ்மானியா மருத்துவமனையின் தடய வியல் துறைத்தலைவர் எம்.நாராயணரெட்டி குறிப்பிடுகிறார்.
காவல்துறையினரால் கண்மூடித்தனமாக சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் அஹ்மத்(35) காலில் தோட்டா துளைத்த காயம் உள்ளது. இவர் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த ஒருவரை, தூக்கிக் கொண்டு செல்லும் போது இரக்கமே இல்லாமல் காவல்துறை யினர் காலில் சுட்டதால் அளவுக்கதிகமாக ரத்தம் வெளியேறி இறந்திருக்கிறார். இவர் உடனடியாக கொண்டு வரப்பட்டால் உயிர் பிழைத்திருப்பார் என பேராசிரியர் டாக்டர். நாராயணரெட்டி தெரிவித்தார்.
பழைய ஹைதராபாத்தின் மொகல்புரா பகுதியைச் சேர்ந்தவர் இஃப்திகாருத்தீன். இவர் தொழுகையை முடித்து விட்டு தனது குழந்தைகளுக்கு பிஸ்கட் வாங்குவதற்காக சென்ற போது காவல் துறையினரால் சுடப்பட்டு இறந்திருக்கிறார். நாங்கள் கூட்டத்தை கலைப்பதற்காக ரப்பர் குண்டுகளைத் தான் பயன்படுத்தினோம் என காவல்துறையினர் கூறுகிறார்கள். ஆனால் உயிரைப் பறித்தது ரப்பர் குண்டுகள் அல்ல என தெரிவிக்கிறார் இஃப்தி காருத்தீனின் மாமா ரியாஸ் ரவூஃப்.
முஹம்மத் ஜஹிருத்தீன்(27) இவர் நியூ அஹாபுரா பகுதியைச் சேர்ந்தவர். ஜஹீருத்தினின் இடுப்பெலும்பிலிருந்து டாக்டர் குண்டை வெளியிலெடுத்ததை பார்த்த ஜஹீருத்தினின் சகோதரர் குறிப்பிடுகிறார். எவ்விதமான முன்னறிவிப்பும் இன்றி சுடப்பட்ட இந்தச் சம்பவம் கண்டிக்கத் தக்கது என்கிறார். ஜஹீருத்தீன் சகோதரர் முஷீர் இவர் மக்கா மஸ்ஜிதில் குண்டு வெடித்ததைக் கேள்விப் பட்டு சம்பவ இடத்துக்கு வந்தவர்.
மிஸ்ரி கஞ்சை சேர்ந்த முஹம்மத் அக்தர் முஹியுத்தீன் (15) இவரது வயிற்றில் குண்டு பாய்ந்தது. முஹம்மத் சலிம்கான் (35) இவர் கலாபட்டாரைச் சேர்ந்தவர், சையத் ஆதில் அலி(17) இவர் ஃபலருமா பகுதியைச் சேர்ந்தவர் இவர்கள் இருவருக்கும் மார்பின் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளது. இவை அனைத்துமே முகல்புரா காவல்துறை சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்தது. மேலும் காவல்துறையினரின் கண் மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் படுகாய மடைந்தவர்கள் இவர்கள் அனைவருக்கும் நெஞ்சுக்கு மேல் குறி வைத்து காவல்துறை யினரால் குறிவைத்து சுடப்பட்டவர்கள் இவர்கள் ஓவைஸி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
குண்டு வெடிப்பு 1.30க்கு நிகழ்ந்தது. அதனைத் தொடர்ந்து மக்களின் கோபம் வெடித்தது. சரியாக 2.20 க்கு பொதுமக்களை நோக்கி காவல்துறையினர் 12 ரவுண்டு சுட்டுள்ளனர்.மத்திய உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பாட்டில் முதல் அமைச்சர் ராஜசேகர ரெட்டி இருவரும் மக்கா மஸ்ஜிதிற்கு சனிக்கிழமை வந்தபோது ஆத்திரம் கொண்ட மக்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
வெறித்தனமாக சுட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குண்டு வெடிப்புக்கும் காவல்துறையினரின் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூட்டுக்கும் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்தனர். காவல்துறையினரின் அத்துமீறலுக்காக முதல்வர் ராஜசேகர ரெட்டி மன்னிப்புக் கேட்டார். குண்டு வெடிப்பில் 16 பேர் பலியானார்கள். துப்பாக்கி சூட்டிலே ஏழு பேர் பலியானார்கள். இந்த சமூகம் சந்திக்கும் கொடுமைகளுக்கு விடிவே கிடையாதே?
Friday, May 18, 2007

டெல்லியை திணறடித்த சமூக நீதிப் படை
தமிழக முஸ்லிம்களின் இதயத் துடிப்பாக, ரத்த ஓட்டமாகத் திகழும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கடந்த 12 ஆண்டுகளாக மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வீரியமிகு போராட்டங்களை நடத்தி வருகிறது.
அரசியல் மற்றும் சமூக தளங்களில் கடினமாக பணியாற்றிய இந்த சேவைப் படையினர் தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறி விட்டனர்.
தளராத உழைப்பு, சலிக்காத தொண்டுள்ளம் கொண்ட தமுமுக தனது சேவைப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், உலகிலேயே முஸ்லிம்கள் இரண்டாவதாக அதிகம் வாழும் இந்தியத் திருநாட்டில் வாழ்ந்துவரும் முஸ்லிம்களின் அவலநிலை குறித்தும், அவர்களது வாழ்வாதாரங்களை மேம்பாடு அடையச் செய்வது குறித்தும் தமுமுக சிந்தித்தது.
தமிழக முஸ்லிம்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் பேரியக்கமாய் விளங்கி வந்த தமுமுக முதன்முறையாக அகில இந்திய அளவில் தனது பார்வையை அழுத்தமாய் பதித்தது.
அனைத்து இந்திய முஸ்லிம்களின் மறுமலர்ச்சிக்காகவும், அவர்களின் உரிமைகளைப் பேணவும் தமுமுக களம் காண முடிவு செய்தது.
2004ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திருமதி. சோனியா காந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இந்திய முஸ்லிம்களிடம் முக்கிய வாக்குறுதிகளை வழங்கி வாக்கு கேட்டது.
அதில் ஒன்று கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் வாழும் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள முஸ்லிம் தனி இடஒதுக்கீடு உரிமையை அனைத்து மாநில முஸ்லிம்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என ஐக்கிய முற்போக்கு கூட்டணி வாக்குறுதி வழங்கியது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வாக்குறுதிகளில் வலு இருந்ததால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வெற்றிக்கு இந்திய முஸ்லிம்கள் தங்கள் வாக்குகளை பெருவாரியாக வழங்க, காங்கிரஸ் தலைமையிலான திமுக உள்ளிட்ட முக்கியக் கட்சிகளை உள்ளடக்கிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைத்தது.
முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் இடஒதுக்கீடு குறித்து நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஆறு மாதத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மூன்று வருடங்கள் கடந்து விட்டன. முஸ்லிம் இடஒதுக்கீடு குறித்து ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் தனது ஆய்வினை முடிக்கவும் இல்லை, தனது முடிவினை அறிவிக்க வும் இல்லை.
முஸ்லிம்களின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார நிலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதியரசர் ராஜேந்திர சச்சார் தலைமையில் ஓர் உயர்மட்டக் குழுவினை பிரதமர் மன்மோகன்சிங் அமைத்தார். நாடெங்கும் ஆய்வு செய்து சச்சார் குழு வெளியிட்ட அறிக்கை அணுகுண்டுகளாய் இந்திய அரசியல் அரங்கில் வெடித்தது.
ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு மேலாய் இந்தியத் திருநாட்டை திறம்பட நிர்வகித்த இந்த திருச்சமூகம் இன்று பின்தங்கியவர்களிலும் பின்தங்கியோராய் வாழ்ந்து வருவதாக அபாய அறிக்கை வாசித்தது.
கார்கில் முதல் கன்னியாகுமரி வரை வாழும் முஸ்லிம்களின் அவலநிலை இதுதான் என சச்சார் குழு அறைந்து சொல்லி அவலங்களை வெளிச்சப்படுத்திய போது, முஸ்லிம்கள் குறித்து ஆதிக்க சக்திகள் அதுவரை பரப்பிய கற்பிதங்களும் கட்டுக்கதைகளும் அம்பலத்துக்கு வந்தன.
அரசுத் துறையிலும், தனியார் துறையிலும் முஸ்லிம்களின் குறைந்த பிரதிநிதித் துவம் குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தனது வேதனையை வெளிப்படுத்தியிருந்தார். வளர்ச்சியின் கனிகள் முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டும். வளங்களிலும், நலன்களிலும் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்திருந்தார்.
சிறுபான்மையினரின் 15 அம்சத் திட்டமும் பரபரப்பாய் அறிவிக்கப்பட்டன. வசீகர வார்த்தைகள் வாட்டத்தைப் போக்குமா? தவித்த வாய்க்கு தண்ணீர் வேண்டும். பசித்த வயிற்றுக்கு சோறிடல் வேண்டும். உரிமை இழந்தவர்களுக்கு உரிமை வேண்டும்.
அறுபதாண்டுகளுக்கு மேலாக வறண்ட பாலைவனப் பயணத்தை மேற்கொண் டிருந்த இந்திய முஸ்லிம் சமூகத்தின் உரிமை காக்க உத்வேகம் கொண்ட தமுமுக, களமிறங்கியது. மார்ச் 7, 2007 அன்று தலைநகர் டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த முடிவு செய்தது.
தமுமுக தலைமை நிர்வாகிகள் அகில இந்திய அளவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அளவில் முஸ்லிம் சமுதாயத் தலைவர்களை ஒருங்கிணைத்தனர்.
இதற்கு முன்பாக 2004 டிசம்பர் 6 அன்று தலைநகர் டெல்லியில் தமுமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன்விளைவாக ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு தப்பிவிட முயன்ற பாபரி மஸ்ஜித் தகர்ப்பு குற்றவாளிகள் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்பட்டனர்.
இப்போது அகில இந்திய அளவில் இடஒதுக்கீட்டுக்கான போராட்டக் களம் அமைத்து தமிழகத்தின் அனைத்து முஸ்லிம்களுக்கும் தமுமுக அழைப்பு விடுத்தது.
தன்னலமற்ற சேவைகளால் மக்களின் மனதில் இடம்பிடித்த, சரித்திரத்தில் தடம் பதித்த தமுமுகவின் அழைப்பினை ஏற்று தமிழக முஸ்லிம்கள் அணியணியாய் திரண்டனர்.
தமிழக முஸ்லிம் தெருக்களெல்லாம் டெல்லியை நோக்கித் திரும்பின. போராட்டம் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்தே ஓய்வு உறக்கம் அறியாது தமுமுக தொண்டர் கள் களப்பணியாற்றினர். மாநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை தமுமுக சேவைப் படையினரின் போராட்ட அழைப்பு விடுக்கப்பட்டது.
தலைநகர் டெல்லி செல்லும் ரயில்கள் எல்லாம் கறுப்பு வெள்ளைக் கொடிகளை ஏந்தி தமிழ் மணம் கமழ சென்றன.
தமிழகம் டெல்லியை நோக்கி இடம்பெயர்ந்ததோ என ஆச்சரியம் மேலிட டெல்லி ரயில் நிலையம் சமுதாயச் சொந்தங்களால் திக்குமுக்காடியது.
எல்லாம் வல்ல இறைவனின் துணை கொண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்தே தமிழக முஸ்லிம்கள் தலைநகர் படையெடுப்பை நடத்தினர்.
தலைநகர் வந்திறங்கிய தமிழக முஸ்லிம்களை தமுமுக தன்னார்வத் தொண்டர்கள் டெல்லி ரயில் நிலையத்தில் முகமலர்ச்சியுடன் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
தமிழகத்திலிருந்து டெல்லி செல்லும் அனைத்து ரயில்களும் உரிமைப் போராளிகளை சுமந்து வந்தவண்ணம் டெல்லி மாநகரை வந்தடைந்தன. அனைத்து சகோதரர்களுக்கும் கனிவான வரவேற்பு வழங்கப்பட்டது.
அரசியல் கட்சிகளுக்காக கோஷங்கள் எழுப்ப, அரசியல்வாதிகளின் பணத்தில் டெல்லி செல்பவர்கள் உண்டு. ஆனால் இவர்கள் உரிமைப் போராளிகள்.
எந்த அரசியல்வாதிக்காகவும் கோஷம் போட அழைத்து வரப்பட்டவர்கள் அல்ல. தங்களது சொந்த உழைப்பின் ஊதியத்தைக் கொண்டே களம் காண வலம் வருகிறார்கள். ஆயிரம் அலுவல்கள், அடுக்கடுக்கான பணிப்பளுக்கள் என குடும்பத்தோடு நேரம் கழிக்க நேரம் இல்லாது தவிக்கும் இவர்கள்தான் உரிமைகளை வென்றெடுக்க டெல்லி வந்திருக்கிறார்கள். அந்த உணர்வு அவர்களிடம் வெளிப்பட்டது.
அம்பேத்கர் பவன். சமூக நீதிக்கு குரல் கொடுப்பவர்களின் சரணாலயம். ஆயிரக் கணக்கான மக்கள் தங்கும் வசதி இங்குண்டு. ஆயிரக்கணக்கான மக்கள் அணிவகுக்கும் வண்ணம் பிரம்மாண்ட மாநாட்டு அரங்கும் இங்குண்டு. பிரம்மாண்ட உணவு உபசரிப்பு அரங்கம், திமிறித்திரளும் தமிழக மற்றும் பிற மாநில சகோதரர்களுக்கும் அறுசுவை உணவு படைத்து அலுக்காமல் உபசரித்தது.
மார்ச் 6ஆம் தேதி டெல்லி மாநகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜும்மா மஸ்ஜித் முன்பாக உள்ளூர் மக்களின் சார்பாக தமுமுக தலைமையில் டெல்லி பேரணிக்கு ஆதரவாக மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களும் பங்கேற்றார். தலைமைக்கழகப் பேச்சாளர் நவ்ஷாத் அவர்கள் உர்துவில் பேரணியை விளக்கிப் பேசினார்.
2007 மார்ச் 7ஆம் தேதி புதன்கிழமை. அதிகாலை தொழுகைக்குப் பிறகு பேரணி புறப்பாட்டுக்கான பணிகள் துவங்கின.
எறும்புகளும், தேனீக்களும் வெட்கப்படும் வண்ணம் தமுமுக தொண்டர்கள் பம்பரமாய் சுற்றிச் சுழன்றனர்.
இந்திய முஸ்லிம்களது வரலாற்றின் சிறப்புமிகு மற்றொரு அத்தியாயம் அன்று தான் தொடங்கியது.
குளிரில் வெடவெடத்துக் கொண்டிருந்த டெல்லி மாநகர சாலைகள் உரிமைப் போராளிகளின் உணர்ச்சி கோஷங்களை கேட்கத் தயாரானது. 7 மணிக்கு அணிவகுப்பு ஆரம்பமானது. தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளிலிருந்து பேரணி துவங்க இருக்கும் ராம்லீலா மைதானம் நோக்கி அணிவகுத்து வாகனங் களில் புறப்பட்டனர்.
வாகனங்களெல்லாம் கறுப்பு வெள்ளை இரு வண்ணக் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன.
தாய்மார்கள், குழந்தைகள், பெரியவர்கள், சிறுவர் சிறுமியர் என அனைவரும் புத்தெழுச்சியுடன் புறப்பட்ட காட்சி காண்பவர்களை நெகிழ வைத்தது.
கர்நாடகாவிலிருந்து ஃஙஙப, மகாராஷ்ட்ராவிலிருந்து ஙடஓ, கேரளாவிலிருந்து டஉடயைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
கட்டுக்கோப்புக் குலையாத கண்ணியக் கூட்டம். கட்டுக்கோப்பை கட்டிக் காக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தொண்டர் படையினரின் செயல் நேர்த்தியைக் காண முடிந்தது. எங்கள் இதயங்கள் உறுதியானவை. நாளைய தலைமுறையின் வாழ்வுரிமையை உறுதி செய்ய புறப்பட்டுவிட்ட, மனதால் உரமுற்ற வீரச் சகோதரர்களும் விரைந்தனர் ராம்லீலா மைதானம் நோக்கி.
சமுதாய உணர்வு என்ற மின்சாரம் பாய்ச்சப்பட்ட கழக அடலேறுகள் ஆர்த் தெழுந்து வரும் காட்சியை நாம் பார்க்கிறோம். இன்றைய இளைஞர் பட்டாளத் தின் உரிமைப் போர் வெற்றியின் விளைவாக இன்ஷாஅல்லாஹ் உரிமைகளை அனுபவிக்கப் போகும் நாளைய தலைமுறையினர், அணிவகுத்து வரும் கழகக் கண்மணிகள் வாகனங்களில் ஏறுகின்றனர். தமிழகத்திலிருந்து வந்த உரிமைப் போராளிகளை சுமந்து கொண்டு அணிஅணியாய் வாகனங்கள் ராம்லீலா மைதானத்தை நோக்கி சீறின.
பேரணி துவங்குவதற்கு முன்பாக பேரணியை துவக்கி வைக்குமாறு இந்தியாவின் முக்கிய முஸ்லிம் கேந்திரமான ஃபத்தேஹ்பூர் மஸ்ஜிதின் இமாம் முஃப்தி முகர்ரம் அழைக்கப்படுகிறார். முஃப்தி முகர்ரம் அவர்கள் கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். இந்தியத் தலைநகரின் ராம்லீலா மைதானம் தமுமுக தொண்டரணியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டது.
மாவட்ட வாரியாக தமுமுக தொண்டர்கள் அணிவகுத்து உரிமைப் போராட்டத் துக்கு புறப்படத் தயாராயினர். தொண்டரணியினரின் அணிவகுப்புடன் பேரணி புறப்படத் துவங்கியது.
டெல்லி வாழ் மக்களுக்கு இது ஓர் புதுமையான அனுபவம். ஏன் அகில இந்திய ஊடகத்துறையினருக்கும் இது வியப்பூட்டும் பேரணியாக அமைந்திருந்தது.
இந்திய ராணுவ தரைப்படையினரின் அணிவகுப்பை பார்த்திருக்கிறார்கள். வெள்ளுடை அணிந்த இந்திய வான்படையினரின் அணிவகுப்பையும் அவர்கள் பார்த்திருக்கிறார்கள். ஆகாய வண்ணத்தில் சீருடை அணிந்து அணிவகுத்து வரும் இந்தியக் கடற்படையின் அணிவகுப்பையும் பார்த்திருக்கிறார்கள்.
முதன்முறையாக கோவை மாவட்ட தொண்டரணியினர் கறுப்பு வெள்ளை சீருடையுடன் மிடுக்குடன் நடைபோட்ட சமூக நீதிப் படையை முதன்முதலாக டெல்லி மாநகரம் பார்த்தது.
மண்டல் கமிஷனை எதிர்த்து போர்ப் பிரகடனம் செய்த ஆதிக்க சாதியின மாணவர்கள் ஆட்டம் போட்ட அதே டெல்லியில் சமூக நீதிக்காக சமர் புரிந்தனர் சமுதாய சகோதரர்கள்.
டெல்லி லி ஒரு தந்திர பூமி, இந்திர பூமி, மந்திர பூமி என பல்வேறு அரசியல் ஆய்வாளர்களும், ஏராளமான விளக்க உரைகளால் பட்டங்களால் சுட்டிக் காட்டப்பட்ட டெல்லி மாநகரில் தமுமுக நடத்திய பேரணி இதுவரை கூறப்பட்டு வந்த அரசியல் கணக்குகளை மாற்றிப் போட்டது.
சமூக நீதிக்காக உள்ளூர்களில் உணர்ச்சிகரமாக முழங்கியவர்கள் டெல்லியில் சற்று தள்ளியே நிற்க வேண்டிய நிலையில் தமுமுக தனது வீரியமிக்க பேரணியின் மூலம் சமுதாய மக்களைத் திரட்டி சமூக நீதி தளத்தில் இந்திய பூபாகத்தின் முதல் நிலை சக்தி என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்தது.
தமிழகத்தில் மட்டுமே தனது நலப் பணிகளை உரிமைப் போராட்டங்களை முன்னெடுத்திருந்த தமுமுக, அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்காக தனது போர்ப் பிரகடனத்தை துவக்கி விட்டது. நாளை வல்லரசாக மாறப்போகும் இந்தியாவின் எழுச்சிக்கு கட்டியம் கூறும் விதத்தில் தமுமுக பேரணி அமைந்தது.
பேரணி புறப்படத் தொடங்கியதும் பல்லாயிரக்கணக்கான உணர்வாளர்கள் புறப்படத் தொடங்கி விட்டார்கள் என்று மட்டுமா நினைக்கிறீர்கள்... இந்திய அரசியலை அசைத்துப் பார்க்கும் வண்ணம் புதிய அரசியல் அத்தியாயத்தை நோக்கி பயணமும் துவங்கி விட்டது என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கணிப்பு.
பொதுவாக பேரணிகள், ஊர்வலங்கள், புறப்படும் போது புழுதிகள் பறக்கும், தூசு பறக்கும். ஆனால் அங்கு பதவியும் பகட்டும் எங்களுக்கு தூசு என்பதை நிரூபிக்கும் விதமாக தன்னலமற்ற தமுமுக சேவைப் படையினரின் பேரணி அமைந்திருந்தது.
மொத்தத்தில் பேரணியின் தூசு பறக்கவில்லை. ஆனால் சமுதாயத்தில் விரவிக்கி டந்த மாசு பறந்தது, மறைந்தது.
லியோ டால்ஸ்டாய் சாலைக்கு முன்பாக உள்ள சிக்னலில் தொடங்கி பல்வேறு இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. முதலில் தொண்டரணியினர்அணிவகுக்க, தமுமுக தலைமை நிர்வாகிகள், அகில இந்திய முஸ்லிம் தலைவர்கள், அணி நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் என்ற அளவில் பேரணியின் வரிசை அமைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து அன்னையர்களும் குழந்தைகளும் அணி வகுத்தனர். தொடர்ந்து மாவட்ட வாரியாக சேவைப் படையினர் அணிவகுத்து புறப்பட்டனர்.
அயராது, அலட்டாது அட்டகாசமாக புறப்பட்ட பேரணி பல மைல்கள் தூரத்துக்கு நீண்டது. பெருமெடுப்பிலான மக்கள் வெள்ளம் சிறிதும் களைப்பின்றி, அலுப் பின்றி அணிவகுத்து அலையடித்து மேடையை வந்தடைந்தது
தமிழக முஸ்லிம்களின் இதயத் துடிப்பாக, ரத்த ஓட்டமாகத் திகழும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கடந்த 12 ஆண்டுகளாக மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வீரியமிகு போராட்டங்களை நடத்தி வருகிறது.
அரசியல் மற்றும் சமூக தளங்களில் கடினமாக பணியாற்றிய இந்த சேவைப் படையினர் தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறி விட்டனர்.
தளராத உழைப்பு, சலிக்காத தொண்டுள்ளம் கொண்ட தமுமுக தனது சேவைப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், உலகிலேயே முஸ்லிம்கள் இரண்டாவதாக அதிகம் வாழும் இந்தியத் திருநாட்டில் வாழ்ந்துவரும் முஸ்லிம்களின் அவலநிலை குறித்தும், அவர்களது வாழ்வாதாரங்களை மேம்பாடு அடையச் செய்வது குறித்தும் தமுமுக சிந்தித்தது.
தமிழக முஸ்லிம்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் பேரியக்கமாய் விளங்கி வந்த தமுமுக முதன்முறையாக அகில இந்திய அளவில் தனது பார்வையை அழுத்தமாய் பதித்தது.
அனைத்து இந்திய முஸ்லிம்களின் மறுமலர்ச்சிக்காகவும், அவர்களின் உரிமைகளைப் பேணவும் தமுமுக களம் காண முடிவு செய்தது.
2004ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திருமதி. சோனியா காந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இந்திய முஸ்லிம்களிடம் முக்கிய வாக்குறுதிகளை வழங்கி வாக்கு கேட்டது.
அதில் ஒன்று கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் வாழும் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள முஸ்லிம் தனி இடஒதுக்கீடு உரிமையை அனைத்து மாநில முஸ்லிம்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என ஐக்கிய முற்போக்கு கூட்டணி வாக்குறுதி வழங்கியது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வாக்குறுதிகளில் வலு இருந்ததால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வெற்றிக்கு இந்திய முஸ்லிம்கள் தங்கள் வாக்குகளை பெருவாரியாக வழங்க, காங்கிரஸ் தலைமையிலான திமுக உள்ளிட்ட முக்கியக் கட்சிகளை உள்ளடக்கிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைத்தது.
முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் இடஒதுக்கீடு குறித்து நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஆறு மாதத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மூன்று வருடங்கள் கடந்து விட்டன. முஸ்லிம் இடஒதுக்கீடு குறித்து ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் தனது ஆய்வினை முடிக்கவும் இல்லை, தனது முடிவினை அறிவிக்க வும் இல்லை.
முஸ்லிம்களின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார நிலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதியரசர் ராஜேந்திர சச்சார் தலைமையில் ஓர் உயர்மட்டக் குழுவினை பிரதமர் மன்மோகன்சிங் அமைத்தார். நாடெங்கும் ஆய்வு செய்து சச்சார் குழு வெளியிட்ட அறிக்கை அணுகுண்டுகளாய் இந்திய அரசியல் அரங்கில் வெடித்தது.
ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு மேலாய் இந்தியத் திருநாட்டை திறம்பட நிர்வகித்த இந்த திருச்சமூகம் இன்று பின்தங்கியவர்களிலும் பின்தங்கியோராய் வாழ்ந்து வருவதாக அபாய அறிக்கை வாசித்தது.
கார்கில் முதல் கன்னியாகுமரி வரை வாழும் முஸ்லிம்களின் அவலநிலை இதுதான் என சச்சார் குழு அறைந்து சொல்லி அவலங்களை வெளிச்சப்படுத்திய போது, முஸ்லிம்கள் குறித்து ஆதிக்க சக்திகள் அதுவரை பரப்பிய கற்பிதங்களும் கட்டுக்கதைகளும் அம்பலத்துக்கு வந்தன.
அரசுத் துறையிலும், தனியார் துறையிலும் முஸ்லிம்களின் குறைந்த பிரதிநிதித் துவம் குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தனது வேதனையை வெளிப்படுத்தியிருந்தார். வளர்ச்சியின் கனிகள் முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டும். வளங்களிலும், நலன்களிலும் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்திருந்தார்.
சிறுபான்மையினரின் 15 அம்சத் திட்டமும் பரபரப்பாய் அறிவிக்கப்பட்டன. வசீகர வார்த்தைகள் வாட்டத்தைப் போக்குமா? தவித்த வாய்க்கு தண்ணீர் வேண்டும். பசித்த வயிற்றுக்கு சோறிடல் வேண்டும். உரிமை இழந்தவர்களுக்கு உரிமை வேண்டும்.
அறுபதாண்டுகளுக்கு மேலாக வறண்ட பாலைவனப் பயணத்தை மேற்கொண் டிருந்த இந்திய முஸ்லிம் சமூகத்தின் உரிமை காக்க உத்வேகம் கொண்ட தமுமுக, களமிறங்கியது. மார்ச் 7, 2007 அன்று தலைநகர் டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த முடிவு செய்தது.
தமுமுக தலைமை நிர்வாகிகள் அகில இந்திய அளவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அளவில் முஸ்லிம் சமுதாயத் தலைவர்களை ஒருங்கிணைத்தனர்.
இதற்கு முன்பாக 2004 டிசம்பர் 6 அன்று தலைநகர் டெல்லியில் தமுமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன்விளைவாக ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு தப்பிவிட முயன்ற பாபரி மஸ்ஜித் தகர்ப்பு குற்றவாளிகள் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்பட்டனர்.
இப்போது அகில இந்திய அளவில் இடஒதுக்கீட்டுக்கான போராட்டக் களம் அமைத்து தமிழகத்தின் அனைத்து முஸ்லிம்களுக்கும் தமுமுக அழைப்பு விடுத்தது.
தன்னலமற்ற சேவைகளால் மக்களின் மனதில் இடம்பிடித்த, சரித்திரத்தில் தடம் பதித்த தமுமுகவின் அழைப்பினை ஏற்று தமிழக முஸ்லிம்கள் அணியணியாய் திரண்டனர்.
தமிழக முஸ்லிம் தெருக்களெல்லாம் டெல்லியை நோக்கித் திரும்பின. போராட்டம் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்தே ஓய்வு உறக்கம் அறியாது தமுமுக தொண்டர் கள் களப்பணியாற்றினர். மாநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை தமுமுக சேவைப் படையினரின் போராட்ட அழைப்பு விடுக்கப்பட்டது.
தலைநகர் டெல்லி செல்லும் ரயில்கள் எல்லாம் கறுப்பு வெள்ளைக் கொடிகளை ஏந்தி தமிழ் மணம் கமழ சென்றன.
தமிழகம் டெல்லியை நோக்கி இடம்பெயர்ந்ததோ என ஆச்சரியம் மேலிட டெல்லி ரயில் நிலையம் சமுதாயச் சொந்தங்களால் திக்குமுக்காடியது.
எல்லாம் வல்ல இறைவனின் துணை கொண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்தே தமிழக முஸ்லிம்கள் தலைநகர் படையெடுப்பை நடத்தினர்.
தலைநகர் வந்திறங்கிய தமிழக முஸ்லிம்களை தமுமுக தன்னார்வத் தொண்டர்கள் டெல்லி ரயில் நிலையத்தில் முகமலர்ச்சியுடன் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
தமிழகத்திலிருந்து டெல்லி செல்லும் அனைத்து ரயில்களும் உரிமைப் போராளிகளை சுமந்து வந்தவண்ணம் டெல்லி மாநகரை வந்தடைந்தன. அனைத்து சகோதரர்களுக்கும் கனிவான வரவேற்பு வழங்கப்பட்டது.
அரசியல் கட்சிகளுக்காக கோஷங்கள் எழுப்ப, அரசியல்வாதிகளின் பணத்தில் டெல்லி செல்பவர்கள் உண்டு. ஆனால் இவர்கள் உரிமைப் போராளிகள்.
எந்த அரசியல்வாதிக்காகவும் கோஷம் போட அழைத்து வரப்பட்டவர்கள் அல்ல. தங்களது சொந்த உழைப்பின் ஊதியத்தைக் கொண்டே களம் காண வலம் வருகிறார்கள். ஆயிரம் அலுவல்கள், அடுக்கடுக்கான பணிப்பளுக்கள் என குடும்பத்தோடு நேரம் கழிக்க நேரம் இல்லாது தவிக்கும் இவர்கள்தான் உரிமைகளை வென்றெடுக்க டெல்லி வந்திருக்கிறார்கள். அந்த உணர்வு அவர்களிடம் வெளிப்பட்டது.
அம்பேத்கர் பவன். சமூக நீதிக்கு குரல் கொடுப்பவர்களின் சரணாலயம். ஆயிரக் கணக்கான மக்கள் தங்கும் வசதி இங்குண்டு. ஆயிரக்கணக்கான மக்கள் அணிவகுக்கும் வண்ணம் பிரம்மாண்ட மாநாட்டு அரங்கும் இங்குண்டு. பிரம்மாண்ட உணவு உபசரிப்பு அரங்கம், திமிறித்திரளும் தமிழக மற்றும் பிற மாநில சகோதரர்களுக்கும் அறுசுவை உணவு படைத்து அலுக்காமல் உபசரித்தது.
மார்ச் 6ஆம் தேதி டெல்லி மாநகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜும்மா மஸ்ஜித் முன்பாக உள்ளூர் மக்களின் சார்பாக தமுமுக தலைமையில் டெல்லி பேரணிக்கு ஆதரவாக மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களும் பங்கேற்றார். தலைமைக்கழகப் பேச்சாளர் நவ்ஷாத் அவர்கள் உர்துவில் பேரணியை விளக்கிப் பேசினார்.
2007 மார்ச் 7ஆம் தேதி புதன்கிழமை. அதிகாலை தொழுகைக்குப் பிறகு பேரணி புறப்பாட்டுக்கான பணிகள் துவங்கின.
எறும்புகளும், தேனீக்களும் வெட்கப்படும் வண்ணம் தமுமுக தொண்டர்கள் பம்பரமாய் சுற்றிச் சுழன்றனர்.
இந்திய முஸ்லிம்களது வரலாற்றின் சிறப்புமிகு மற்றொரு அத்தியாயம் அன்று தான் தொடங்கியது.
குளிரில் வெடவெடத்துக் கொண்டிருந்த டெல்லி மாநகர சாலைகள் உரிமைப் போராளிகளின் உணர்ச்சி கோஷங்களை கேட்கத் தயாரானது. 7 மணிக்கு அணிவகுப்பு ஆரம்பமானது. தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளிலிருந்து பேரணி துவங்க இருக்கும் ராம்லீலா மைதானம் நோக்கி அணிவகுத்து வாகனங் களில் புறப்பட்டனர்.
வாகனங்களெல்லாம் கறுப்பு வெள்ளை இரு வண்ணக் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன.
தாய்மார்கள், குழந்தைகள், பெரியவர்கள், சிறுவர் சிறுமியர் என அனைவரும் புத்தெழுச்சியுடன் புறப்பட்ட காட்சி காண்பவர்களை நெகிழ வைத்தது.
கர்நாடகாவிலிருந்து ஃஙஙப, மகாராஷ்ட்ராவிலிருந்து ஙடஓ, கேரளாவிலிருந்து டஉடயைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
கட்டுக்கோப்புக் குலையாத கண்ணியக் கூட்டம். கட்டுக்கோப்பை கட்டிக் காக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தொண்டர் படையினரின் செயல் நேர்த்தியைக் காண முடிந்தது. எங்கள் இதயங்கள் உறுதியானவை. நாளைய தலைமுறையின் வாழ்வுரிமையை உறுதி செய்ய புறப்பட்டுவிட்ட, மனதால் உரமுற்ற வீரச் சகோதரர்களும் விரைந்தனர் ராம்லீலா மைதானம் நோக்கி.
சமுதாய உணர்வு என்ற மின்சாரம் பாய்ச்சப்பட்ட கழக அடலேறுகள் ஆர்த் தெழுந்து வரும் காட்சியை நாம் பார்க்கிறோம். இன்றைய இளைஞர் பட்டாளத் தின் உரிமைப் போர் வெற்றியின் விளைவாக இன்ஷாஅல்லாஹ் உரிமைகளை அனுபவிக்கப் போகும் நாளைய தலைமுறையினர், அணிவகுத்து வரும் கழகக் கண்மணிகள் வாகனங்களில் ஏறுகின்றனர். தமிழகத்திலிருந்து வந்த உரிமைப் போராளிகளை சுமந்து கொண்டு அணிஅணியாய் வாகனங்கள் ராம்லீலா மைதானத்தை நோக்கி சீறின.
பேரணி துவங்குவதற்கு முன்பாக பேரணியை துவக்கி வைக்குமாறு இந்தியாவின் முக்கிய முஸ்லிம் கேந்திரமான ஃபத்தேஹ்பூர் மஸ்ஜிதின் இமாம் முஃப்தி முகர்ரம் அழைக்கப்படுகிறார். முஃப்தி முகர்ரம் அவர்கள் கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். இந்தியத் தலைநகரின் ராம்லீலா மைதானம் தமுமுக தொண்டரணியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டது.
மாவட்ட வாரியாக தமுமுக தொண்டர்கள் அணிவகுத்து உரிமைப் போராட்டத் துக்கு புறப்படத் தயாராயினர். தொண்டரணியினரின் அணிவகுப்புடன் பேரணி புறப்படத் துவங்கியது.
டெல்லி வாழ் மக்களுக்கு இது ஓர் புதுமையான அனுபவம். ஏன் அகில இந்திய ஊடகத்துறையினருக்கும் இது வியப்பூட்டும் பேரணியாக அமைந்திருந்தது.
இந்திய ராணுவ தரைப்படையினரின் அணிவகுப்பை பார்த்திருக்கிறார்கள். வெள்ளுடை அணிந்த இந்திய வான்படையினரின் அணிவகுப்பையும் அவர்கள் பார்த்திருக்கிறார்கள். ஆகாய வண்ணத்தில் சீருடை அணிந்து அணிவகுத்து வரும் இந்தியக் கடற்படையின் அணிவகுப்பையும் பார்த்திருக்கிறார்கள்.
முதன்முறையாக கோவை மாவட்ட தொண்டரணியினர் கறுப்பு வெள்ளை சீருடையுடன் மிடுக்குடன் நடைபோட்ட சமூக நீதிப் படையை முதன்முதலாக டெல்லி மாநகரம் பார்த்தது.
மண்டல் கமிஷனை எதிர்த்து போர்ப் பிரகடனம் செய்த ஆதிக்க சாதியின மாணவர்கள் ஆட்டம் போட்ட அதே டெல்லியில் சமூக நீதிக்காக சமர் புரிந்தனர் சமுதாய சகோதரர்கள்.
டெல்லி லி ஒரு தந்திர பூமி, இந்திர பூமி, மந்திர பூமி என பல்வேறு அரசியல் ஆய்வாளர்களும், ஏராளமான விளக்க உரைகளால் பட்டங்களால் சுட்டிக் காட்டப்பட்ட டெல்லி மாநகரில் தமுமுக நடத்திய பேரணி இதுவரை கூறப்பட்டு வந்த அரசியல் கணக்குகளை மாற்றிப் போட்டது.
சமூக நீதிக்காக உள்ளூர்களில் உணர்ச்சிகரமாக முழங்கியவர்கள் டெல்லியில் சற்று தள்ளியே நிற்க வேண்டிய நிலையில் தமுமுக தனது வீரியமிக்க பேரணியின் மூலம் சமுதாய மக்களைத் திரட்டி சமூக நீதி தளத்தில் இந்திய பூபாகத்தின் முதல் நிலை சக்தி என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்தது.
தமிழகத்தில் மட்டுமே தனது நலப் பணிகளை உரிமைப் போராட்டங்களை முன்னெடுத்திருந்த தமுமுக, அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்காக தனது போர்ப் பிரகடனத்தை துவக்கி விட்டது. நாளை வல்லரசாக மாறப்போகும் இந்தியாவின் எழுச்சிக்கு கட்டியம் கூறும் விதத்தில் தமுமுக பேரணி அமைந்தது.
பேரணி புறப்படத் தொடங்கியதும் பல்லாயிரக்கணக்கான உணர்வாளர்கள் புறப்படத் தொடங்கி விட்டார்கள் என்று மட்டுமா நினைக்கிறீர்கள்... இந்திய அரசியலை அசைத்துப் பார்க்கும் வண்ணம் புதிய அரசியல் அத்தியாயத்தை நோக்கி பயணமும் துவங்கி விட்டது என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கணிப்பு.
பொதுவாக பேரணிகள், ஊர்வலங்கள், புறப்படும் போது புழுதிகள் பறக்கும், தூசு பறக்கும். ஆனால் அங்கு பதவியும் பகட்டும் எங்களுக்கு தூசு என்பதை நிரூபிக்கும் விதமாக தன்னலமற்ற தமுமுக சேவைப் படையினரின் பேரணி அமைந்திருந்தது.
மொத்தத்தில் பேரணியின் தூசு பறக்கவில்லை. ஆனால் சமுதாயத்தில் விரவிக்கி டந்த மாசு பறந்தது, மறைந்தது.
லியோ டால்ஸ்டாய் சாலைக்கு முன்பாக உள்ள சிக்னலில் தொடங்கி பல்வேறு இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. முதலில் தொண்டரணியினர்அணிவகுக்க, தமுமுக தலைமை நிர்வாகிகள், அகில இந்திய முஸ்லிம் தலைவர்கள், அணி நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் என்ற அளவில் பேரணியின் வரிசை அமைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து அன்னையர்களும் குழந்தைகளும் அணி வகுத்தனர். தொடர்ந்து மாவட்ட வாரியாக சேவைப் படையினர் அணிவகுத்து புறப்பட்டனர்.
அயராது, அலட்டாது அட்டகாசமாக புறப்பட்ட பேரணி பல மைல்கள் தூரத்துக்கு நீண்டது. பெருமெடுப்பிலான மக்கள் வெள்ளம் சிறிதும் களைப்பின்றி, அலுப் பின்றி அணிவகுத்து அலையடித்து மேடையை வந்தடைந்தது
டெல்லியை திணறடித்த சமூக நீதிப் படை
தமிழக முஸ்லிம்களின் இதயத் துடிப்பாக, ரத்த ஓட்டமாகத் திகழும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கடந்த 12 ஆண்டுகளாக மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வீரியமிகு போராட்டங்களை நடத்தி வருகிறது.
அரசியல் மற்றும் சமூக தளங்களில் கடினமாக பணியாற்றிய இந்த சேவைப் படையினர் தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறி விட்டனர்.
தளராத உழைப்பு, சலிக்காத தொண்டுள்ளம் கொண்ட தமுமுக தனது சேவைப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், உலகிலேயே முஸ்லிம்கள் இரண்டாவதாக அதிகம் வாழும் இந்தியத் திருநாட்டில் வாழ்ந்துவரும் முஸ்லிம்களின் அவலநிலை குறித்தும், அவர்களது வாழ்வாதாரங்களை மேம்பாடு அடையச் செய்வது குறித்தும் தமுமுக சிந்தித்தது.
தமிழக முஸ்லிம்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் பேரியக்கமாய் விளங்கி வந்த தமுமுக முதன்முறையாக அகில இந்திய அளவில் தனது பார்வையை அழுத்தமாய் பதித்தது.
அனைத்து இந்திய முஸ்லிம்களின் மறுமலர்ச்சிக்காகவும், அவர்களின் உரிமைகளைப் பேணவும் தமுமுக களம் காண முடிவு செய்தது.
2004ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திருமதி. சோனியா காந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இந்திய முஸ்லிம்களிடம் முக்கிய வாக்குறுதிகளை வழங்கி வாக்கு கேட்டது.
அதில் ஒன்று கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் வாழும் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள முஸ்லிம் தனி இடஒதுக்கீடு உரிமையை அனைத்து மாநில முஸ்லிம்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என ஐக்கிய முற்போக்கு கூட்டணி வாக்குறுதி வழங்கியது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வாக்குறுதிகளில் வலு இருந்ததால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வெற்றிக்கு இந்திய முஸ்லிம்கள் தங்கள் வாக்குகளை பெருவாரியாக வழங்க, காங்கிரஸ் தலைமையிலான திமுக உள்ளிட்ட முக்கியக் கட்சிகளை உள்ளடக்கிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைத்தது.
முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் இடஒதுக்கீடு குறித்து நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஆறு மாதத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மூன்று வருடங்கள் கடந்து விட்டன. முஸ்லிம் இடஒதுக்கீடு குறித்து ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் தனது ஆய்வினை முடிக்கவும் இல்லை, தனது முடிவினை அறிவிக்க வும் இல்லை.
முஸ்லிம்களின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார நிலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதியரசர் ராஜேந்திர சச்சார் தலைமையில் ஓர் உயர்மட்டக் குழுவினை பிரதமர் மன்மோகன்சிங் அமைத்தார். நாடெங்கும் ஆய்வு செய்து சச்சார் குழு வெளியிட்ட அறிக்கை அணுகுண்டுகளாய் இந்திய அரசியல் அரங்கில் வெடித்தது.
ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு மேலாய் இந்தியத் திருநாட்டை திறம்பட நிர்வகித்த இந்த திருச்சமூகம் இன்று பின்தங்கியவர்களிலும் பின்தங்கியோராய் வாழ்ந்து வருவதாக அபாய அறிக்கை வாசித்தது.
கார்கில் முதல் கன்னியாகுமரி வரை வாழும் முஸ்லிம்களின் அவலநிலை இதுதான் என சச்சார் குழு அறைந்து சொல்லி அவலங்களை வெளிச்சப்படுத்திய போது, முஸ்லிம்கள் குறித்து ஆதிக்க சக்திகள் அதுவரை பரப்பிய கற்பிதங்களும் கட்டுக்கதைகளும் அம்பலத்துக்கு வந்தன.
அரசுத் துறையிலும், தனியார் துறையிலும் முஸ்லிம்களின் குறைந்த பிரதிநிதித் துவம் குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தனது வேதனையை வெளிப்படுத்தியிருந்தார். வளர்ச்சியின் கனிகள் முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டும். வளங்களிலும், நலன்களிலும் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்திருந்தார்.
சிறுபான்மையினரின் 15 அம்சத் திட்டமும் பரபரப்பாய் அறிவிக்கப்பட்டன. வசீகர வார்த்தைகள் வாட்டத்தைப் போக்குமா? தவித்த வாய்க்கு தண்ணீர் வேண்டும். பசித்த வயிற்றுக்கு சோறிடல் வேண்டும். உரிமை இழந்தவர்களுக்கு உரிமை வேண்டும்.
அறுபதாண்டுகளுக்கு மேலாக வறண்ட பாலைவனப் பயணத்தை மேற்கொண் டிருந்த இந்திய முஸ்லிம் சமூகத்தின் உரிமை காக்க உத்வேகம் கொண்ட தமுமுக, களமிறங்கியது. மார்ச் 7, 2007 அன்று தலைநகர் டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த முடிவு செய்தது.
தமுமுக தலைமை நிர்வாகிகள் அகில இந்திய அளவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அளவில் முஸ்லிம் சமுதாயத் தலைவர்களை ஒருங்கிணைத்தனர்.
இதற்கு முன்பாக 2004 டிசம்பர் 6 அன்று தலைநகர் டெல்லியில் தமுமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன்விளைவாக ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு தப்பிவிட முயன்ற பாபரி மஸ்ஜித் தகர்ப்பு குற்றவாளிகள் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்பட்டனர்.
இப்போது அகில இந்திய அளவில் இடஒதுக்கீட்டுக்கான போராட்டக் களம் அமைத்து தமிழகத்தின் அனைத்து முஸ்லிம்களுக்கும் தமுமுக அழைப்பு விடுத்தது.
தன்னலமற்ற சேவைகளால் மக்களின் மனதில் இடம்பிடித்த, சரித்திரத்தில் தடம் பதித்த தமுமுகவின் அழைப்பினை ஏற்று தமிழக முஸ்லிம்கள் அணியணியாய் திரண்டனர்.
தமிழக முஸ்லிம் தெருக்களெல்லாம் டெல்லியை நோக்கித் திரும்பின. போராட்டம் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்தே ஓய்வு உறக்கம் அறியாது தமுமுக தொண்டர் கள் களப்பணியாற்றினர். மாநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை தமுமுக சேவைப் படையினரின் போராட்ட அழைப்பு விடுக்கப்பட்டது.
தலைநகர் டெல்லி செல்லும் ரயில்கள் எல்லாம் கறுப்பு வெள்ளைக் கொடிகளை ஏந்தி தமிழ் மணம் கமழ சென்றன.
தமிழகம் டெல்லியை நோக்கி இடம்பெயர்ந்ததோ என ஆச்சரியம் மேலிட டெல்லி ரயில் நிலையம் சமுதாயச் சொந்தங்களால் திக்குமுக்காடியது.
எல்லாம் வல்ல இறைவனின் துணை கொண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்தே தமிழக முஸ்லிம்கள் தலைநகர் படையெடுப்பை நடத்தினர்.
தலைநகர் வந்திறங்கிய தமிழக முஸ்லிம்களை தமுமுக தன்னார்வத் தொண்டர்கள் டெல்லி ரயில் நிலையத்தில் முகமலர்ச்சியுடன் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
தமிழகத்திலிருந்து டெல்லி செல்லும் அனைத்து ரயில்களும் உரிமைப் போராளிகளை சுமந்து வந்தவண்ணம் டெல்லி மாநகரை வந்தடைந்தன. அனைத்து சகோதரர்களுக்கும் கனிவான வரவேற்பு வழங்கப்பட்டது.
அரசியல் கட்சிகளுக்காக கோஷங்கள் எழுப்ப, அரசியல்வாதிகளின் பணத்தில் டெல்லி செல்பவர்கள் உண்டு. ஆனால் இவர்கள் உரிமைப் போராளிகள்.
எந்த அரசியல்வாதிக்காகவும் கோஷம் போட அழைத்து வரப்பட்டவர்கள் அல்ல. தங்களது சொந்த உழைப்பின் ஊதியத்தைக் கொண்டே களம் காண வலம் வருகிறார்கள். ஆயிரம் அலுவல்கள், அடுக்கடுக்கான பணிப்பளுக்கள் என குடும்பத்தோடு நேரம் கழிக்க நேரம் இல்லாது தவிக்கும் இவர்கள்தான் உரிமைகளை வென்றெடுக்க டெல்லி வந்திருக்கிறார்கள். அந்த உணர்வு அவர்களிடம் வெளிப்பட்டது.
அம்பேத்கர் பவன். சமூக நீதிக்கு குரல் கொடுப்பவர்களின் சரணாலயம். ஆயிரக் கணக்கான மக்கள் தங்கும் வசதி இங்குண்டு. ஆயிரக்கணக்கான மக்கள் அணிவகுக்கும் வண்ணம் பிரம்மாண்ட மாநாட்டு அரங்கும் இங்குண்டு. பிரம்மாண்ட உணவு உபசரிப்பு அரங்கம், திமிறித்திரளும் தமிழக மற்றும் பிற மாநில சகோதரர்களுக்கும் அறுசுவை உணவு படைத்து அலுக்காமல் உபசரித்தது.
மார்ச் 6ஆம் தேதி டெல்லி மாநகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜும்மா மஸ்ஜித் முன்பாக உள்ளூர் மக்களின் சார்பாக தமுமுக தலைமையில் டெல்லி பேரணிக்கு ஆதரவாக மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களும் பங்கேற்றார். தலைமைக்கழகப் பேச்சாளர் நவ்ஷாத் அவர்கள் உர்துவில் பேரணியை விளக்கிப் பேசினார்.
2007 மார்ச் 7ஆம் தேதி புதன்கிழமை. அதிகாலை தொழுகைக்குப் பிறகு பேரணி புறப்பாட்டுக்கான பணிகள் துவங்கின.
எறும்புகளும், தேனீக்களும் வெட்கப்படும் வண்ணம் தமுமுக தொண்டர்கள் பம்பரமாய் சுற்றிச் சுழன்றனர்.
இந்திய முஸ்லிம்களது வரலாற்றின் சிறப்புமிகு மற்றொரு அத்தியாயம் அன்று தான் தொடங்கியது.
குளிரில் வெடவெடத்துக் கொண்டிருந்த டெல்லி மாநகர சாலைகள் உரிமைப் போராளிகளின் உணர்ச்சி கோஷங்களை கேட்கத் தயாரானது. 7 மணிக்கு அணிவகுப்பு ஆரம்பமானது. தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளிலிருந்து பேரணி துவங்க இருக்கும் ராம்லீலா மைதானம் நோக்கி அணிவகுத்து வாகனங் களில் புறப்பட்டனர்.
வாகனங்களெல்லாம் கறுப்பு வெள்ளை இரு வண்ணக் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன.
தாய்மார்கள், குழந்தைகள், பெரியவர்கள், சிறுவர் சிறுமியர் என அனைவரும் புத்தெழுச்சியுடன் புறப்பட்ட காட்சி காண்பவர்களை நெகிழ வைத்தது.
கர்நாடகாவிலிருந்து ஃஙஙப, மகாராஷ்ட்ராவிலிருந்து ஙடஓ, கேரளாவிலிருந்து டஉடயைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
கட்டுக்கோப்புக் குலையாத கண்ணியக் கூட்டம். கட்டுக்கோப்பை கட்டிக் காக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தொண்டர் படையினரின் செயல் நேர்த்தியைக் காண முடிந்தது. எங்கள் இதயங்கள் உறுதியானவை. நாளைய தலைமுறையின் வாழ்வுரிமையை உறுதி செய்ய புறப்பட்டுவிட்ட, மனதால் உரமுற்ற வீரச் சகோதரர்களும் விரைந்தனர் ராம்லீலா மைதானம் நோக்கி.
சமுதாய உணர்வு என்ற மின்சாரம் பாய்ச்சப்பட்ட கழக அடலேறுகள் ஆர்த் தெழுந்து வரும் காட்சியை நாம் பார்க்கிறோம். இன்றைய இளைஞர் பட்டாளத் தின் உரிமைப் போர் வெற்றியின் விளைவாக இன்ஷாஅல்லாஹ் உரிமைகளை அனுபவிக்கப் போகும் நாளைய தலைமுறையினர், அணிவகுத்து வரும் கழகக் கண்மணிகள் வாகனங்களில் ஏறுகின்றனர். தமிழகத்திலிருந்து வந்த உரிமைப் போராளிகளை சுமந்து கொண்டு அணிஅணியாய் வாகனங்கள் ராம்லீலா மைதானத்தை நோக்கி சீறின.
பேரணி துவங்குவதற்கு முன்பாக பேரணியை துவக்கி வைக்குமாறு இந்தியாவின் முக்கிய முஸ்லிம் கேந்திரமான ஃபத்தேஹ்பூர் மஸ்ஜிதின் இமாம் முஃப்தி முகர்ரம் அழைக்கப்படுகிறார். முஃப்தி முகர்ரம் அவர்கள் கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். இந்தியத் தலைநகரின் ராம்லீலா மைதானம் தமுமுக தொண்டரணியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டது.
மாவட்ட வாரியாக தமுமுக தொண்டர்கள் அணிவகுத்து உரிமைப் போராட்டத் துக்கு புறப்படத் தயாராயினர். தொண்டரணியினரின் அணிவகுப்புடன் பேரணி புறப்படத் துவங்கியது.
டெல்லி வாழ் மக்களுக்கு இது ஓர் புதுமையான அனுபவம். ஏன் அகில இந்திய ஊடகத்துறையினருக்கும் இது வியப்பூட்டும் பேரணியாக அமைந்திருந்தது.
இந்திய ராணுவ தரைப்படையினரின் அணிவகுப்பை பார்த்திருக்கிறார்கள். வெள்ளுடை அணிந்த இந்திய வான்படையினரின் அணிவகுப்பையும் அவர்கள் பார்த்திருக்கிறார்கள். ஆகாய வண்ணத்தில் சீருடை அணிந்து அணிவகுத்து வரும் இந்தியக் கடற்படையின் அணிவகுப்பையும் பார்த்திருக்கிறார்கள்.
முதன்முறையாக கோவை மாவட்ட தொண்டரணியினர் கறுப்பு வெள்ளை சீருடையுடன் மிடுக்குடன் நடைபோட்ட சமூக நீதிப் படையை முதன்முதலாக டெல்லி மாநகரம் பார்த்தது.
மண்டல் கமிஷனை எதிர்த்து போர்ப் பிரகடனம் செய்த ஆதிக்க சாதியின மாணவர்கள் ஆட்டம் போட்ட அதே டெல்லியில் சமூக நீதிக்காக சமர் புரிந்தனர் சமுதாய சகோதரர்கள்.
டெல்லி லி ஒரு தந்திர பூமி, இந்திர பூமி, மந்திர பூமி என பல்வேறு அரசியல் ஆய்வாளர்களும், ஏராளமான விளக்க உரைகளால் பட்டங்களால் சுட்டிக் காட்டப்பட்ட டெல்லி மாநகரில் தமுமுக நடத்திய பேரணி இதுவரை கூறப்பட்டு வந்த அரசியல் கணக்குகளை மாற்றிப் போட்டது.
சமூக நீதிக்காக உள்ளூர்களில் உணர்ச்சிகரமாக முழங்கியவர்கள் டெல்லியில் சற்று தள்ளியே நிற்க வேண்டிய நிலையில் தமுமுக தனது வீரியமிக்க பேரணியின் மூலம் சமுதாய மக்களைத் திரட்டி சமூக நீதி தளத்தில் இந்திய பூபாகத்தின் முதல் நிலை சக்தி என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்தது.
தமிழகத்தில் மட்டுமே தனது நலப் பணிகளை உரிமைப் போராட்டங்களை முன்னெடுத்திருந்த தமுமுக, அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்காக தனது போர்ப் பிரகடனத்தை துவக்கி விட்டது. நாளை வல்லரசாக மாறப்போகும் இந்தியாவின் எழுச்சிக்கு கட்டியம் கூறும் விதத்தில் தமுமுக பேரணி அமைந்தது.
பேரணி புறப்படத் தொடங்கியதும் பல்லாயிரக்கணக்கான உணர்வாளர்கள் புறப்படத் தொடங்கி விட்டார்கள் என்று மட்டுமா நினைக்கிறீர்கள்... இந்திய அரசியலை அசைத்துப் பார்க்கும் வண்ணம் புதிய அரசியல் அத்தியாயத்தை நோக்கி பயணமும் துவங்கி விட்டது என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கணிப்பு.
பொதுவாக பேரணிகள், ஊர்வலங்கள், புறப்படும் போது புழுதிகள் பறக்கும், தூசு பறக்கும். ஆனால் அங்கு பதவியும் பகட்டும் எங்களுக்கு தூசு என்பதை நிரூபிக்கும் விதமாக தன்னலமற்ற தமுமுக சேவைப் படையினரின் பேரணி அமைந்திருந்தது.
மொத்தத்தில் பேரணியின் தூசு பறக்கவில்லை. ஆனால் சமுதாயத்தில் விரவிக்கி டந்த மாசு பறந்தது, மறைந்தது.
லியோ டால்ஸ்டாய் சாலைக்கு முன்பாக உள்ள சிக்னலில் தொடங்கி பல்வேறு இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. முதலில் தொண்டரணியினர்அணிவகுக்க, தமுமுக தலைமை நிர்வாகிகள், அகில இந்திய முஸ்லிம் தலைவர்கள், அணி நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் என்ற அளவில் பேரணியின் வரிசை அமைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து அன்னையர்களும் குழந்தைகளும் அணி வகுத்தனர். தொடர்ந்து மாவட்ட வாரியாக சேவைப் படையினர் அணிவகுத்து புறப்பட்டனர்.
அயராது, அலட்டாது அட்டகாசமாக புறப்பட்ட பேரணி பல மைல்கள் தூரத்துக்கு நீண்டது. பெருமெடுப்பிலான மக்கள் வெள்ளம் சிறிதும் களைப்பின்றி, அலுப் பின்றி அணிவகுத்து அலையடித்து மேடையை வந்தடைந்தது
தமிழக முஸ்லிம்களின் இதயத் துடிப்பாக, ரத்த ஓட்டமாகத் திகழும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கடந்த 12 ஆண்டுகளாக மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வீரியமிகு போராட்டங்களை நடத்தி வருகிறது.
அரசியல் மற்றும் சமூக தளங்களில் கடினமாக பணியாற்றிய இந்த சேவைப் படையினர் தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறி விட்டனர்.
தளராத உழைப்பு, சலிக்காத தொண்டுள்ளம் கொண்ட தமுமுக தனது சேவைப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், உலகிலேயே முஸ்லிம்கள் இரண்டாவதாக அதிகம் வாழும் இந்தியத் திருநாட்டில் வாழ்ந்துவரும் முஸ்லிம்களின் அவலநிலை குறித்தும், அவர்களது வாழ்வாதாரங்களை மேம்பாடு அடையச் செய்வது குறித்தும் தமுமுக சிந்தித்தது.
தமிழக முஸ்லிம்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் பேரியக்கமாய் விளங்கி வந்த தமுமுக முதன்முறையாக அகில இந்திய அளவில் தனது பார்வையை அழுத்தமாய் பதித்தது.
அனைத்து இந்திய முஸ்லிம்களின் மறுமலர்ச்சிக்காகவும், அவர்களின் உரிமைகளைப் பேணவும் தமுமுக களம் காண முடிவு செய்தது.
2004ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திருமதி. சோனியா காந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இந்திய முஸ்லிம்களிடம் முக்கிய வாக்குறுதிகளை வழங்கி வாக்கு கேட்டது.
அதில் ஒன்று கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் வாழும் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள முஸ்லிம் தனி இடஒதுக்கீடு உரிமையை அனைத்து மாநில முஸ்லிம்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என ஐக்கிய முற்போக்கு கூட்டணி வாக்குறுதி வழங்கியது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வாக்குறுதிகளில் வலு இருந்ததால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வெற்றிக்கு இந்திய முஸ்லிம்கள் தங்கள் வாக்குகளை பெருவாரியாக வழங்க, காங்கிரஸ் தலைமையிலான திமுக உள்ளிட்ட முக்கியக் கட்சிகளை உள்ளடக்கிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைத்தது.
முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் இடஒதுக்கீடு குறித்து நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஆறு மாதத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மூன்று வருடங்கள் கடந்து விட்டன. முஸ்லிம் இடஒதுக்கீடு குறித்து ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் தனது ஆய்வினை முடிக்கவும் இல்லை, தனது முடிவினை அறிவிக்க வும் இல்லை.
முஸ்லிம்களின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார நிலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதியரசர் ராஜேந்திர சச்சார் தலைமையில் ஓர் உயர்மட்டக் குழுவினை பிரதமர் மன்மோகன்சிங் அமைத்தார். நாடெங்கும் ஆய்வு செய்து சச்சார் குழு வெளியிட்ட அறிக்கை அணுகுண்டுகளாய் இந்திய அரசியல் அரங்கில் வெடித்தது.
ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு மேலாய் இந்தியத் திருநாட்டை திறம்பட நிர்வகித்த இந்த திருச்சமூகம் இன்று பின்தங்கியவர்களிலும் பின்தங்கியோராய் வாழ்ந்து வருவதாக அபாய அறிக்கை வாசித்தது.
கார்கில் முதல் கன்னியாகுமரி வரை வாழும் முஸ்லிம்களின் அவலநிலை இதுதான் என சச்சார் குழு அறைந்து சொல்லி அவலங்களை வெளிச்சப்படுத்திய போது, முஸ்லிம்கள் குறித்து ஆதிக்க சக்திகள் அதுவரை பரப்பிய கற்பிதங்களும் கட்டுக்கதைகளும் அம்பலத்துக்கு வந்தன.
அரசுத் துறையிலும், தனியார் துறையிலும் முஸ்லிம்களின் குறைந்த பிரதிநிதித் துவம் குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தனது வேதனையை வெளிப்படுத்தியிருந்தார். வளர்ச்சியின் கனிகள் முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டும். வளங்களிலும், நலன்களிலும் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்திருந்தார்.
சிறுபான்மையினரின் 15 அம்சத் திட்டமும் பரபரப்பாய் அறிவிக்கப்பட்டன. வசீகர வார்த்தைகள் வாட்டத்தைப் போக்குமா? தவித்த வாய்க்கு தண்ணீர் வேண்டும். பசித்த வயிற்றுக்கு சோறிடல் வேண்டும். உரிமை இழந்தவர்களுக்கு உரிமை வேண்டும்.
அறுபதாண்டுகளுக்கு மேலாக வறண்ட பாலைவனப் பயணத்தை மேற்கொண் டிருந்த இந்திய முஸ்லிம் சமூகத்தின் உரிமை காக்க உத்வேகம் கொண்ட தமுமுக, களமிறங்கியது. மார்ச் 7, 2007 அன்று தலைநகர் டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த முடிவு செய்தது.
தமுமுக தலைமை நிர்வாகிகள் அகில இந்திய அளவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அளவில் முஸ்லிம் சமுதாயத் தலைவர்களை ஒருங்கிணைத்தனர்.
இதற்கு முன்பாக 2004 டிசம்பர் 6 அன்று தலைநகர் டெல்லியில் தமுமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன்விளைவாக ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு தப்பிவிட முயன்ற பாபரி மஸ்ஜித் தகர்ப்பு குற்றவாளிகள் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்பட்டனர்.
இப்போது அகில இந்திய அளவில் இடஒதுக்கீட்டுக்கான போராட்டக் களம் அமைத்து தமிழகத்தின் அனைத்து முஸ்லிம்களுக்கும் தமுமுக அழைப்பு விடுத்தது.
தன்னலமற்ற சேவைகளால் மக்களின் மனதில் இடம்பிடித்த, சரித்திரத்தில் தடம் பதித்த தமுமுகவின் அழைப்பினை ஏற்று தமிழக முஸ்லிம்கள் அணியணியாய் திரண்டனர்.
தமிழக முஸ்லிம் தெருக்களெல்லாம் டெல்லியை நோக்கித் திரும்பின. போராட்டம் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்தே ஓய்வு உறக்கம் அறியாது தமுமுக தொண்டர் கள் களப்பணியாற்றினர். மாநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை தமுமுக சேவைப் படையினரின் போராட்ட அழைப்பு விடுக்கப்பட்டது.
தலைநகர் டெல்லி செல்லும் ரயில்கள் எல்லாம் கறுப்பு வெள்ளைக் கொடிகளை ஏந்தி தமிழ் மணம் கமழ சென்றன.
தமிழகம் டெல்லியை நோக்கி இடம்பெயர்ந்ததோ என ஆச்சரியம் மேலிட டெல்லி ரயில் நிலையம் சமுதாயச் சொந்தங்களால் திக்குமுக்காடியது.
எல்லாம் வல்ல இறைவனின் துணை கொண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்தே தமிழக முஸ்லிம்கள் தலைநகர் படையெடுப்பை நடத்தினர்.
தலைநகர் வந்திறங்கிய தமிழக முஸ்லிம்களை தமுமுக தன்னார்வத் தொண்டர்கள் டெல்லி ரயில் நிலையத்தில் முகமலர்ச்சியுடன் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
தமிழகத்திலிருந்து டெல்லி செல்லும் அனைத்து ரயில்களும் உரிமைப் போராளிகளை சுமந்து வந்தவண்ணம் டெல்லி மாநகரை வந்தடைந்தன. அனைத்து சகோதரர்களுக்கும் கனிவான வரவேற்பு வழங்கப்பட்டது.
அரசியல் கட்சிகளுக்காக கோஷங்கள் எழுப்ப, அரசியல்வாதிகளின் பணத்தில் டெல்லி செல்பவர்கள் உண்டு. ஆனால் இவர்கள் உரிமைப் போராளிகள்.
எந்த அரசியல்வாதிக்காகவும் கோஷம் போட அழைத்து வரப்பட்டவர்கள் அல்ல. தங்களது சொந்த உழைப்பின் ஊதியத்தைக் கொண்டே களம் காண வலம் வருகிறார்கள். ஆயிரம் அலுவல்கள், அடுக்கடுக்கான பணிப்பளுக்கள் என குடும்பத்தோடு நேரம் கழிக்க நேரம் இல்லாது தவிக்கும் இவர்கள்தான் உரிமைகளை வென்றெடுக்க டெல்லி வந்திருக்கிறார்கள். அந்த உணர்வு அவர்களிடம் வெளிப்பட்டது.
அம்பேத்கர் பவன். சமூக நீதிக்கு குரல் கொடுப்பவர்களின் சரணாலயம். ஆயிரக் கணக்கான மக்கள் தங்கும் வசதி இங்குண்டு. ஆயிரக்கணக்கான மக்கள் அணிவகுக்கும் வண்ணம் பிரம்மாண்ட மாநாட்டு அரங்கும் இங்குண்டு. பிரம்மாண்ட உணவு உபசரிப்பு அரங்கம், திமிறித்திரளும் தமிழக மற்றும் பிற மாநில சகோதரர்களுக்கும் அறுசுவை உணவு படைத்து அலுக்காமல் உபசரித்தது.
மார்ச் 6ஆம் தேதி டெல்லி மாநகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜும்மா மஸ்ஜித் முன்பாக உள்ளூர் மக்களின் சார்பாக தமுமுக தலைமையில் டெல்லி பேரணிக்கு ஆதரவாக மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களும் பங்கேற்றார். தலைமைக்கழகப் பேச்சாளர் நவ்ஷாத் அவர்கள் உர்துவில் பேரணியை விளக்கிப் பேசினார்.
2007 மார்ச் 7ஆம் தேதி புதன்கிழமை. அதிகாலை தொழுகைக்குப் பிறகு பேரணி புறப்பாட்டுக்கான பணிகள் துவங்கின.
எறும்புகளும், தேனீக்களும் வெட்கப்படும் வண்ணம் தமுமுக தொண்டர்கள் பம்பரமாய் சுற்றிச் சுழன்றனர்.
இந்திய முஸ்லிம்களது வரலாற்றின் சிறப்புமிகு மற்றொரு அத்தியாயம் அன்று தான் தொடங்கியது.
குளிரில் வெடவெடத்துக் கொண்டிருந்த டெல்லி மாநகர சாலைகள் உரிமைப் போராளிகளின் உணர்ச்சி கோஷங்களை கேட்கத் தயாரானது. 7 மணிக்கு அணிவகுப்பு ஆரம்பமானது. தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளிலிருந்து பேரணி துவங்க இருக்கும் ராம்லீலா மைதானம் நோக்கி அணிவகுத்து வாகனங் களில் புறப்பட்டனர்.
வாகனங்களெல்லாம் கறுப்பு வெள்ளை இரு வண்ணக் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன.
தாய்மார்கள், குழந்தைகள், பெரியவர்கள், சிறுவர் சிறுமியர் என அனைவரும் புத்தெழுச்சியுடன் புறப்பட்ட காட்சி காண்பவர்களை நெகிழ வைத்தது.
கர்நாடகாவிலிருந்து ஃஙஙப, மகாராஷ்ட்ராவிலிருந்து ஙடஓ, கேரளாவிலிருந்து டஉடயைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
கட்டுக்கோப்புக் குலையாத கண்ணியக் கூட்டம். கட்டுக்கோப்பை கட்டிக் காக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தொண்டர் படையினரின் செயல் நேர்த்தியைக் காண முடிந்தது. எங்கள் இதயங்கள் உறுதியானவை. நாளைய தலைமுறையின் வாழ்வுரிமையை உறுதி செய்ய புறப்பட்டுவிட்ட, மனதால் உரமுற்ற வீரச் சகோதரர்களும் விரைந்தனர் ராம்லீலா மைதானம் நோக்கி.
சமுதாய உணர்வு என்ற மின்சாரம் பாய்ச்சப்பட்ட கழக அடலேறுகள் ஆர்த் தெழுந்து வரும் காட்சியை நாம் பார்க்கிறோம். இன்றைய இளைஞர் பட்டாளத் தின் உரிமைப் போர் வெற்றியின் விளைவாக இன்ஷாஅல்லாஹ் உரிமைகளை அனுபவிக்கப் போகும் நாளைய தலைமுறையினர், அணிவகுத்து வரும் கழகக் கண்மணிகள் வாகனங்களில் ஏறுகின்றனர். தமிழகத்திலிருந்து வந்த உரிமைப் போராளிகளை சுமந்து கொண்டு அணிஅணியாய் வாகனங்கள் ராம்லீலா மைதானத்தை நோக்கி சீறின.
பேரணி துவங்குவதற்கு முன்பாக பேரணியை துவக்கி வைக்குமாறு இந்தியாவின் முக்கிய முஸ்லிம் கேந்திரமான ஃபத்தேஹ்பூர் மஸ்ஜிதின் இமாம் முஃப்தி முகர்ரம் அழைக்கப்படுகிறார். முஃப்தி முகர்ரம் அவர்கள் கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். இந்தியத் தலைநகரின் ராம்லீலா மைதானம் தமுமுக தொண்டரணியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டது.
மாவட்ட வாரியாக தமுமுக தொண்டர்கள் அணிவகுத்து உரிமைப் போராட்டத் துக்கு புறப்படத் தயாராயினர். தொண்டரணியினரின் அணிவகுப்புடன் பேரணி புறப்படத் துவங்கியது.
டெல்லி வாழ் மக்களுக்கு இது ஓர் புதுமையான அனுபவம். ஏன் அகில இந்திய ஊடகத்துறையினருக்கும் இது வியப்பூட்டும் பேரணியாக அமைந்திருந்தது.
இந்திய ராணுவ தரைப்படையினரின் அணிவகுப்பை பார்த்திருக்கிறார்கள். வெள்ளுடை அணிந்த இந்திய வான்படையினரின் அணிவகுப்பையும் அவர்கள் பார்த்திருக்கிறார்கள். ஆகாய வண்ணத்தில் சீருடை அணிந்து அணிவகுத்து வரும் இந்தியக் கடற்படையின் அணிவகுப்பையும் பார்த்திருக்கிறார்கள்.
முதன்முறையாக கோவை மாவட்ட தொண்டரணியினர் கறுப்பு வெள்ளை சீருடையுடன் மிடுக்குடன் நடைபோட்ட சமூக நீதிப் படையை முதன்முதலாக டெல்லி மாநகரம் பார்த்தது.
மண்டல் கமிஷனை எதிர்த்து போர்ப் பிரகடனம் செய்த ஆதிக்க சாதியின மாணவர்கள் ஆட்டம் போட்ட அதே டெல்லியில் சமூக நீதிக்காக சமர் புரிந்தனர் சமுதாய சகோதரர்கள்.
டெல்லி லி ஒரு தந்திர பூமி, இந்திர பூமி, மந்திர பூமி என பல்வேறு அரசியல் ஆய்வாளர்களும், ஏராளமான விளக்க உரைகளால் பட்டங்களால் சுட்டிக் காட்டப்பட்ட டெல்லி மாநகரில் தமுமுக நடத்திய பேரணி இதுவரை கூறப்பட்டு வந்த அரசியல் கணக்குகளை மாற்றிப் போட்டது.
சமூக நீதிக்காக உள்ளூர்களில் உணர்ச்சிகரமாக முழங்கியவர்கள் டெல்லியில் சற்று தள்ளியே நிற்க வேண்டிய நிலையில் தமுமுக தனது வீரியமிக்க பேரணியின் மூலம் சமுதாய மக்களைத் திரட்டி சமூக நீதி தளத்தில் இந்திய பூபாகத்தின் முதல் நிலை சக்தி என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்தது.
தமிழகத்தில் மட்டுமே தனது நலப் பணிகளை உரிமைப் போராட்டங்களை முன்னெடுத்திருந்த தமுமுக, அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்காக தனது போர்ப் பிரகடனத்தை துவக்கி விட்டது. நாளை வல்லரசாக மாறப்போகும் இந்தியாவின் எழுச்சிக்கு கட்டியம் கூறும் விதத்தில் தமுமுக பேரணி அமைந்தது.
பேரணி புறப்படத் தொடங்கியதும் பல்லாயிரக்கணக்கான உணர்வாளர்கள் புறப்படத் தொடங்கி விட்டார்கள் என்று மட்டுமா நினைக்கிறீர்கள்... இந்திய அரசியலை அசைத்துப் பார்க்கும் வண்ணம் புதிய அரசியல் அத்தியாயத்தை நோக்கி பயணமும் துவங்கி விட்டது என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கணிப்பு.
பொதுவாக பேரணிகள், ஊர்வலங்கள், புறப்படும் போது புழுதிகள் பறக்கும், தூசு பறக்கும். ஆனால் அங்கு பதவியும் பகட்டும் எங்களுக்கு தூசு என்பதை நிரூபிக்கும் விதமாக தன்னலமற்ற தமுமுக சேவைப் படையினரின் பேரணி அமைந்திருந்தது.
மொத்தத்தில் பேரணியின் தூசு பறக்கவில்லை. ஆனால் சமுதாயத்தில் விரவிக்கி டந்த மாசு பறந்தது, மறைந்தது.
லியோ டால்ஸ்டாய் சாலைக்கு முன்பாக உள்ள சிக்னலில் தொடங்கி பல்வேறு இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. முதலில் தொண்டரணியினர்அணிவகுக்க, தமுமுக தலைமை நிர்வாகிகள், அகில இந்திய முஸ்லிம் தலைவர்கள், அணி நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் என்ற அளவில் பேரணியின் வரிசை அமைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து அன்னையர்களும் குழந்தைகளும் அணி வகுத்தனர். தொடர்ந்து மாவட்ட வாரியாக சேவைப் படையினர் அணிவகுத்து புறப்பட்டனர்.
அயராது, அலட்டாது அட்டகாசமாக புறப்பட்ட பேரணி பல மைல்கள் தூரத்துக்கு நீண்டது. பெருமெடுப்பிலான மக்கள் வெள்ளம் சிறிதும் களைப்பின்றி, அலுப் பின்றி அணிவகுத்து அலையடித்து மேடையை வந்தடைந்தது
Wednesday, May 16, 2007
தலித் தலைமை ஆசிரியை அலுவலகத்தை பசு மூத்திரம் கொண்டு சுத்தம் (?) செய்த ஆதிக்க சாதி ஆணவம்
தேசத்தின் உழைக்கும் மக்களை சுரண்டிக் கொழுத்த கும்பல் ஒவ்வொரு நொடியும் தனது ஆதிக்கசாதி ஆணவத்தை வெளிப்படுத்திக் கொண்டே வருகிறது.
கிராம பள்ளிக்கூடம் ஒன்றில் தலைமை ஆசிரியையாக பணியாற்றிய டெம்பர்கர் அவ்விடத்தை விட்டு பணிமாறுதல் பெற்றார். அவரைத் தொடர்ந்து புதிய தலைமையாசிரியையாக கிராமப் பள்ளிக் கூடத்தில் நியமிக்கப்பட்ட தலைமை யாசிரியை தனது பணியில் அமர்த்து வதற்கு முன்பாக செய்த செயல் சாதிய ஆணவத்தின் உச்சத்தை எடுத்துக்காட்டு வதாகவும், மனிதகுல ஆர்வலர்களின் நரம்புகளை புடைக்கச் செய்யும் விதமாகவும் இருந்தது.
மகராஷ்ட்ரா மாநிலத்தின் பாந்த்ரா பகுதிக்கு 9 கிலோ மீட்டர் தூரத்தில் சுரெவடா என்ற கிராமத்தில் உள்ள ஜில்லா பரிஷத் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக டெம்புர்கர் பணியாற்றி வந்தார். இந்தப் பள்ளிக் கூடத்தில் 210 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் 20 மாணவர்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் கள்.
திலோத்தமா டெம்புர்கர் தலைமை ஆசிரியையாக இருந்தவரை அவருடன் பணி யாற்றிய ஆதிக்க சாதி ஆசிரியைகள் அவரை வெறுத்து ஒதுக்கினர். அங்கு படித்த ஆதிக்க சாதி மாணவர்களும் அவரை வெறுத்து ஒதுக்கினர்.
தலைமை ஆசிரியை டெம்புர்கர் வேலை மாற்றல் வாங்கி அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பொறுப்பை ஷரத் கைட்டடே என்பவரிடம் இம்மாத துவக்கத்தில் வழங்கினார். புதிய தலைமை ஆசிரியராக அவர் பொறுப்பேற்ற உடன் செய்த காரியம் என்ன தெரியுமா? பள்ளிக்கூடத்தை சுத்தப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
மாதவி ரவுட் என்ற ஆசிரியை மூலம் சிறப்பு பூஜை புனஸ்காரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஆதிக்க சாதியினர் மிகப் புனிதமாகக் கருதும்(!) பசு மூத்திரம் வகுப்பறைகளிலும் பள்ளிக்கூடத்தின் அலுவலக அறைகளிலும் தெளிக்கப்பட்டன.
பள்ளி இறுதித் தேர்வுகள் துவங்கும் முன்பு வகுப்புகளில் புனித நீர்(?) தெளிக்கப் பட்டது.
பூஜை செய்து கொண்டே ஆசிரியை ரவுட் தலித் மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் அறைக்குள் நுழைந்தார் தலித் மாணவர்கள் அனைவரும் இடத்தை விட்டு எழும்புமாறு கோரப்பட்டனர். அவர்களுக்கும் பசு மூத்திரம் தெளிக்கப்பட்டது. அவர்கள் தூய்மையாக்கப்பட்டனர்(!)
பசு மூத்திரத்தால் தூய்மைப்படுத்தும் தகவல் நாடெங்கும் பரவி பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
பள்ளிக்கூட நிர்வாகம் துறை சார்ந்த நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது. காவல் துறையினரின் விசாரணை வளையத்திற்குள் ஆதிக்க சாதி தலைமை ஆசிரியர் மாட்டியிருக்கிறார்.
சமூக அவலங்களின் தலைமைப் பீடமான ஆதிக்க சாதியினர் தங்களைத் தூய்மைப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு உழைக்கும் மக்களை தலித் சமூகத் தினரை அவமானப்படுத்தியுள்ளனர்.
பசு மூத்திரத்துக்கு வழங்கும் மரியாதையைக் கூட மனிதர்களுக்கு வழங்க மறுக்கும் இந்த ஆணவக் கூட்டத்தை எதை தெளித்து சுத்தப்படுத்துவது?
கிராம பள்ளிக்கூடம் ஒன்றில் தலைமை ஆசிரியையாக பணியாற்றிய டெம்பர்கர் அவ்விடத்தை விட்டு பணிமாறுதல் பெற்றார். அவரைத் தொடர்ந்து புதிய தலைமையாசிரியையாக கிராமப் பள்ளிக் கூடத்தில் நியமிக்கப்பட்ட தலைமை யாசிரியை தனது பணியில் அமர்த்து வதற்கு முன்பாக செய்த செயல் சாதிய ஆணவத்தின் உச்சத்தை எடுத்துக்காட்டு வதாகவும், மனிதகுல ஆர்வலர்களின் நரம்புகளை புடைக்கச் செய்யும் விதமாகவும் இருந்தது.
மகராஷ்ட்ரா மாநிலத்தின் பாந்த்ரா பகுதிக்கு 9 கிலோ மீட்டர் தூரத்தில் சுரெவடா என்ற கிராமத்தில் உள்ள ஜில்லா பரிஷத் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக டெம்புர்கர் பணியாற்றி வந்தார். இந்தப் பள்ளிக் கூடத்தில் 210 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் 20 மாணவர்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் கள்.
திலோத்தமா டெம்புர்கர் தலைமை ஆசிரியையாக இருந்தவரை அவருடன் பணி யாற்றிய ஆதிக்க சாதி ஆசிரியைகள் அவரை வெறுத்து ஒதுக்கினர். அங்கு படித்த ஆதிக்க சாதி மாணவர்களும் அவரை வெறுத்து ஒதுக்கினர்.
தலைமை ஆசிரியை டெம்புர்கர் வேலை மாற்றல் வாங்கி அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பொறுப்பை ஷரத் கைட்டடே என்பவரிடம் இம்மாத துவக்கத்தில் வழங்கினார். புதிய தலைமை ஆசிரியராக அவர் பொறுப்பேற்ற உடன் செய்த காரியம் என்ன தெரியுமா? பள்ளிக்கூடத்தை சுத்தப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
மாதவி ரவுட் என்ற ஆசிரியை மூலம் சிறப்பு பூஜை புனஸ்காரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஆதிக்க சாதியினர் மிகப் புனிதமாகக் கருதும்(!) பசு மூத்திரம் வகுப்பறைகளிலும் பள்ளிக்கூடத்தின் அலுவலக அறைகளிலும் தெளிக்கப்பட்டன.
பள்ளி இறுதித் தேர்வுகள் துவங்கும் முன்பு வகுப்புகளில் புனித நீர்(?) தெளிக்கப் பட்டது.
பூஜை செய்து கொண்டே ஆசிரியை ரவுட் தலித் மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் அறைக்குள் நுழைந்தார் தலித் மாணவர்கள் அனைவரும் இடத்தை விட்டு எழும்புமாறு கோரப்பட்டனர். அவர்களுக்கும் பசு மூத்திரம் தெளிக்கப்பட்டது. அவர்கள் தூய்மையாக்கப்பட்டனர்(!)
பசு மூத்திரத்தால் தூய்மைப்படுத்தும் தகவல் நாடெங்கும் பரவி பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
பள்ளிக்கூட நிர்வாகம் துறை சார்ந்த நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது. காவல் துறையினரின் விசாரணை வளையத்திற்குள் ஆதிக்க சாதி தலைமை ஆசிரியர் மாட்டியிருக்கிறார்.
சமூக அவலங்களின் தலைமைப் பீடமான ஆதிக்க சாதியினர் தங்களைத் தூய்மைப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு உழைக்கும் மக்களை தலித் சமூகத் தினரை அவமானப்படுத்தியுள்ளனர்.
பசு மூத்திரத்துக்கு வழங்கும் மரியாதையைக் கூட மனிதர்களுக்கு வழங்க மறுக்கும் இந்த ஆணவக் கூட்டத்தை எதை தெளித்து சுத்தப்படுத்துவது?
Subscribe to:
Posts (Atom)
