Monday, September 10, 2007

இடஒதுக்கீடா கேட்கிறீர்கள்...

இடஒதுக்கீடா கேட்கிறீர்கள்... குண்டுவெடிப்பை எதிர்கொள்ள தயாராகுங்கள்ஹிந்துத்துவ இயக்கத்திடமிருந்து வந்த மிரட்டல் கடிதம் எங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் அதில் முஸ்லிம்கள் மீது மட்டுமே பழிசுமத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. சற்றும் அறிவுக்குப் பொருந்தாத முறையில் பள்ளிவாசல்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு களுக்கு கூட முஸ்லிம்களை குற்றம்சாட்டும் போக்கு தொடர்கிறது. இதில் தீவிரவாதிகளைப் பிடிப்பது, தண்டிப்பது என்ற முக்கிய நோக்கங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு முஸ்லிம்கள் மீது குற்றம்சாட்டுவது முக்கிய குறிக்கோளாகப் போய்விட்டது. ஹிந்து பயங்கரவாத இயக்கங்கள் மீது எந்த விசாரணையும் இதுதொடர்பாக எழுப்பப் படுவதில்லை. எந்த ஹிந்துத்துவ தீவிரவாதியும் விசாரிக்கப்படுவதில்லையே ஏன் என்ற கேள்வி நடுநிலையாளர்களின் மத்தியில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
பார்பானியில் உள்ள முஹம்மதி பள்ளிவாசல் குண்டுவெடிப்பின் முக்கியக் குற்றவாளியான சஞ்சய் என்பவன் யார்? எந்த இயக்கத்தைச் சேர்ந்தவன்? நான்டெட்டில் ஆர்எஸ்எஸ்காரர் ஒருவரின் வீட்டில் ஒட்டுத்தாடியுடன் லுங்கி, குர்தா மற்றும் பைஜாமாக்கள் ஒளித்து வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்த விசாரணையின் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லையே ஏன்?
ஹைதராபாத் மக்கள் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த உடனேயே ஷஹீத் பிலால் என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக காவல்துறை தெரிவித்தது. அதோடு மகாராஷ்டிர மாநிலத்தின் ஜால்னா மாவட்டத்திலுள்ள சோஹப் ஜாகிர்தார் என்பவரைப் பிடித்து சிறையிலடைத்தது. இவ்வாறு முஸ்லிம்கள் மீது கெடுபிடி காட்டும் காவல்துறை, ஹிந்துத்துவ பயங்கரவாத அமைப்புகளின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கங்களின் மீது சந்தேகத்தின் சிறிய சாயல்கூட படாதவாறு கவனமாக காவல்துறை செயல்படு வதாலேயே அவர்கள் எத்தகைய பயங்கரவாதச் செயல்களையும் செய்ய துணிந்து விட்டதாக சமூகநீதி ஆர்வலர்கள் சந்தேகம் எழுப்புகிறார்கள்.
ஆந்திராவில் இயங்கும் மூவ்மென்ட் ஃபார் பீஸ் அன்ட் ஜஸ்டிஸ் (ஙடஓ) என்ற முஸ்லிம் அமைப்புக்கு தர்மரக்ஷா என்ற ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கம் மிரட்டல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. சச்சார் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றக் கோரி ஹைதராபாத் இந்திரா பூங்காவில் ஙடஓ பேரணி ஒன்றை நடத்தியது. இவ்வமைப்புக்கு தர்மரக்ஷா என்ற ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கத்தின் தளபதி என தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் வி.சேகர் என்பவர் மிரட்டல் கடிதத்தை எழுதியுள்ளார்.
அந்த மிரட்டல் கடிதத்தில், ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்கு எதிரான யுத்தம் தொடங்கிவிட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹைதராபாத் குண்டுவெடிப்புகள், இடஒதுக்கீடு கேட்பவர்களுக்கான அன்பளிப்பு என்ற தலைப்புடன் தொடங்குகிறது.
எங்கெல்லாம் தீமைகள்(!) வளர்கிறதோ, தவறுகள்(!) ஊக்கமளிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் அதனை அழிக்க வருவேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன் ராமாயணத்தின் நான்கு சுலோகங்களையும் குறிப்பிட்டிருக்கிறார். தர்மாரக்ஷா என்ற இயக்கத்தினை சேர்ந்தவர்கள் தாய்நாட்டின் ஆயுதங்களாகவும், ஆபரணங்களாகவும் உள்ளனர் என தனக்குத் தானே பெருமை யடித்துக் கொள்கிறது. அந்தக் கடிதம் முஸ்லிம்களை அழித்தொழிக்க வேண்டும் என்பதோடு அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் குட்டி அரசியல்வாதிகள், போலி மதச்சார்பின்மைவாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரையும் ஹிந்துக்கள் அல்லாத அனைவரையும் ஒழித்துக் கட்டுவோம், அதற்கான போரை அறிவிக்கிறோம் என்றும் அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.
இதுகுறித்து இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது நமது உளவுத்துறையின் பரிதாப நிலையைக் கட்டுவதாக மில்லி கெஜட் பத்திரிகை குறிப்பிடுகிறது. முஸ்லிம்கள் குறித்து கட்டுக்கதைகள் வெளியிடும் பத்திரிகைகள் கூட ஹிந்து பயங்கரவாத இயக்கம் ஒன்றின் மிரட்டல் கடிதம் குறித்த செய்தியை வெளியிடவில்லை.
யாருக்கு இடஒதுக்கீடு வேண்டுமோ அவர்கள் குண்டுவெடிப்பை சந்திக்கத் தயாராகுங்கள் என்று மிரட்டல் விடுத்துள்ள இந்தக் கடிதம் குறித்து இன்னமும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? இது எத்தகைய கடிதம் என்பது குறித்து ஆய்வு செய்ய நாம் விரும்பவில்லை. துணிச்சலே இல்லாத சில்லறைப் பேர்வழிகளின் மொட்டைக் கடிதமாகக் கூட இருக்கலாம் என காவல்துறை கண்டுகொள்ளாமல் இருந்திருக் கலாம். ஆனால் இம்மாதிரியான ஒரு மிரட்டல் கடிதத்தை முஸ்லிம் ஒருவர் அனுப்பி யிருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும். அவருக்கு சர்வதேச அளவில் தீவிரவாத தொடர்பு இருப்பதாக கதையளந்திருப்பார்கள்.
போகட்டும். சில வாரங்களுக்கு முன்பு அனுப்பப்பட்ட இந்த மிரட்டல் கடிதத்தை முக்கியமில்லாத ஒன்றாக ஆந்திர மாநில மற்றும் மத்திய புலனாய்வுத்துறை எண்ணி யிருக்கலாம். தற்போது மீண்டும் ஒரு குண்டுவெடிப்பை சதிகாரர்கள் நிகழ்த்தி யுள்ளதால் இந்த சதியின் பின்னணியில் இந்த 'மிரட்டல் கடித' ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் உள்ளனரா என்பது குறித்து துரிதமாக புலனாய்வு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதே நாட்டு மக்களின் வேண்டுகோளாகும்

Sunday, September 2, 2007

சச்சார் குழு பரிந்துரைகள் செயல் வடிவம் பெற்றது.

சச்சார் குழு பரிந்துரைகள் செயல் வடிவம் பெற்றது.
சச்சார் குழு பரிந்துரைக்கான செயல் திட்டங்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளது. அரசுப் பணிகளில் முஸ்லிம்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் உருவாக்கப்படும் என்றும் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் போதிய அளவு இடம் வழங்காததை தவிர்க்க உயர்நிலைக் குழு ஒன்று உருவாக்கப்படும் என்றும் மக்களவையில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் அப்துர் ரஹ்மான் அந்துலே தெரிவித்திருக்கிறார்.
முஸ்லிம்களின் கல்வி, சமூகம் மற்றும் பொருளாதாரநிலை குறித்து ஆய்வு செய்த நீதிபதி ராஜிந்தர் சச்சார் தலைமையிலான உயர் மட்டக்குழு தனது அறிக்கையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அமைச்சரவையில் தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய 15 அம்ச செயல் திட்டத்தை மத்திய அரசுக்கு சச்சார் குழு தெரிவித்தது. இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்த சிறுழுôன்மையினர் நலத்துறை அமைச்சர் அந்துலே இது ஒரு சரித்திர சிறப்பு மிக்க அறிக்கை என்றும் அதை தாக்கல் செய்யும் இந்த நேரம் வரலாற்று சிறப்பு மிக்க தருணம் என்று அவர் குறிப்பிட்டார். அந்த அறிக்கையில் அரசுத்துறை, பொதுத்துறை நிறுவனங்கள் பொதுத்துறை வங்கிகள் ஆகியவற்றில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க ஏற்கெனவே தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் மற்றும் ஆட்சி முறையில் முஸ்லிம்களுக்குப் போதிய பங்கு வழங்கப்படாதது தொடர்பாக சச்சார் குழு கவலை தெரிவித்திருப்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் அந்துலே அந்தக் குறைபாடுகளைக் களைய உயர்நிலைக்குழு அமைக்கப்பட்ருப்பதாக தெரிவித்தார்.
சச்சார்குழு அறிக்கையில் கூறப்பட்டிருப்தைப் போல அக்குழு தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்யும். முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் தொகுதிகள் தலித்களுக்கு ஒதுக்கீடு செய்யாமல் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க இக்குழு பார்த்துக் கொள்ளும். இதன் மூலம் அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவதில் உள்ள குறைபாடுகள் களையப்படும் என்றும் அமைச்சர் அப்துர்ரஹ்ôன் அந்துலே கூறினார்.
முஸ்லிம்கள் அதிகம் வாழும் 90 மாவட்டங்களில் அடிப்படை வசதிகளையும், வேலை வாய்ப்பையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் 338 நகரங்களில் கட்டமைப்பு வசதிகளில் உள்ளக் குறைபாடுகளைக் களைவதும் அவர்களுக்குப் பொருளாதார வாய்ப்புகளை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அந்துலே தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களுக்காக மூன்று கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மவ்லானா ஆசாத் கல்வி அறக்கட்டளைக்கான மூலநிதி அதிகரிக்கப்படும். முஸ்லிம்களுக்கு தொழிற் பயிற்சி வழங்குதல் மற்றும் அவர்களுக்கு எளிதாகக் கடன் கிடைக்கச் செய்தல் ஆகியவற்றுக்கான விரிவாகத் திட்டத்தை உருவாக்கவும் அதைச் செயல்படுத்தி கண்காணிக்கவும் அமைச்சர்கள் குழு அமைக்கப்படும் என்றும் அந்துலே தெரிவிக்கிறார்.
முஸ்லிம் பெண்கள் உயர்கல்வி படிப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தேவையான இடங்களில் மகளிர் கல்விக் கூடங்கள் நிறுவப்படும். முஸ்லிம்கள் குறிப்பிட்ட அளவில் வாழும் பகுதிகளில் கஸ்தூரிபா காந்தி மழலையர் பள்ளிகள் திறக்கப்படும். முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இடைநிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளைத் திறக்க முன்னுரிமை அளிக்கப்படும். அந்தப் பகுதிகளில் சிறப்பு எழுத்தறிவு இயக்கம் நடத்தப்படும்.
முஸ்லிம்களுக்கு வங்கிக்கடன் வழங்குவதில் முன்னுரிமை வழங்குவதற்கு வசதியாக முஸ்லிம்கள் நிறைந்த பகுதிகளில் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகள் திறக்கப்படும்.
மதரஸாக் கல்வியை நவீனப்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்டும். மேலும் அவற்றில் உயர்கல்வி கற்பிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உர்து மொழி பிராந்திய மொழியாக அறிவிக்கப்பட்டு அதில் கல்வி கற்பிக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.மேலும் முஸ்லிம்களின் உடல்நலன் மற்றும் குடும்ப நிலை குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்துலே கூறினார்.
வக்ஃபு சொத்துக்களை பாதுகாக்கவும், அதன் மூலம் கிடைக்கும் வருவாயை உரிய முறையில் செலவிடவும் பொருத்தமான அமைப்பு உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.முஸ்லிம்களின் அவலநிலையை அகற்ற சமவாய்ப்பு ஆணையம் அமைக்கப்படும் என்று மேலும் அமைச்சர் உறுதி அளித்தார்

Friday, August 31, 2007

ஹைதராபாத் குண்டுவெடிப்பு
சூழ்ச்சியின் பின்னணி
ஹைதராபாத் நகரில் மக்கள் அதிகம் கூடும் லும்பினி பார்க் மற்றும் கோகுல்சாட் என்ற உணவகத்திலும் நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். குண்டுவெடிப்பு நடந்த பகுதி களில் இருந்து தடயங்களை சேகரித்த போது நியோஜெல்லி90 என்ற அமோனியம் நைட்ரோ ரசாயனம் கலந்த வெடிகுண்டு மருந்து பயன்படுத்தப்பட்டிருப் பதாக காவல்துறை கூறுகிறது.
இந்த சம்பவத்தில் அந்நிய நாட்டு தீவிரவாத சக்திகளின் கைவரிசை இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப் படுவார்கள் என இந்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் அறிவித்திருக்கிறார். ''மீண்டும் பொடா சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே தீவிரவாதத்தை ஒழிக்க முடியும்'' என குண்டு வெடிப்பு சம்பவ இடத்தைப் பார்வையிட வந்த அத்வானி வழக்கம்போல தெரிவித்திருக் கிறார்.
இந்த குண்டுவெடிப்பில் முஹம்மது அலி என்ற 6 வயது சிறுவன், அமீர் என்ற 8 வயது சிறுவன் மற்றும் மூன்று பெண்கள் உட்பட 11 முஸ்லிம்களும் பலியாகி உள்ளனர். மகாராஷ்டிரா வின் அஹமது நகர் மாவட்டத் தில் அமிருத் வாகினி பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மூன்று பேராசிரியர்களும் ஏழு மாணவர் களும் இச்சமயத்தில் கொல்லப் பட்டுள்ளனர். நாட்டையே உலுக்கிய இந்த குண்டுவெடிப்பில் ரஹீமுன்னிஸா பேகம் (48), முஹம்மது வாஹித் அலி (21), அஹ்யா அப்துல் காதர் (17), அக்ரமுல்லாஹ்கான் (22), அஹ்மது முஹினுத்தீன் (45), முஹம்மது சலீம் (47), ஃபரீதா நாஸ் (35), முஹம்மது அலி (6), அமீர் (8), இப்ராஹிம்கான் (43), மற்றும் இர்ஷாத் அஹ்மத் (19) ஆகியோர் பலியாகி உள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பில் ஒரு குடும்பமே கூண்டோடு பலியான பரிதாபச் சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
கோகுல் சாட் பண்டார் என்ற துரித உணவகத்தில் முஹம்மது சலீமின் குடும்பம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது நிகழ்ந்த குண்டுவெடிப்பில், அவரும் அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்களும் பலியாகி விட்டனர். ஹுமாயுன் நகர் என்ற பகுதியில் கோல்கொண்டா அடுக்குமாடி குடியிருப்பில் சலீமின் குடும்பம் வசித்து வந்துள்ளது.
சிதறிய சலீம் குடும்பத்தினரின் உடல்களைப் பார்த்து கோல் கொண்டா குடியிருப்புவாசிகள் கதறியது நெஞ்சைப் பிழியும் காட்சியாக இருந்தது.''ஹைதராபாத் நகரம் பாதுகாப்பு இல்லாத இடமாக மாறிவிட்டதே'' என்று ஒரு பெண் கூடியிருந்த செய்தியாளர்களைப் பார்த்து கதறினார்.
குண்டுவெடிப்பு குறித்த செய்தி கிடைத்ததும் சலீமின் சகோதரர் சமீர், அவரைத் தொடர்பு கொள்ள முயன்றிருக்கிறார். செல்பேசி அழைப்புக்கு பதில் வராததால் ஒவ்வொரு மருத்துவ மனையாகச் சென்று பார்த்திருக் கிறார். இறுதியில் உஸ்மானியா மருத்துவமனையில் அந்தக் குடும்பமே உடல் சிதறி இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்.''இந்த படுபாதகச் செயலை செய்தவர் யாராக இருந்தாலும் அவர்களை இழுத்து வந்து பொது இடத்தில் தூக்கிலிட்டுக் கொல்ல வேண்டும்'' என பலியானவர் களின் உறவினர்கள் குமுறலுடன் கூறினர்.
''பயங்கரவாதிகள், மனித நேயத்திற்கும் மதங்களுக்கும் எதிரானவர்கள்; இவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்'' என ஆவேசமாகக் குறிப்பிட்டார் அஸதுல்லாஹ் கான். இவர் இந்த குண்டுவெடிப் பில் தனது ஒரே மகனான அக்ரமுல்லாகானை பறிகொடுத் தவர். அம்பர்பேட் மையவாடியில் தனது ஒரே மகனை அடக்கம் செய்துவிட்டு அவர் பயங்கரவாதி களுக்கு எதிராக முழக்கமிட்டார். அந்தக் காட்சி கூடியிருந்தவர் களை உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஆழ்த்தியது.
''பயங்கரவாதிகள் மனிதகுலத்திற்கு எதிரானவர்கள் அவர்கள் ஹிந்துக்கள். முஸ்லிம் கள் என வேறுபாடு பார்க்காமல் அனைவரையும் கொன்று குவிப்பவர்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது ''என்கிறார் ஃபர்ஹா ஃபரூக்கி என்ற இளம்பெண் அதிர்ச்சி விலகாமல்.
இது மிகவும் கோழைத் தனமான செயல். குற்றவாளிகள் கண்டறியப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதேநேரம் விசாரணைகள் வெளிப்படையாகவும் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறியும் வகையிலும் இருக்க வேண்டும் என தமுமுக தெரிவித்துள்ளது.
பயங்கரவாதிகளின் இலக்காக ஆந்திர மாநிலம், குறிப்பாக ஹைதராபாத் நகரம் ஏன் குறிவைக்கப்படுகிறது என்பதற்கு நடுநிலையாளர்கள் சில திடுக் கிடும் காரணங்களைக் கூறுகிறார் கள்.
நடுநிலையாளர்களும், சமூக ஆர்வலர்களும் ஆந்திர மாநிலப் பகுதியை சூழ்ச்சி வலையில் சிக்கவைக்கும் சதிகளுக்கான காரணங்கள் பற்றி கீழ்க்கண்ட வாறு பட்டியலிடுகிறார்கள்.
1. ஹைதராபாத் அதிநவீன தொழில்நுட்ப நகராக விஸ்வ ரூபம் எடுத்து வருகிறது. இது நம்நாட்டின் வளர்ச்சியைப் பிடிக்காத சக்திகளின் கண்களை உறுத்துகிறது.
2. ஹைதராபாத் நகரம் முஸ்லிம் களின் பாரம்பரிய பெருமைமிக்க நகராகத் திகழ்கிறது.
3. தென்னிந்திய மாநிலங்களில் காங்கிரஸின் கோட்டையாக ஆந்திர மாநிலம் விளங்குகிறது. காங்கிரசுக்கு அதிக அளவு நாடாளுமன்ற உறுப்பினர்களை வழங்கும் மாநிலமாக இருப்ப தோடு ஹிந்துத்துவ சக்திகள் சற்றே துளிர்விடக் கூட வாய்ப்பில்லாத பூமியாகவும் ஆந்திரம் விளங்குகிறது.
4. எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்து மக்க ளாலும் விரும்பப்படும் தலைவராக ஆந்திர முதல மைச்சர் டாக்டர் ஒய். ராஜசேகர ரெட்டி விளங்கு கிறார். குறிப்பாக சமூகத்தில் அழுத்தப்பட்டுக் கொண்டி ருக்கும் முஸ்லிம்களுக்காக, அவர்களது நிலையை மேம்படுத்த இடஒதுக் கீட்டுக்கு வழிசெய்தார்.
அதற்காக தடங்கல் ஏற்படுத்திய தடைகளை யெல்லாம் உடைத்து முஸ்லிம் களுக்கு இடஒதுக்கீடு வழங் கிட மும்முரம் காட்டினார்.
இத்தகைய பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட ஆந்திர அரசுக்கு இடைவிடாத தலைவலி கொடுத்து அரசியல் அரங்கில் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே உள்ளூர் பயங்கரவாதிகளும், வெளிநாட்டு பயங்கரவாதிகளும் கைகோர்த்திருக்கக் கூடும் என நடுநிலையாளர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.
ஏற்கனவே ஆந்திர காவல் துறையில் சில கறுப்பாடுகள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத் தும் விதமாக, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புக்குப் பிறகு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் முஸ்லிம் அப்பாவிகளை சுட்டுக் கொன்றது, கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மூர்க்கத்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி ஏழைப் பாட்டாளிகளை சுட்டுக் கொன்றது போன்ற சம்பவங்களை கவனத்தில் கொண்டு அனைத்துவித நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த வேண்டும் என நாட்டு மக்கள் விரும்புகிறார்கள்.
இதற்கிடையில் குண்டுவைத்த வர்களுக்கு உதவியவர் என கோழிக்கறி கடைக்காரர் ஒருவர் கைது செய்யப்படுகிறார். மீண்டும் ஒரு காமெடிக் காட்சியை அரங்கேற்ற வேண்டாம் என காவல்துறையை நாட்டு மக்கள் கெஞ்சிக் கேட்கிறார்கள்.
இதற்கிடையில் மீண்டும் பொடா வேண்டும் என்ற கோரிக்கை காவி முகாமிலிருந்து எழுப்பப்படுகிறது. 'அறுக்கத் தெரியாதவன் இடுப்பில் அறுபத் தெட்டு அரிவாளாம்' என்ற பழமொழியை அவர்களின் கூற்று நினைவூட்டுகிறது. இந்தியாவின் இறையாண்மைக்கு உச்சக்கட்ட ஆபத்து இவர்களது ஆட்சியில் தான் ஏற்பட்டது என்பதை நாடு மறக்கவில்லை. இவர்கள் குட்டையைக் குழப்பாமல் விலகி இருப்பதே உத்தமம் என நாட்டு மக்கள் கருதுகிறார்கள்.
நாட்டு மக்களின் அமைதிக்கு வேட்டு வைக்க முயலும் பயங்கர வாதிகளின் படுபாதகச் செயல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பெங்களூரு அறிவியல் கழக துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் அப்பாவி முஸ்லிம்களை வளைத்து விசாரித்ததோடு சரி. ஓராண்டுக்கு மேல் ஆகியும் உண்மைக் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படவில்லை. அவ்வாறே, மாலேகான் பள்ளிவாசல் குண்டு வெடிப்பு மற்றும் ஹைதராபாத் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு போன்றவற்றில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். உண்மைக் குற்றவாளி கள் கண்டுபிடிக்கப்பட்டு உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டிருந்தால் இத்தகைய செயல்கள் தொடராது என்பதே நடுநிலை யாளர்களின் கருத்தாக உள்ளது.
ஆந்திர அரசும், மத்திய அரசும் இணைந்து சதிகாரர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்

Thursday, August 9, 2007

கிருஷ்ணா கமிஷன் அறிக்கை

கிருஷ்ணா கமிஷன் அறிக்கை
குற்றவாளிகள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் நடவடிக்கை
மகாராஷ்ட்ரா அரசுஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் அறிக்கையை செயல்படுத்தக் கோரி நாடேங்கும் அழுத்தங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, மகராஷ்ட்ராவின் துணை முதல்வரும் உள்துறை அமைச்சருமான ஆர்.ஆர்.பாட்டில் காவல்துறை உயர்அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை மகராஷ்ட்ரா மாநில அரசின் தலைமைச் செயலகமான மந்த்ராலயாவில் நடந்தது.
முன்னதாக துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டிலை முஸ்லிம் தலைவர்கள் குழு ஒன்று சந்தித்தது. முன்னனி வழக்கறிஞரும் தேசியவாதக் கட்சியின் முக்கிய பிரமுகருமான மஜீத்மேமன் இக்குழுவிற்கு தலைமை வகித்தார். 1993ல் நிகழ்ந்த மும்பை கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி மேலும் தாமதிக்கப்படக்கூடாது என வலியுறுத்தினார்கள். முஸ்லிம் குழு சங்கத்துடன் தொடர்ச்சியாக காவல்துறை உயர் அதிகாரிகளுடனான மற்றும் துணை முதலமைச்சரின் கூட்டம் நடத்தப்படுவதாக கருதப்படுகிறது. உடனடியாக அரசு தலைமை வழக்கறிஞர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளைக் கூட்டி ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என மஜீத் மேமன் தெரிவித்திருந்தார். மும்பைக் கலவரக் குற்றவாளிகள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்டும் என ஆர்.ஆர்.பாட்டீல் உறுதி அளித்தார்.

Friday, August 3, 2007

உ.பி.யில் ஒரு குஜராத் துவம்சம் செய்யப்பட்ட முஸ்லிம் கிராமம்

உ.பி.யில் ஒரு குஜராத் துவம்சம்
செய்யப்பட்ட முஸ்லிம் கிராமம்
சத்தியப்பிரியன்
சுதந்திர இந்தியாவில் நடக்காத ஒரு அக்கிரமம் உத்தரப்பிரதேசத்தின் ஒரு சிறிய கிராமத்தில் நடந்துள்ளது.
கூட்டம் கூட்டமாக குடியிருப்புகளில் புகுந்து பாலியல் வன்முறைகள், வீடுகள் தீ வைப்பு, சூறையாடு தல் என அத்தனைக் கொடுமைகளும் ஒரு கிராமத்தினரின் மீது ஏவப் பட்டன.
பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் முஸ்லிம்கள். இந்தக் கொடுமைகளை பாஜகவின் முன்னாள் எம்.எல்.ஏ.வும் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஓர் அமைச்சரின் அடிப்பொடிகளும் இந்த அக்கிரமத்தை அரங்கேற்றியுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் சரஸ்வதி மாவட்டத்தில் தானிதீ கிராமம். இங்கு 50 முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கின்றன. பண்டிட் திடுவதியின் 20 வயது மகள் வந்தனா. இவரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய வைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே காதலித்த முஸ்லிம் வாலிபர் சலீமுடன் ஓடிவிட்டார்.
பிராமணர்களின் ரிமோட் கண்ட்ரோலில் நடப்பதாகக் கூறப்படும் மாயாவதி ஆட்சியில் நடந்த இந்தச் சம்பவம் அவர்களிடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்திவிட்டது.
இந்த ஒரு சம்பவத்தின் மூலம் ஒட்டுமொத்த கிராம முஸ்லிம்கள் அனைவரையும் குற்றவாளிகளாய் ஆளும் வர்க்கத்தினர் சித்தரித்தனர். அதனால் பழிவாங்கும் நடவடிக்கை களைத் தொடங்கினர்.
மாயாவதி அமைச்சரவையில் ஆயுர்வேதத்துறை அமைச்சரான மிஸ்ராவின் சகோதரர் அசோக் மிஸ்ராவின் ரவுடிகள் ஆயிரக்கணக் கானோர் வாகனங்களில் அந்த குட்டிக் கிராமத்தை சூழ்ந்தனர். ஆறு மணி நேரம் அது மோடியின் குஜராத்தாக மாறிவிட்டது. முஸ்லிம்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. குடியிருப்புகள் அனைத்தும் தீவைத்துக் கொளுத்தப் பட்டன. சிறுமிகளையும், இளம் பெண்களையும் அடித்து ஆடை களைக் களைந்து அவர்களை அவமானப்படுத்தியது மட்டுமல்லாமல் ஏளனமாக வும் சிரித்தனர். அதோடு அவமானத்தோடு ஓடி ஒளிந்த அந்த அபலைப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு இலக்காயினர்.
காலை 10 மணிக்கு வந்த அவர்கள் வெறியாட்டம் ஆடித் தீர்த்துவிட்டுச் சென்றனர். தங்களது பெண் வந்தனா வந்து சேரவில்லை என்றால் கிராமத்தையே நிர்மூலமாக்குவோம் என்று எச்சரித்துள்ளனர். இவர்க ளோடு சில காவல்துறையினரும் வந்துள் ளனர். 13 முஸ்லிம் இளைஞர்களை இழுத்துச் சென்று காவல்துறையினர் லாக்கப்பில் அடைத்தனர்.
பாலியல் வன்முறைக்கு இலக்காக் கப்பட்ட பெண்களில் இருவர் 50 வயது மேற்பட்டவர்கள்.
காலை 9.30 மணிக்கு ஒருசில காவலர்கள் வந்து நோட்டமிட்டுச் சென்ற பிறகே இந்த அக்கிரமச் செயல் நிகழ்ந்துள்ளது.
இந்தக் கொடூரமான தாக்குதலை திட்டமிட்ட முக்கிய விஷமிகள் அசோக் மிஸ்ரா மற்றும் ஞானஷ்யாம்பதக் என்ற இருவரும் ஆவர். இவர்களது தாக்குதலில் யாருக்கும் தலையில் காயமோ, வெளிக்காயமோ ஏற்படவில்லை. இத்தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை. எனினும் மிகவும் மோசமாக தாக்கப்பட் டனர். கச்சிதமாக கடுமையான உள்காயங் கள் ஏற்படும் வண்ணம் அவர்களது தாக்குதல் அமைந்திருந்தது. சங்பரிவாரத் தினர் மட்டுமே இவ்வாறு தாக்குதல் நடத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொடூரமான இந்நிகழ்வை அச்சத்தின் காரணமாக கிராம மக்கள் மறைத்து விட்டனர். உண்மை அறிந்து அந்தப் பகுதி காங்கிரஸ் தலைவர் முஹம்மது அஸ்லம் ரைனி செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டினார். அதோடு காவல்துறை அலுவலகத்திற்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டத்தையும் அறிவித்தார்.
அரசியல் கட்சிகள் வரிசையாக போராட்டத்தை அறிவித்தன. தானிதீனி கிராமத்தின் முஸ்லிம்களில் அதிகம் பேர் இன்னும் மறைந்ததே வாழ்கின் றனர். கிராமத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றம் நீடிக்கிறது. மாற்றங்களை ஏற்படுத்து வதாக நினைத்து மாயாவதி சிக்கலில் மாட்டிக்கொண்டார்
ஆந்திராவில் இரண்டு ஹனீஃப்கள்
முஹம்மத் ஹனீஃபுக்கு தீவிரவாத பழி சுமத்தி திருதிருவென விழித்து திக்கு முக்காடி தவித்த ஆஸ்திரேலியாவைப் பற்றி தற்போது பரபரப்பாக பேசப் படுகிறது. ஆனால் டாக்டர் ஹனீஃபை விட பல மடங்கு வேதனையையும் துன்பங்களையும் அனுபவித்த இளைஞர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
2001 செப்டம்பர் 11ல் நிகழ்ந்த நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதல் தொடர்பாக இரண்டு இந்திய இளைஞர்களை குறிப்பாக ஹைதராபாத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களை அமெரிக்க அரசு முதலில் சந்தேகத்தின் பேரில் கைது செய்தது.
முஹம்மது அய்யூப், ஜாவித் அஹ்மத் இருவரையும் இரட்டைக் கோபுர தாக்குதல் வழக்கில் தொடர்புடையவர்கள் என பல ஆண்டுகளாக சிறையி லடைத்தது.
கடந்த ஆண்டு இருவரையும் அமெரிக்க அரசு விடுதலை செய்தது. இவர்கள் இருவர் மீதான தீவிரவாத தொடர்பு நிரூபிக்கப்படவில்லை என்ப தால் அவர்கள் விடுதலை செய்யப் பட்டனர்.
முஹம்மத் ஹனீஃப், அவரது மனைவி ஃபிர்தவ்ஸ் அர்ஷியா மற்றும் அவர்களது குடும்பத்தினரின் உணர்வுகளை எங்களால் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. ஏனெனில் நாங்களும் அதைப் போன்ற ஒரு துன்பத்தை அனுபவித்த வர்கள் என்று ஜாவீத் அஸ்மத்தும் அவரது மனைவி தஸ்லீமும் கூறுகின் றனர்.
முஹம்மத் ஹனீஃப் என்ற கர்நாடக சகோதரருக்கு ஆஸ்திரேலியாவில் நேர்ந்தது தான் அமெரிக்காவில் எனக்கும் நடந்தது என்று குறிப்பிடும் ஜாவித் அஸ்மத், நான் உலக வர்த்தக வளாகத்தை தாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவன் என என்னைக் கைது செய்தார்கள். நான் சவூதி அரேபியாவின் பிரஜை என்றார் கள். அதற்கு போலியாக பாஸ்போர்டும், பிறப்புச் சான்றிதழும் புனைந்தார்கள். எனக்கு விமானம் ஓட்டத் தெரியும் என்று பொய்யாக ஒரு ஆவணத்தை தயார் செய்தார்கள். இதில் வேடிக்கை என்னவெனில் எனக்கு விமானம் ஓட்டத் தெரியாது. எங்கள் மீது கூறிய குற்றச்சாட்டுகள் எதையும் நீதிமன்றத்தில் அமெரிக்க அரசால் நிரூபிக்க முடிய வில்லை. வழக்கை இழுத்தடிக்கும் மிகக் கேவலமான தந்திரத்தை கையாண்டார் கள். இறுதியில் நீதிமன்றத்தால் நாங்கள் விடுதலை செய்யப்பட்டோம்.
ஹனீஃபுக்கு ஆதரவாக இந்திய அரசு களம் இறங்கியது. ஹனீஃப் குறித்த அனைத்து வி'யங்களும் பகிரங்கப் படுத்தன. அதனால் புனையப்பட்ட கற்பனை குற்றச்சாட்டுகள் மறைந்து உண்மைகள் வெளிவரத் துவங்கின என்று கூறிய ஜாவீத் இதற்கென இந்திய அரசை பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
தங்களை சிறையில் தள்ளியதற்கும் கண்ணியக் குறைவை ஏற்படுத்தியதற்கும் இழப்பீடு கோரி அமெரிக்க அரசை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கும் ஜாவீத் அஸ்மத் விரைவில் வெற்றி கிடைக்கும் என்றும் நம்புகிறார்

Thursday, July 26, 2007

newwws

நாட்டின் முதல் சேவகி நான்.
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் எனது முயற்சிகள் அமையும் என வண்ணமிகு விழாவில் பதவியேற்ற புதிய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உரையாற்றினார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இந்நாள் முன்னாள் பிரதமர்கள், காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி முதலமைச்சர் கருணாநிதி உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.


குடியரசுத் தலைவர் பதவிக்காலம் முடிந்து அப்துல் கலாம் டெல்லியிலிருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான தனி விமானத்தில் சென்னை வந்தார்.
விமானநிலையத்தில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிதியமைச்சர் அன்பழகன், அமைச்சர் தாமோ.அன்பரசன் உட்பட முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.


புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்றுள்ள நிலையில் மத்திய அமைச்சரவையில் சிறிய மாற்றம் செய்யப்பட உள்ளதாக தலைநகர் டெல்லியில் இருந்து வரும் சேதிகள் தெரிவிக்கின்றன.
ராஜ்ய சபையின் துணைத் தலைவராக இருந்து வரும் ரஹ்மான்கான் கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்ட வந்த மரபின்படி எதிர்கட்சி கூட்டணிக்கு வழிவிட்டு தனது ராஜ்யசபைத் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரஹ்மான்கான் மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவார் என்றும் தமிழகத்தைச் சேர்ந்த புதுமுக எம்.பி மத்திய அமைச்சராவார் என்றும் அவரது பெயர் கனிமொழி என்றும் டெல்லி மற்றும் சென்னை தகவல்கள் தெரிவிக்கின்றன.


முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்.
அதைப்பற்றி மேற்கொண்டு தெரிவிக்க விரும்பவில்லை.
நல்லது நடக்க இருக்கும் நிலையில் அதுபற்றி இப்போது விவாதிக்க வேண்டாம் என முதலமைச்சர் கருணாநிதி டெல்லியில் தமிழக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

நதிகள் இணைப்பு தொடர்பாக முதல் அமைச்சர்கள் மாநாட்டை கூட்டுமாறு முதல் அமைச்சர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கேட்டுக் கொண்டதாக கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.


காங்கிரஸ் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் ஹமீத் அன்சாரி முதல்வர் கருணாநிதியை சந்தித்தார். இச்சந்திப்பின் போது மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு உடன் இருந்தார்.


கடத்தப்பட்ட சத்யம் கம்ப்யூட்டர்ஸின் மேலாளர் சத்யநாராயணா மீட்கப்பட்டார். இது தொடர்பாக சத்யநாரயணாவின் ஓட்டுநர் உள்பட நால்வர் கைது செய்யப்பட்டனர்.


பெட்ரோல் மற்றும் டீசலின் விலை விரைவில் உயர்த்தப்பட உள்ளதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்துள்ளார்.


நல்ல படிப்பு வருவதற்கு பூஜை செய்கிறேன் வா என்று கூறி ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமியை அழைத்துச் சென்று கற்பழிக்க முயற்சித்த சென்னை மேற்கு முகப்பேர் நடைபாதை கோவில் பூசாரி கோபிநாத் கைது செய்யப்பட்டார்.
காமவெறி பிடித்த பூசாரிக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


புதிய காவல்துறை உதவி ஆய்வாளர்களை தேர்ந்தெடுப்பதற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
தான் நன்றாக எழுத்துத் தேர்வு எழுதியுள்ளதாகவும் தன்னைவிட தகுதிக் குறைந்தவர்கள் மருத்துவ தகுதி தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தனக்கு அழைப்பு அனுப்பப்பட வில்லை என்றும் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த சங்கர் கணேஷ் என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து பதில் தருமாறு அரசுக்கு நீதிபதி கே. வெங்கட் ராமன் உத்தரவிட்டுள்ளார்.


புகைப்பட வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் விண்ணப்பங்களை துல்லியமாக சரி பார்ப்பதால் இறுதிப்பட்டியல் வெளியிட மேலும் ஒரு மாதம் கால தாமதம் ஆகும் என தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்திருக்கிறார்

Wednesday, July 25, 2007

செய்தித்துளிகள்

இந்தியாவின் 12வது குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் இன்று மதியம் பதவியேற்றார்.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை தனிப்பட்ட முறையில் திட்டியதாக ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மீது கடுமையான எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு எதிர்வரும் செப்டம்பர் 15க்குள் குடும்ப அட்டை வழங்கப்பட வேண்டும் என உணவுத்துறை அமைச்சர் எ.வ. வேலு உத்தரவிட்டார்.
சத்தியம் கம்யூட்டர்ஸ் குழுமத்தைச் சேர்ந்த பொது மேலாளர் சத்திய நாராணயனன் செகந்திராபாத்தில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.
சேது சமுத்திர திட்டப்பணிகளுக்கு இதுவரை 400 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அத்திட்ட தலைவர் என்.கே. ரகுபதி தெரிவித்திருக்கிறார்.
சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களை உறுதிப்படுத்த தேவைப்பட்டால் சட்ட திருத்தம் கொண்டுவரப்படும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
ஜம்முலிகாஷ்மீரில் ராணுவ வீரர் ஒருவர் ராணுவ மேஜரை சுட்டுக் கொன்றுள்ளார். இவ்வாறு ராணுவத் துறையினருக்குள்ளே மோதல் நடைபெறுவது இது ஆறாவது தடவையாகும்.
மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி பா.ம.கவின் ஜனநாயகக் கடமை தொடரும் இதற்கு யாரும் வாய்ப்பூட்டு போட முடியாது என ராமதாசு தெரிவித்திருக்கிறார். இது கருணாநிதியின் நேற்றைய பேச்சுக்கு பதிலளித்த அறிக்கையாக கருதப்படுகின்றது.
இன்று பதவி ஓய்வு பெற்ற குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சென்னை வருகிறார். குடியரசுத் தலைவர் பதவியிருந்து ஓய்வு பெற்றாலும் மக்களை தொடர்பு கொள்ளும் பணியில் இருந்து, ஓய்வு பெறப்போவதில்லை என அவர் தெரிவித்திருக்கிறார்.
பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவின் அனைத்து இதயங்களும் இணைக்கப்பட வேண்டும் என நாட்டு மக்களுக்கு உரையாற்றிய குடியரசு தலைவர் டாக்டர். ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் தெரிவித்திருக்கிறார். எதிர்வரும் 2020ல் இந்தியாவை வல்லரசாக ஆக்கும் முயற்சியில் உங்களுக்கு துணை நிற்பேன் என்றும் குடியரசுத் தலைவர் கூறினார். நாட்டு மக்களிடம் குடியரசு தலைவர் பிரியா விடை பெற்றார்.
திமுக அரசு மீதும் உயர் கல்வித்துறை மீதும் ராமதாஸ் கடும் விமர்சனங்களை கூறிவருவதைத் தொடர்ந்து எதற்கும் ஓர் எல்லையும் அளவும் வேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். பொன்முடி மீது டாக்டர் ராமதாசு கூறும் விமர்சனம் குறித்து கருணாநிதி பேசும்போது உயர்கல்வித் துறை அமைச்சர் அவருடைய சொந்த மாவட்டம் அல்லவா? அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் நல்ல பெயர் எடுக்க வேண்டும் எண்ணத்துடன் ராமதாசு தெரிவித்திருக்கக் கூடும். ஆனால் அதற்கும் ஓர் எல்லையும் அளவும் வேண்டும் என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.
அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் நாட்கள் தங்கியிருந்ததால் சிங்கப்பூர் சிறையில் வாடும் தமிழர்களை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்திருக்கிறார்.
பொறியியல் கல்விக்கான கலந்தாய்வில் கூடுதலாக ஆயிரம் இடங்கள் இந்த ஆண்டு உருவாக்கப்படும் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார்.
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் சங்கராச்சாரி உள்பட 12 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. சென்னை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரான சங்கராச்சாரி உள்பட 12 பேரின் குற்றச்சாட்டை நீதிபதி முஹமது இஷாக் வாசித்தார்.
ஹனீஃப் விவகாரத்தில் ஆஸ்திரேலிய காவல்துறையினர் நடந்து கொண்ட விதம் உலக அளவில் நகைப்புக்குரியதாகி விட்டது என அந்நாட்டு எதிர்கட்சியான கிரீன்ஸ்கட்சி தெரிவித்துள்ளது.
எங்கள் மண்ணின் மீது குண்டுகள் வீச அமெரிக்காவை அனுமதிக்க மாட்டோம் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது

Friday, July 20, 2007

இந்திய இளைஞர்களை குறி வைக்கும் சர்வதேச பயங்கரவாதம் அதிர்ச்சி தகவல்கள்

இந்திய இளைஞர்களை குறி வைக்கும் சர்வதேச பயங்கரவாதம் அதிர்ச்சி தகவல்கள்
பிரிட்டனின விமான நிலையத்தின் முன்புறம் கஃபில் என்பவர் கேஸ் சிலிண்டர்களை நிரப்பிய வாகனத்துடன் தன் மீதும் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு மோதியதால் வாகனம் தீப்பிடித்தது. கஃபில் மனையில் தற்போது பிரிட்டன் மருத்துவ மனையில் உயிருக்குப் போராடி வருகிறார். 92 சதவீதம் உடல் எரிந்த நிலையில் அவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ள தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளாஸ்கோ விமான நிலையத்தின் முன்புறத் தில் இருந்த பாதுகாப்புத் தடுப்புகளை மீறிச் சென்று காரிலிருந்து குதித்த நபரை கைது செய்து விட்டதாக பிரிட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. அவர் ஈராக்கைச் சேர்ந்த டாக்டர் பிலால் அப்துல்லாஹ் என்றும் அவரும் இந்த வெடிக்காத குண்டு வெடிப்பில் முக்கிய தொடர்புடையவர் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.
டாக்டர்களின் சதி எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த நிகழ்வில் எட்டு பேருக்கு தொடர்பு இருக்கக்கூடும் என பிரிட்டிஷ் புலனாய்வுத்துறையினரால் நம்பப்படுகிறது.
கஃபில் இனி உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லாத நிலையில் பிரிட்டிஷ் புலனாய்வுத் துறை வெளியிடும் தகவல்கள் மட்டுமே உலகம் நம்ப வேண்டியதாயிற்று.
எரிவாயு நிரம்பிய வாகனத்தை கஃபில் ஒட்டி வந்ததாக பிரிட்டன் காவல்துறை கூறுகிறது. எரிவாயுவால் வாகனம் ஓட்டப்படுவது பல்லாண்டு காலமாக நடந்து வருகிறது. உலகின் பல நாடுகளில் வாகனங்கள் எரிவாயு சிலிண்டர்களில் ஓடுகின்றன.
ஆனால் எரிவாயு சிலிண்டர் நிரம்பிய வாகனத்தை ஓட்டி வந்தாரா? மோதினாரா? அல்லது நடந்தது விபத்தா? உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி வந்த வாகனத்தை மோதச் செய்த போது 90 சதவீதத்திற்கும் மேலாக கஃபிலின் உடல் எரிந்து போனதாக காவல்துறை கூறுகிறது. ஆனால் அருகிலிருந்து அதே ஜீப்பிலிருந்து குதித்தாகக் கூறப்படும் பிலால் அப்துல்லாஹ்வுக்கு காயம் ஏதும் ஏற்படாமல் பத்திரமாக குதித்தது எப்படி? என்பது போன்ற விடை தெரியாத வினாக்கள் விடைத்து நிற்கின்றன.
ஆனால் இது குறித்து எந்த மேற்குலக ஊடகங்களும் கண்டு கொள்ளவில்லை. இந்திய ஊடகங்களும் வாய் திறக்கவில்லை.
கஃபிலை யாரும் பார்க்கவும் காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இன்னும் அவரை விசாரித்து வருவதாகக் கூறிக் கொள்கிறது.
கிளாஸ்கோ விமான நிலைய முகப்பில் எரிந்த நிலையில் விழுந்தவன் தனது மகன் தான் என கஃபிலின் பெற்றோர்கள் உறுதியாக தெரிவித்தாகவும் செய்திகள் வெளியாயின.
இந்திய புலனாய்வுத் துறையும் கஃபிலின் மீது சந்தேகம் இருப்பதாகவே தெரிவித்திருக்கிறது.
ஒரு தலைச்சார்பான இந்த தகவல்களே சந்தேகத்திற்குரியவை தான் என்பதே நடுநிலையாளர்களின் வாதம்.
இந்நிலையில் கிளாஸ்கோ சம்பவம் நிகழ்ந்து பரபரப்பான தகவல்கள் வெளிவந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து பெங்களூருக்கு செல்ல விமான நிலையம் வந்த டாக்டர் ஹனீஃப் என்ற 27 வயது இளைஞரை ஆஸ்திரேலிய நிர்வாகம் விசாரணை வளையத்தில் வைத்தது.
டாக்டர் ஹனீஃப் சமீபத்தில் பிறந்த தனது பெண் குழந்தையை பார்ப்பதற்காக ஆசையுடன் புறப்பட்டவருக்கு ஆஸ்திரேலிய நிர்வாகத்தின் இச்செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹனீஃபின் குடும்பத்தினரும் கடும் சோகத்தில் மூழ்கினர்.
ஏதும் குற்றச்சாட்டுகள் அவர் மீது நிரூபணமாகாத நிலையில், அவரை விசாரணைக்காக முடக்கி வைத்த ஆஸ்தி ரேலிய நிர்வாகத்தின் மீது கடும் விமர்சனங் கள் எழுந்தன.
ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரென்டன் நெல்சனும், பிரதமர் ஜான் ஹோவர்டும் ஹனீஃபின் மீது இது வரை எந்தக் குற்றச் சாட்டும் நிரூபிக்கப் படவில்லை என்று கூறினார். அவர் மீதான விசாரணை முடிந்த பிறகு அவர் விடுவிக்கப்படுவார், நாளை விடுவிக்கப்படுவார் என இந்திய செய்தி ஏடுகளும் ஆருடங்களை கூறிவந்தன.
ஏற்கனவே பெங்களூர் காவல்துறை யும் டாக்டர் ஹனீஃபை குற்றவாளியாக உறுதிபடுத்தும் விதத்தில் எந்தவகையான ஆதாரமும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹனீஃப் ஆஸ்ரேலிய நிர்வாகத்தின் அனுமதியின் பேரில் ஒரு நிமிடம் தனது மனைவியிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது தான் விரைவில் விடுவிக்கப்படுவேன் என்று நம்பிக்கை யுடன் பேசினார். தனக்காக வீட்டிலுள் ளோர் அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதனை டாக்டர் ஹனீஃபின் மனைவி ஃபிர்தவ்ஸ் அர்ஷியா தெரிவித்திருந்தார்.14.07.07 அன்று டாக்டர் ஹனீஃப் தாயகம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் 14 நாட்கள் விசாரணையில் வைத்திருந்து திடீரென அவர் மீது குற்றச்சாட்டை ஆஸ்திரேலிய அரசு சுமத்தியது.
இதனிடையே டாக்டர் ஹனீஃபை விரைவில் விடுவிக்க வேண்டும் என சர்வதேச பொது மன்னிப்பு சபை வேண்டுகோள் விடுத்தது.
அனைத்தையும் அலட்சியம் செய்து ஆஸ்திரேலிய அரசு டாக்டர் ஹனீஃப் மீது குற்றச் சாட்டை பதிவு செய்தது. ஹனீஃப் தனது தூரத்து உறவினரான கஃபீலுக்கு சிம்கார்டு ஒன்றை கொடுத்ததாக குற்றம் சாட்டுகிறது.
ஆஸ்திரேலிய அரசின் இந்தச் செயல் ஒரு நாடகம் என ஆஸ்திரேலியாவிலுள்ள இந்திய தூதரகம் கூறியது. இது நாடகக் காட்சி போன்றே இருப்பதாக ஆஸ்திரேலியாவுக்கான முன்னாள் இந்தியத் தூதர் சி.ஜே. ராவ் தெரிவித்தார்.
வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாதுகாப்புக்கு இந்திய அரசு உத்தரவாதம் தரவேண்டும் என சி.ஜே. ராவ் தெரிவித்தார்.
ஒருவருக்கு சிம்கார்டு கொடுப்பது ஒன்றும் குற்றச்செயலல்ல. இது அடிப்படையற்றது என ஹனீஃபின் மனைவி அர்ஷியா தெரிவித்தார்.
இதற்கிடையில் ஹனீஃபுக்கு ஜாமீன் தரக்கோரி அவரது வழக்கறிஞர் பீட்டர் ரூசோ நீதிமன்றத்தில் மனு செய்தார். 16.07.07 அன்று ஹனீஃபுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்தது.
வெடிக்காத குண்டு விவகாரத்தில், உண்மை நிலவரங்கள் வெளிவராத நிலையே நீடிக்கிறது. பயங்கரவாத அச்சுறுத்தல், தீவிரவாத தாக்குதல் என பீடிகைகள் பலமாக இருந்தாலும் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவன் ஒரு முஸ்லிம் இளைஞர்தான். இந்நிலையில் எங்கும் எவரும் பாதிக்கப்படாத சூழ்நிலையில் இந்திய முஸ்லிம்கள் குறித்து உலகெங்கும் வாதப் பிரதிவாதங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
'ஏப்ர்க்ஷஹப் ஓங்ட்ஹக்' உலகம் தழுவிய ஜிஹாத் இந்தியாவில் பரவி வருவதாக ஒரு சாரார் இது போன்ற சம்பவத்துக் காகவே காத்திருந்தது போல் தங்கள் கண்டுபிடிப்புகளை (!) கருத்துக்களாக தெரிவித்து வருகிறார்கள்.
இந்தச் சதிச்செயலுக்கு 'டாக்டர்கள் சதி' என்று பெயரிடப்பட்டது ஏன்? கைது செய்யப்பட்டுள்ள கஃபிலின் சகோதரர் சபீல் மற்றும் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள முஹம்மது ஹனீஃப் இருவர் மட்டுமே டாக்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நடக்காதவைகளை பெரிதுபடுத்தி அதன் விசாரணை விவரங்களைக்கூட வெளியிடாமல் முஸ்லிம்களை சந்தேக வளையத்தில் சிக்க வைக்கும் செயலை முன்னணிப் பத்திரிக்கையாளர் அஸ்கர் அலி என்ஜினியர் கண்டித்திருக்கிறார்.இந்த சமுதாயம் தீவிரவாதிகளை ஆதரித்ததற்கு எந்த ஆதாரமும் இதுவரை கிடைத்ததில்லை என பொருளாதார அறிஞரும் சச்சார் குழுவின் உறுப்பினருமான டாக்டர் அபூசாலிஹ் ஷெரிப் தெரிவித்தார்.
உலகளாவிய பயங்கரவாதம் என்பது மேற்குலகால் உருவாக்கப்பட்டது அதற்கும் இஸ்லாத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என ஜமியத்தே உலமாயே ஹிந்த்தின் மஹ்மூத் மதானி தெரிவித்தார்.
இந்த ஒரு சமுதாயத்தை மட்டும் முத்திரை குத்தி குற்றம் சாட்டுவது ஏன் ஐ.ஆர்.ஏ என்ற ஐரீஷ் தேச தீவிரவாதப் படை எந்த செயலை செய்தாலும் அதற்கு கத்தோலிக்கர்களை குற்றம் சாட்டுவ தில்லையே? ஆனால் முஸ்லிம்களை மட்டும் குற்றம் சாட்டுவது ஏன் என குமுறுகிறார் டெல்லிப் பல்கலைக் கழக மாணவர் அக்தர் அலிகான்.
மும்பை ரெயில் குண்டு வெடிப்பு நிகழ்ந்து ஓராண்டுக்குப் பிறகு அதன் சோக சம்பவங்களை அனைத்து ஊடகங்களும் விரிவாக வெளியிடுகின் றன. ஆனால் மும்பையில் நிகழ்ந்த முஸ்லிம் விரோத வன்முறை குறித்தோ, குஜராத் கலவரங்கள் குறித்தோ இதுவரை அவர்கள் சிறிய செய்தியையாவது வெளியிட்டது உண்டா? என ஆவேசமாகக் கேட்கிறார் அஸ்கர் அலி என்ஜினியர்.
முஸ்லிம்கள் மீதான கொடுமைகளை மீடியாக்கள் மறந்து விடுகின்றன. 92ல் நடந்த மும்பை கலவரத்தில் தொடர்புடை யவர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப் படவில்லை. ஆனால் மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடை யவருக்கு 14 ஆண்டு சிறைத் தண்டனை கொடுக்கப்படுகிறது. மீடியாக்கள் கூறாமல் கூறும் மவுனச் செய்தி இது தான் ''முஸ்லிம்களின் பிரச்சினைகளை நாங்கள் கண்டு கொள்மாட்டோம் ஆனால் முஸ்லிம்களை பிரச்சினைக்குரியவர்களா சித்தரிப்போம்'' என்பதே அது. எந்த இந்திய முஸ்லிமும் எந்த சர்வதேச தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடை யவர்கள் அல்ல என ராஜ்யசபா எம்.பியும் ஜமாத்தே உலமாவின் பொதுச் செயலாளருமான மஹ்மூத் மதானி தெரிவித்திருக்கிறார்.
முஸ்லிம் அறிவுஜீவிகள், இந்தியா விலும் உலக அளவிலும் தற்போது நடைபெற்று வரும் சில மின்னல் வேக மாற்றங்களுக்கும் தற்போது வரும் செய்திகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
'அல்காய்தா ஹிந்த்' என்ற பெயரில் அல்காயிதாவின் இந்தியப் பிரிவு ஒன்று வீடியோ மூலம் இந்திய அரசுக்கும், காஷ்மீர் மாநில தலைவர்களுக்கும் மிரட்டல் விடுத்திருந்தது. இந்தியாவில் அல்காய்தா என்று இந்தியாவில் உள்ள அனைத்து ஊடகங்களும் செய்தியை பரப்பின.
இந்த பரபரப்பான செய்தி குறித்து முஸ்லிம் அறிவு ஜீவிகள் குழு சந்தேகம் தெரிவித்தது. இஸ்ரேலியப் படைப்பிரிவு இந்தியா வந்த பிறகே இம்மாதிரியான வினோதமான செய்திகள் வெளிவருவ தாகவும் இஸ்ரேலிய உளவுப் பிரிவுக்கும், இந்த புதிர் செய்திகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என ஙஒஎ எனும் அந்த அமைப்பு சந்தேகம் தெரிவித்துள்ளது. ஙஒஎலின் ஒருங்கிணைப்பாளர் பெரோஸ் மிதிபோர்வாலா வெளியிட்ட அறிக்கை யில் சமீபத்தில் வெளியிடப்பட்ட அல்காயிதா வீடியோ இஸ்ரேலிய உளவுப் பிரிவின் ஆலோசனையின்படி வெளியிட்டதாக இருக்கலாம் என ஙஒஎ தெரிவித்திருக்கிறது. இது இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் பெரும் உதவிகரமாக விளங்கியுள்ளது.
அல்காய்தா என்பது சி.ஐ.ஏ மற்றும் மொசாட்டின் முன்னணி அமைப்பே தவிர வேறல்ல, அமெரிக்க யூத உளவுத்துறை யினரே உலகமெங்கும் பயங்கரவாதங் களை கட்டவிழ்த்து விடுகின்றன என்பது சமீபத்தில் லண்டன் மற்றும் லால் மஸ்ஜித் சம்பவங்களிலிருந்து தெரிய வருகிறது. மறைந்த பாலஸ்தீனத் தலைவர் யாசர் அராஃபாத் பகிரங்கமாக வெளியிட்ட அறிக்கையில் மொசாத் அல்காய்தாவின் திட்டங்களை அட்டவணை போட்டுக் கொடுக்கிறது என்று தெரிவித்ததை பெரோஸ் நினைவு கூர்ந்தார்.
சிரியாவின் அதிபர் பஷருல் ஆஸாத் தும் அல்காய்தா அமைப்பு இஸ்ரேலின் மொசாட்டால் இயக்கப்படுகிறது என்று கூறினார். இன்று 50 சதவீதத்திற்கும் அதிகமான அமெரிக்கர்கள் 9/11 நியூயார்க் உலக வர்த்தக வளாகத் தாக்குதல் சி.ஐ.ஏ மற்றும் மொசாட்டின் கைவரிசையே என்றும் நம்புவதாக பெரோஸ் தெரிவித்திருக்கிறார்.
பொறியாளர் கஃபீலின் பெற்றோர்
இந்தியாவில் மதக்கலவரங்களால் முஸ்லிம்கள் மோசமாக பாதிக்கப்படும் பொழுது அதை சிறிதாக்கி காட்டுவதற்காக அதை மறக்கடிப்பதற்காக குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி முஸ்லிம்களின் மாண்பினை குலைக்கும் சதி அகில இந்திய அளவில் திட்டமிடப்படுகிறதா? என்ற சந்தேகம் எழுகின்றது.
பயங்கரவாதத்திற்கு எதிரான பேரில்(?) தற்போது ஆஸ்திரேலியாவும் இணைக் கப்படுகிறது. விசாரணையில் வைக்கப் பட்டிருந்த டாக்டர். ஹனீப் 10 நாட்களுக்கும் மேலாக எவ்வித குற்றச் சாட்டையும் சுமத்தாமல் இருந்தபோது பிரிட்டினிலிருந்து காவல்துறை படை ஒன்று ஆஸ்திரேலிய அதிகாரிகளை சந்தித்த பின்பு திடீரென டாக்டர் ஹனீஃப் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு பெங்களூரில் அறிவியல் கழகத்தில் விஞ்ஞான பேராசிரியர் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அது தொடர்பாக அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை அள்ளிச்சென்று அக்குவேறு ஆணிவேறாக விசாரித்தனர். விசாரிக்கப்பட்ட அனைவரும் எவ்வித குற்றமும் செய்யவில்லை என விடுவிக்கப்பட்டனர். ஆனால் அப்போது பெங்களூர் தீவிரவாதிகளின் குறியாக மாறிவிட்டது என்றார்கள். ஓராண்டு கடந்த பின்பும் உண்மைக் குற்றவாளி யைக் கண்டு பிடித்த பாடில்லை.
தற்போது பிரிட்டன் கிளாஸ்கோ விமான நிலைய சம்பவம் தொடர்பாக தெளிவற்ற ஒரு கதையைக் கூறி குழப்பி வருகிறார்கள்.
இந்தியா சுயசார்புடன் எழுந்து நின்று விடக்கூடாது. இனமோதல்களை உருவாக்க பிணங்களை குவித்தால் தங்கள் நாட்டின் பொருளாதாரவளத் தினை மேம்படுத்த முடியும். வல்லரசுக் கனவில் இருக்கும் இந்தியாவை இற்றுப் போக செய்யலாம் என முடிவெடுத்தே அமெரிக்க மற்றும் இஸ்ரேலில் சக்திகள் செயல்படத் துவங்கியுள்ளதாகத் தெரிகிறது.
இந்தியாவில் முப்பது கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்ந்து வரும் நிலையில் ஒருங்கிணைந்த சக்தியான முஸ்லிம்களை பலவீனப் படுத்தினால் விளையும் குழப்பங்களை வைத்து குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கவே மேற்குலக சக்திகள் முனைப்போடு செயல்படுகின்றன.
சொல்லி வைத்தாற்போல் இந்திய ஊடகங்கள் இந்திய முஸ்லிம் இளைஞர் களுக்கும் சர்வதேச பயங்கரவாத இயக்கங்கள் என்று அழைக்கப்படும் அமைப்புகளுக்கும் தொடர்புண்டா? இல்லையா? என்பது குறித்து விவாதங்கள் தொடங்கி விட்டன.
அனைத்துக் காட்சிகளையும் தயாரித்து இயக்குபவர்கள் யார் என்பது விவர மறிந்தோர் அனைவருக்கும் தெரியும். புல்லுருவிகளின் வஞ்சகங்களுக்கு இடம் அளிக்காது 100 கோடி இந்தியர்களும் ஒற்றுமையுடன் கை கோர்ப்பதே அந்த கருங்காலிகளின் முகங்களில் கரி பூசுவதாக அமையும்

Thursday, July 19, 2007

news

தமிழக அரசு புதிதாகப் பொறியியல் கல்லூரிகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. அந்தக் கல்லூரிகளை அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த அண்ணா பல்கலைக் கழகங்களே நடத்துவது குறித்தும் பரிசீலிக்கப்படும் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருக்கிறார். இதன்படி நெல்லையில் புதிய அண்ணாப் பல்கலைக் கழகம் துவங்கப்பட உள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான அணைகள் நிரம்பத் தொடங்கியுள்ளன. நேற்று மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு நீர் திறந்து விடப்பட்டது. இதனால் 11 மாவட்டங்களில் குறுவை 1.50 லட்சம் ஏக்கரும், 11 லட்சம் ஏக்கர் சம்பா நிலமும் பயனடையும் என பொதுப் பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வங்கிகள், பெட்ரோல் நிலையங்களை அடுத்து நாடு முழுவதும் உள்ள தபால் அலுவலங்களில் ரயில் டிக்கட்டுகள் விற்பனை செய்யும் திட்டம் விரைவில் தொடங்க உள்ளதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தல் மூலம் புதிய குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதன் முடிவுகள் சனிக்கிழமை தெரியவரும். குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏக்களின் அவசர கூட்டத்தை ஜெயலலிதா கூட்டியிருக்கிறார். இதனிடையில் பிரதீபா பற்றி குற்றச்சாட்டுகள் குறித்த புதிய புத்தகம் இன்று காலை டெல்லியில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் உளவு செயற்கை கோளை வாணிப ரீதியில் எதிர்வரும் செப்டம்பரில் விண்ணில் செலுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இஸ்ரேல் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துவதால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு 60 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.
இந்தியா அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் இறுதி கட்டத்தை நெருங்கியிருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருக்கிறார்.
1993லில் நிகழ்ந்த மும்பை குண்டு வழக்கில் மூன்று பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து தடா நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. நேற்று மரணதண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரையும் சேர்த்து மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்ற சாட்டப்பட்ட நூறு பேரில் 81 பேருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 14பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு உதவியுடன் மருத்துவம் படித்துவிட்டு பாமர மக்களுக்கு புரியாத ஆங்கிலத்தில் பேசி மருத்துவம் செய்வது வேதனை அளிப்பதாக இருக்கிறது என கவிஞர் கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
தினமலர் நாளேட்டின் நிர்வாகியும் ராமசுப்பு என்ற அந்துமணி என்ற ரமேஷ் மீது பெண்கள் மீதான கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட்ட மூன்று சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்துமணி முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்

அப்பாவிகளின் ரத்தத்தால் சிவந்த சிவப்பு மஸ்ஜித்

பாகிஸ்தானின் புகழ்பெற்ற லால் மஸ்ஜிதில் பாகிஸ்தானின் ராணுவம் நடத்திய தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் பலியாயினர். அதில் பெரும்பாலானோர் அப்பாவி மதரஸா மாணவர்கள் மற்றும் மாணவிகள். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இதயப் பகுதியில் அமைந்துள்ளது லால் மஸ்ஜித். இந்த சிவப்பு பள்ளிவாசல் வளாகத்தில் ஜாமியா ஹஃப்ஸா என்ற பெண்கள் மதரஸாவும், ஜாமியா ஃபரிதிய்யா என்ற ஆண்கள் படிக்கும் மதரஸாவும் செயல்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு துவக்கத்திலிருந்தே 'லால் மஸ்ஜித்' முதல் பக்க செய்தியானது. மார்ச் மாதம் 27ல் விபச்சார விடுதியில் தேடுதல் வேட்டையை நடத்தி குற்றவாளிகளை சிறைப்பிடித்தது.
மார்ச் 28ல் இதைத் தட்டிக் கேட்ட மதரஸா மாணவிகளை சிறைப் பிடித்ததற்கு பதிலடியாக, மூன்று காவல்துறையினரை மதரஸா மாணவிகள் சிறைப்பிடித்தனர்.மார்ச் 30ல் ஆபாச சி.டி.க்களை விற்பனை செய்துவரும் கடைகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
ஏப்ரல் 6ல் லால் மஸ்ஜிதில் ஷரீஅத் நீதிமன்றம் நிறுவப்பட்டது.
ஏப்ரல் 9ம் தேதி ஷரீஅத் நீதிமன்றத்தில் முதன்முதலாக ஃபத்வா பிரயோகிக்கப்பட்டது. கிளைடர் விமானத்தில் பறந்த அமைச்சர் நிலோஃபர் பக்தியார் ஆபாச உடை உடுத்தியதற்காக அவர் மீது ஃபத்வா பிரயோகிக்கப்பட்டது.
மே 19ம் தேதி மதரஸா மாணவர்களை கைது செய்ததற்காக நான்கு காவல்துறையினரை மதரஸா மாணவர்கள் சிறைப் பிடித்தனர்.
ஜூன் 23ம் தேதி அக்குபஞ்சர் மருத்துவமனை என்ற பெயரில் விபச்சார விடுதி நடத்தியதாக குற்றம்சாட்டி சீனாவைச் சேர்ந்த ஆறு பெண்கள் உட்பட 9 பேர் கடத்தப்பட்டனர். அத்தோடு சீன அரசின் கடும் ஆட்சேபனை பாகிஸ்தான் அதிபரிடம் தெரிவிக்கப் பட்டது.

இதனிடையில் அரசுக் கும் லால் மஸ்ஜிதுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமடை வதைத் தடுக்க இருதரப் பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சவுத்ரி சுஜாத் ஹுஸைன் மற்றும் பிரதமர் சவுகத் அஜீஸ் இருவரிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. ஜூன் முதல் வாரத்தில் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு புனித மக்கா ஹரம் ஷரீஃபின் இமாம் சுதைஷ் முயற்சி மேற்கொண்டு நான்கு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதற்கிடையில் சீனப் பெண்களைக் கடத்திய சம்பவத்தால் இருதரப்புக்கும் இடையிலான தொடர்பு மோசமானது.
ராணுவ நடவடிக்கை எடுக்க முடிவெடுத்ததைத் தொடர்ந்து 1,250 மாணவர்கள் சரணடைந்தனர்.
'ஆபரேஷன் சைலன்ஸ்' ஆரம்ப மானது. முதலில் ராணுவத்தை எதிர்த்து மாணவர்கள் தாக்குப் பிடித்தனர். ராணுவ துணைத் தளபதி உள்பட 10 கமாண்டோக்கள் பலியாயினர்.
லால் மஸ்ஜிதின் மீது தாக்குதல் நடத்தினால், தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மதரஸா மாணவர்கள் தங்களுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் குதிப்பார் கள் என தப்புக் கணக்கு போட்டனர் அப்துல் அஜீசும் அப்துல் ரஷீதும். தேவ்பந்த் (5,400 மாணவர்கள்) பர்லவியில் (3000 மாணவர்கள் லி 46 மதரஸாக்கள்) அஹ்லே ஹதீத் (200 மாணவர்கள் லி 2 மதரஸாக்கள்) எட்டு ஷியா மதரஸாக் களில் 700 மாணவர்கள் மற்றும் ஜமாஅத்தே இஸ்லாமியின் ரபிதா அல் மதரஸா (இதில் 18 மதரஸாக்களில் உள்ள 1500 மாணவர்களும்) இவர்கள் அனை வரும் தங்களுக்காக போராட்டத்தில் குதிப்பார்கள் என எதிர்பார்த்து ஏமாந்தனர்.
கடைசியில் மாணவிகளோடு மறைந்து பர்தா அணிந்து தப்பிக்க முயன்ற அப்துல் அஜீஸ் கைது செய்யப்பட்டார்.
இறுதிவரை போராடி இளையவர் அப்துல் ரஷீத் மரணமடைந்தார். அப்துல் ரஷீத், அப்துல் அஜீஸ் சகோதரர்களின் 80 வயது தாயாரும் மரணமடைந்தார்.
இதில் அப்துல் ரஷீத், ராணுவ தாக்குதலில் பலியான நேரத்தில், அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அவரது மனைவி ஹுமைரா தனது சகோதரன் வீட்டில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
நூற்றுக்கும் குறைந்த அளவே ராணுவ நடவடிக்கையில் பலியானதாக அரசு தெரிவித்தது. ஆனால் அதே அரசு 400 கஃபன்களை (சவத்துணி) தயாரிக்குமாறு அப்துல் சத்தார் எத்ஹி பவுன்டேஷன் எனும் தன்னார்வ நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. அப்துல் சத்தார் ஊடகங் களிலும் உண்மையை போட்டுடைத்தார்.
ஏராளமான அப்பாவிகளின் உயிரைக் குடிக்கும் அளவு நிலைமையை முற்றவிட்ட லால் மஸ்ஜித் நிர்வாகத்தின் செயல்அனைத்து மார்க்க பெரியவர்களாலும் கடுமையாக கண்டிக்கப்பட்டது.
வன்முறைகளாலும் கட்டாயப்படுத்து தலாலும் மிரட்டலினாலும் 'நல்ல குறிக்கோள்களே' ஆனாலும் அது கடும் விமர்சனத்துக்குள்ளானது.
அநேகமாக இந்த 21ஆம் நூற்றாண்டில் சொந்த மக்களைக் கொன்ற ஒரே நாட்டின் அதிபர் முஷாரப் மட்டுமே என நடுநிலையாளர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் அரசு நிலைமையை சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் முயற்சி செய்யாமல் இரக்கமற்ற முறையில் செயல்பட்டது நிச்சயம் கண்டிக்கத்தக்கது.
சீன அதிபரும், அமெரிக்க நிர்வாகமும் திருப்தியடைந்தால் போதும் என்ற அளவில் செயல்பட்ட முஷாரப், முழுமையான ஆதரவை அரசியல் கட்சிகளிடம் பெற்று விட்டாலும், உலக அளவில் தனது கவுரவத்தை சற்றுக் குறைத்துக் கொண்டு விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
பாகிஸ்தான் இன்று முஷாரப் எதிர்ப்புணர்வால் தகித்துக் கொண்டிருக் கிறது. மேற்குலகில் முஷாரப் தனது நடவடிக்கைகளுக்காக பாராட்டப் படுகிறார். நூற்றுக்கணக்கான அப்பாவி களின் உயிர்களுக்கு யாரால் பதில் சொல்ல முடியும்

Wednesday, July 18, 2007

கலாம் அடுத்த நாளே அண்ணாப் பல்கலைக் கழகத்திற்கு

கலாம்
அடுத்த நாளே அண்ணாப் பல்கலைக் கழகத்திற்கு
குடியரசுத் தலைவர் பதவியிலிருந்த ஓய்வு பெற்ற உடன் அப்துல் கலாம் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் பணியை துவங்குகிறார். இத்தகவலை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் விசுவநாதன் தெரிவித்திருக்கிறார். தான் குடியரசுத் தலைவர் பதவியை விட்டு ஓய்வு பெற்றதும் ஆசிரியர் பணிக்குத் திரும்புவேன் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
கலாமின் பதவிக்காலம் இம்மாதம் 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு மறுநாளே அவர் அண்ணா பல்கலைக் கழத்துக்கு வருவதும் கௌரவ பேராசிரியர் பணியில் இணைவதும் சிறப்புக்குரியது. அண்ணா பல்கலைக் கழகக்ததிலிருந்து வீடியோ கான்ஃப்ரன்ஸ் வழியாக தமிழகத்தின் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் கலாம் வகுப்பெடுக்க உள்ளதாக அண்ணா பல்கலைக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக அண்ணாப் பல்கலைக் கழக துணை வேந்தர் டி. விசுவநானிடம் கலாம் தொலைபேசியில் பேசியுள்ளார். எனினும் தனக்கு வரவேற்பு விழா எதையும் ஏற்பாடு செய்யக் கூடாது என திட்டவட்டமாக கலாம் தெரிவித்து விட்டார்.

Sunday, July 15, 2007

டாக்டர் ஹனீஃபை விடுவிக்க ஆஸ்திரேலியா மறுப்பு!

டாக்டர் ஹனீஃபை விடுவிக்க ஆஸ்திரேலியா மறுப்பு
!14 நாட்களுக்குப் பிறகு திடிர் குற்றச்சாட்டை சுமத்தியது. அவரை எதிர்பார்த்து மனைவியும் பெற்றோரும் ஏமாற்றம்.
இது ஒரு நாடகம் என ஆஸ்திரேலியாவுக்கான முன்னாள் இந்திய தூதர் சி.ஜே.ராவ் கருத்து தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் கிளாஸ்கோவில் நிகழ்ந்த வாகன குண்டு வெடிப்பு தொடர்பாக ஆஸ்திரேலியாவின் பிடிக்கப்பட்டு விசாரிக்கப் பட்டு வரும் ஹனீஃப் மீது ஆரம்பம் முதலே எவ்வித குற்றச்சாட்டும் இல்லை. சம்பிரதாயப் பூர்வமான விசாரணை மட்டுமே இது என ஆஸ்திரேலிய நிர்வாகம் நேற்று அதிகாலை வரை அறிவித்து வந்தது. ஆஸ்திரேலியக் காவல்துறையின் சாதாரண அதிகாரி முதல் ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஜான் ஹோவர்டு வரை ஹனீஃப் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை என்று கூறினர். பெங்களூர் காவல்துறையும் ஹனீஃபின் வீட்டில் எந்த தடயமும் கிடைக்க வில்லை என்று ஏற்கெனவே அறிவித்தது குறிப்பிடத் தக்கது.பத்திரிகைகளில் ஹனீஃப் இன்று விடுவிக்கப் படுவர். நாளை விடுவிக்கப்படுவார் என ஆருடங்கள் கூறப்பட்டு வந்த நிலையில் நேற்று அதிகாலை சனிக்கிழமை (14.07.07) முஹம்மது ஹனீஃப் மீது திடீரென குற்றச்சாட்டு ஒன்றை ஆஸ்திரேலியக் காவல்துறை தெரிவித்துள்ளது. கஃபிலின் சகோதரர் சபீலுக்கு சிம் கார்டு கொடுத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளது.வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டுமென ஆஸ்திரேலியாவுக்கான முன்னாள் இந்தியத் தூதுவர் சி.ஜே.ராவ் தெரிவித்திருக்கிறார். திறமை வாய்ந்த குற்றவியல் வழக்கறிஞர் ஒருவரை அமர்த்தினால் ஹனீஃபை காப்பாற்றும் வாய்ப்பு உள்ளது என்றும் சி.ஜே. ராவ் தெரிவித்துள்ளார். 27 வயதான ஹனீஃப் அண்மையில் தனக்கு பிறந்த பெண் குழந்தையை முதன் முதலாக தற்போது தான் பார்க்கப் போகிறார் என ஏக்கத்துடன் காத்திருந்த அவரது மனைவி பிர்தவ்ஸ் அர்ஷியா சோகத்தில் மூழ்கினார். ஹனீஃப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு அடிப்படையற்றதாகும் என்றார். சிம் கார்டு ஒருவருக்கு கொடுப்பதாலே யாரும் குற்றவாளியாக மாட்டார்கள் என்றும் ஃபிர்தவ்ஸ் அர்ஷியா தெரிவித்தார்.சர்வதேச பொது மன்னிப்புச் சபை ஹனீஃபை விடுவிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. கஃபில் மட்டுமே சம்பவத்துக்கு தொடர்புடையவர் ஹனீஃபுக்கு எந்த தொடர்பும் இல்லை என இந்திய புலனாய்வுத் துறை ஏற்கெனவே அறிவித்திருக்கிற

Wednesday, July 11, 2007

தூய இதயங்களுக்கு ஓர் ஒத்தடம்

200பேரை ப்லி கொண்ட அந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்து இன்று ஓராண்டு ஆகிவிட்டது.ஈடு செய்யமுடியாத இழப்பினை சந்தித்தவர்களுக்கு ஆறுதல் கூறும் மனோதிடம் யாருக்கும் இல்லை எனினும் அவர்களின் ஆறுதலுக்காகவும் மனநிம்மதிக்காகவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.கொடுமையான அந்த நிகழ்வுக்குப்பிறகு ஏராளமான அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை வளைத்துப்பிடித்து சிறைகொட்டடிகளில் அடைக்கப்பட்ட மனித உரிமை மீறலை மன்னிக்கவே முடியாது.ஆனால் அதே வேளையில் முஸ்லிம் சமுதாயத்தின் மீது வெறுப்புனர்வை புல்லுருவிகள் எங்கும் பரப்பிய நேரத்திலும் கூட தங்கள் உயிரை துச்சமாக எண்ணிஉயிர் காக்க விரைந்த அந்த தியாக உள்ளங்களை மறக்கமுடியுமா?அந்த தூய உள்ளங்களை பாராட்டும் விதமாக அவர்கள் இதயங்களுக்கு ஒத்தடம் போடும் வகையில் இந்த செய்திக்கட்டுரையை வெளியிடுவதில் பெருமிதம்கொள்கிறோம்..மும்பை: பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய முஸ்லிம்கள்!அபூசாலிஹ்இந்தியாவின் 'நியூயார்க்' என அழைக்கப்படும் மும்பையில் ஜூலை 11ஆம் தேதி பதற வைக்கும் பயங்கர தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. உழைத்து களைத்து மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பும் பரபரப்பான மாலை நேரத்தில் போர்வில்லி, ஜோகேஸ்வரி, பாந்த்ரா, மாதுங்கா உள்ளிட்ட ஏழு புறநகர் ரயில் நிலைய மின்சார ரயில்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததாக தகவல் கள் பரவின. 200க்கும் அதிகமான உயிர்களைப் பலிகொண்ட ஏறக்குறைய 700 பேருக்கு மேல் படுகாயம் அடைந்த இந்தக் கோர நிகழ்வில் தன்னலம் கருதாது சேவைகளாற்றிய கருணை உள்ளங்களைப் பற்றி தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.காவல்துறைக்கு முன்பாகவே களத்தில்...ஃபயாஸ் என்ற 30 வயது இளைஞர் தனது வீடு இருக்கும் நவ்படா பகுதியை நோக்கி மேம்பாலத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்தார். இதயத்தை அதிர வைக்கும் சத்தம் ரயில் பாதையில் கேட்டது. ரயில் வரும் திசை நோக்கி ஃபயாஸ் ஓடினார். ஏதோவொரு பெட்டியிலிருந்து கறும்புகை வந்து கொண்டிருக்கிறது. ரயில் நகர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் மனிதர்கள் வெளியே விழுந்து கொண்டே இருக்கிறார்கள். பிணமாகவும், குற்று யிராகவும் அருகிலுள்ள பாலத்தை அடைந்தபோது ரயில் தானாகவே நின்றுவிட்டது. குண்டுவெடிப்பினால் ரயில் பெட்டியின் துண்டுகள் 80லிருந்து 100 மீட்டர்கள் வரை சிதறி இருக்கின்றன.இதயத்தைக் கிழித்துப் போடும் கூக்குரலைக் கேட்ட ஃபயாஸ், உதவிக்கு ஆட்களை அழைத்துவர ஓடினார். நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் மீட்புப் பணிகளில் இறங்கினர்.கோர நிகழ்வு நிகழ்ந்து நெடுநேரம் ஆகியும் சம்பவ இடத்திற்கு காவல் துறையினரும் வரவில்லை, ரயில்வே அதிகாரிகளும் வரவில்லை. நாங்கள் செல்லத் தேவையில்லை, நீங்கள் முதலில் செல்ல வேண்டும் என்று இரண்டு துறையினருக்கும் குடுமிபிடிச் சண்டைகள் நடந்த தகவல் பின்னர் தெரிய வந்தது. ரயில்வே எல்லைக்குள் பொது காவல் துறையிருக்கு அதிகாரம் இல்லை என்பதும் ஒரு காரணம்.பாதிக்கப்பட்டவர்களை மீட்க மிகவும் சிரமப்பட வேண்டி இருந்ததாக சொலன்கர் கூறுகிறார். இவரைப் போன்ற இளைஞர்கள் 'அல்லிஹிந்த் ஏக்தா சொஸைட்டி' ஒருங்கிணைத்தது.பல உடல்கள் சிதைந்த நிலையில் இருந்தன. சில மட்டுமே எளிதில் அடையாளம் காணக்கூடிய நிலையில் இருந்தன. சில உடல்கள் திகிலூட்டும் வண்ணம் இருந்தன. தாமதமாக வந்த காவல்துறையினர், நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததாக சொலன்கர் குறிப்பிடுகிறார்.பிணங்களையோ, படுகாயமுற்றவர்களையோ அவர்கள் தொட்டுத் தூக்க முயற் சிக்கக் கூட இல்லையாம். கைகளை இழந்த மக்கள், தோள்பட்டை நசுங்கிய வர்கள், மற்றும் உறுப்புகள் இடுக்குகளில் சிக்கி வேதனை பொறுக்க இயலாமல் கதறியவர்கள் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்கு அனுப்ப வேண்டிய மிகக்கடினமான பணி இந்த இளைஞர்களுக்கு. பாதிக்கப்பட்டோரை உடைந்த ரயில் பெட்டி யில் இருந்து மீட்கும்போது மிகுந்த உடல் சிரமமும் சமயோகிதமும் தேவைப் பட்டது. ரயில் நிலையத்தில் இரண்டு ஸ்ட்ரெச்சர் மட்டுமே இருந்தன. படுகாயம் அடைந்த வர்களையும், பலியானவர்களையும் போர்வைகளில் தூக்கிப் போட்டுக் கொண்டு செல்ல வேண்டிய நிலை.படுகாயம் அடைந்தவர்களை தூக்கிச் செல்லும்போது தோள் பட்டைகள் வலியெடுக்க ஆரம்பித்ததால் அடுத்து பாதிக்கப்பட்டவர்களைத் தூக்குவதற்கு முன் நொறுங்கிக் கிடந்த முதல் வகுப்பு பெட்டியிலிருந்த இருக்கைகளை முழு பலத்தையும் பிரயோகித்து எடுத்து அந்த இருக்கைகளின் மீது பாதிக்கப்பட்டவர் களும், படுகாயம் அடைந்தவர்களும் வைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.முஸ்லிம் சேவைப் படையினர் சுற்றுப்புறங்களில் கிடந்த மொபைல் போன்களையும், உடைமைகளையும் அருகிலுள்ள காவல் நிலையங்களில் ஒப்படைத்து, அதை முறைப்படி அறிவிக்கவும் செய்தனர்.குண்டு வெடித்தபோது பாந்த்ரா ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள கரிப் நகர மக்கள் கேஸ் சிலிண்டர் வெடித்ததாக நினைத்திருந்தனர். ஆனால் சலீம் குரைஷி என்ற காங்கிரஸ் பிரமுகர் மட்டும் தனது வீடியோ கேமராவை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். ஏதோ விபரீதம் ஏற்பட்டுள்ளது என்று அவரது உள் மனது கூறியதாம். நில அதிர்வும் கரும்புகையும் நடந்தது குண்டுவெடிப்புதான் என்பதை உணர்த்தவே, தனது வீடியோ காமிராவில் நடப்பதைப் பதிவு செய்யத் தொடங்கி யுள்ளார். இறந்த உடல்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.காயம் அடைந்தவர்களில் பெரும் பாலோரின் நிலை மிகவும் அபாயக் கட்டத்தில் இருந்ததையும் அது காட்டியது. சில உடல்கள் தலைகள் இல்லாமல் கிடந்தன. சலீம் குரைஷியின் வீடியோ காட்சிகள் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்டன. பல மீட்புப் பணிகள் பதிவாகி உள்ளன. அஸ்லம் என்ற ரிக்ஷாகாரர் உடல்களை அடுக்கி நகர்த்த முடியாமல் கிட்டத்தட்ட தவழ்ந்து செல்வதைப் போல தனது ரிக்ஷா வாகனத்தில் உடல்களைக் கொண்டு சென்றதையும் அந்த படப்பதிவு காட்டியது.மருத்துவமனை நோக்கி...ஜோகேஸ்வரி ரயில் நிலையத்துக்கு வெளியே தையற்கடை வைத்திருக்கும் அக்தர் ஹுஸைன், குண்டுவெடித்த சப்தத்தைக் கேட்டவுடன் நண்பர்களை அழைத்துக் கொண்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டார். மீட்புப் பணிக்கு வசதியாக மதில் சுவரின் ஒரு பகுதியை இடித்த பின்பு அவர்கள் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். தங்கள் தோள்களில் காயம்பட்டோரையும், பலியானோரையும் சுமக்க ஆரம்பித் தனர்.13 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஜோகேஸ்வரி பகுதியில் இருந்த முஸ்லிம்கள் பலர் இருப்பிடங்களை விட்டு விரட்டப்பட்டனர். இன்றுவரை அந்தக் காட்சி என் முன்பே நிழலாடியது. ஆனால் இப்போது அது மறைந்து என் ஹிந்து சகோதரர்களை காப்பாற்றுவதே என் முன் உள்ள ஒரே குறிக்கோளாக இருந்தது என்கிறார் அக்தர் ஹுஸைன்.மீட்புப் பணிகளுக்கு மேலும் ஆட்கள் தேவையாக இருக்கவே முமீன் காலனி மற்றும் ஹாஜுர்வாடி பகுதியிலுள்ள இளைஞர்களும் அழைக்கப்பட்டனர். ஆதரவுக் கரங்கள் அதிகரிக்கவும் உதவிகளும் வரத் தொடங்கின.முமீன் காலனி முஸ்லிம் இளைஞர்கள் தங்கள் வீடுகளிலிருந்து சிறிய மெத்தை கள், மற்றும் போர்வைகள் எடுத்து வந்தனர். அந்த மெத்தைகளும், போர்வைகளும் இறந்தவர்களை தூக்கிச் செல்ல பயன்படுத்தப்பட்டன. இந்த சேவையில் 65 வயது முதியவரான அக்தரின் தந்தையும் பங்கேற்றார்.மருத்துவமனைகளில் காத்திருந்த அதிர்ச்சிபாதிக்கப்பட்டவர்களையும், பலியானவர்களையும் சுமந்து சென்ற கருணை உள்ளங்கள் மேலும் ஒரு அதிர்ச்சியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நாடே பதறிய மும்பை மாநகரே கதறிய அந்தக் கொடிய சம்பவத்தைக் கண்ட பிறகும் தனியார் மருத்துவமனை கள், காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தது. இளைஞர்களுக்கு ஆத்திரம் பீறிட்டது, எனினும் அடக்கிக் கொண்டனர். இதில் சில மருத்துவ மனைகள் கதவுகளை அடைத்துக் கொண்டன (என்னே மனிதாபிமானம்?)படுகாயம் அடைந்தவர்களையும், பலியானவர்களின் உடல்களையும் சுமந்து கொண்டு கூப்பர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.ரத்த தானம் செய்வதிலும் முன்னின்ற முஸ்லிம் இளைஞர்கள்சித்தார்த் மருத்துவமனையின் ரத்த வங்கியில் முண்டியடித்துக் கொண்டி ருக்கும் ஒரு முஸ்லிம் இளைஞர் கூட்டம்.இந்த ரத்தம் ஒரு உயிரைக் காக்கப் பயன்படும் என்றால் எனக்கு மகிழ்ச்சியே என்கிறார் அப்துல் கான். இதை ராய்ட்டர் செய்தி நிறுவனம் பதிவு செய்துள்ளது.சிலர் மக்களின் ஒற்றுமையைக் குலைக்க முயற்சித்தார்கள். ஆனால் அவர்கள் தோற்றுக் கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள் என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் இஸ்லாமியா அராபியா பள்ளிவாசலின் முக்கியஸ்தர் பாஷா மியான் ஷேக்.மக்களைப் பிரிக்கும் கொள்கையாளர்கள் இவர்களைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றார் முன்னணி முஸ்லிம் பிரமுகர் மவ்லானா ஜலாலுத்தீன் உமரி.குண்டு வெடிப்புகளால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு மும்பை மாநகரில் பிரபல இஸ்லாமியா அராபியா பள்ளிவாசலின் கதவுகள் நாள் முழுவதும் திறந்திருந்தன. காயம் அடைந்தவர்களுக்கு உறைவிடம், உணவு, குடிநீர், அவசர மருத்துவ வசதிக்கான பணியில் மும்பை இஸ்லாமிய அராபியா பள்ளிவாசல் சேவை சின்னமாக பாராட்டப் பெற்றது.ரத்தம் வழங்கிய முஸ்லிம் சகோதரர்களுக்கு தங்களின் கண்ணீரால் நன்றி செலுத் தினர் ஹிந்து சமுதாய மக்கள்.இது மும்பையின் நிஜ முகம். இனி இதை யாராலும் வெல்ல முடியாது என்று கூறுகிறார் குண்டு வெடிப்பில் காயம் அடைந்து சிகிச்சைப் பெற்றுவரும் லதா சிரிஷா என்ற ஹிந்து சகோதரி.குண்டு வெடிப்பு தொடர்பான செய்திகளை வெளியிடும் ஊடகங்களில் பெரும்பாலானவை முஸ்லிம்களை நேரடியாகவோ அல்லது மறைமுக மாகவோ வேதனைப்படுத்தும் வண்ணமே செய்திகளை வெளியிடுகின்றன.அவர்களுக்கெல்லாம் 'சகோதரத்துவ' பாடங்களை வழங்கும் வண்ணம் முஸ்லிம் இளைஞர்களின் சேவை அமைந்திருக்கிறது.நவ்படா, கரிப் நகர், பெஹ்ராம்படா போன்ற பகுதிகள் 1992லி93ல் சிவசேனையினர் நிகழ்த்திய வெறியாட்டத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏராளமானவர்கள் உடமைகளை இழந்தனர். உறைவிடங்களையும் இழந்தனர். அப்போது நாட்டு மக்களின் அனுதாபத்தைப் பெற்ற அவர்கள் தற்போது தேசத்தின் ஒட்டுமொத்த கண்ணியத்தையும் பெற்று விட்டார்கள்.குண்டு வெடிப்பினைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்காக உரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங், இந்தியாவை எவராலும் மண்டியிட வைக்க முடியாது என்றார்.உண்மைதான். ஃபயாஸ் போன்ற வர்களும், அக்தர் ஹுஸைன் போன்ற வர்களும் இருக்கும்வரை இந்திய மக்களின் ஒற்றுமையை எவனும் குலைக்க முடியாது.பதவி சுகத்திற்காக மக்களை மோதவிட்டு ரத்தம் குடிக்கும் உள்நாட்டு பயங்கர வாதிகளும், அன்னிய நாட்டின் ஒத்துழைப்போடு சதிச்செயல் புரியும் வெளிநாட்டு பயங்கரவாதிகளும் தோல்வியைத் தழுவுவது திண்ணம்

Saturday, July 7, 2007

வீணாப் போனவனுக்கு விருது
உலகமெல்லாம் வாழும் முஸ்லிம்கள் தங்கள் உயிரினை விட மேலாகக் கருதும் நபிகள் பெருமானாரை தன்னுடைய satanic versusஎன்ற நூலில் இழிவுபடுத்தி எழுதிய கெடுமதியாளன் சல்மான் ருஷ்டி இந்தியா உள்பட உலக நாட்டு மக்களால் வெறுக்கப்பட்டான். இந்தியா உள்பட பல நாடுகளில் அவன் எழுதிய சர்ச்சைக்குரிய நூலுக்கு தடை விதிக்கப்பட்டது. ஈரான் போன்ற நாடுகளில் ருஷ்டிக்கு மரண தண்டனை விதித்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அறிவிக்கப்படாத சிறைக் கைதியாக 18 ஆண்டுகளாக அஞ்சி நடுங்கி வாழ்ந்திருந்தார் சல்மான் ருஷ்டி. சல்மான் ருஷ்டி போன்றவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுத்து வந்த பிரிட்டன் மனிதாபிமான முறையிலே அடைக்கலம் கொடுத்து வந்ததாக கூறிக் கொண்டது. நாங்கள் எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் போன்றவற்றைக் காப்பாற்றவே பிறந்தவர்கள். அதனால் ருஷ்டிக்கு ஆதரவு வழங்குவது உள்நோக்கம் கொண்டதல்ல என பூசி மொழுகினர்.
ஆனால் அவையெல்லாம் உண்மையல்ல மேற்கத்திய சக்திகளின் இஸ்லாமிய எதிர்ப்புணர்வுதான் ருஷ்டியின் மீது அவர்கள் அனுதாபம் காட்டுவதற்குக் காரணம் என்பதை கடந்த வாரம் நிகழ்ந்த ஒரு நாகரீகமற்ற கீழ்த்தரமான செயல் அம்பலப்படுத்தியுள்ளது.
பிரிட்டிஷ் அரண்மனை வழங்கும் உயரிய விருதான 'சர்' பட்டத்தை ருஷ்டிக்கு வழங்கியுள்ளது. இதன்மூலம் 'சர்' பட்டத்தையும், தனது நாட்டின் கவுரவத்தையும் பிரிட்டன் கெடுத்துக் கொண்டது.
பிரிட்டனின் இந்த அறிவிப்பு உலகம் முழுவதும் வாழும் மக்களிடையே கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ருஷ்டிக்கு 'சர்' பட்டத்தை அறிவித்தவுடன் ஈரான் தனது கண்டனத்தை பிரிட்டன் தூதரை அழைத்து நேரிடையாக தெரிவித்தது.
மதங்களுக்கு இடையிலான உறவினைக் கெடுக்கும் செயலை பிரிட்டன் செய்து விட்டதாக இந்தோனேஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஹஸன் விராஜுடா தெரிவித்துள்ளார். டென்மார்க் பத்திரிகை வெளியிட்ட பெருமானார் அவமதிப்பு சம்பவத்தை விட பிரிட்டன் அரசு செய்தது கீழான செயல் என எகிப்து நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.
மலேசியாவில் முஸ்லிம்கள் திரளாகச் சென்று பிரிட்டன் தூதரகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
ஈராக்கிலும் பிரிட்டனின் செயலை எதிர்த்து கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.பாகிஸ்தானில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவ, ஹிந்து தலைவர்களும் பங்கேற்றனர். உடனடியாக பிரிட்டன் தனது அறிவிப்பையும் விருதையும் திரும்பப் பெறவேண்டும் என பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
எதிர்ப்பலைகளின் உச்சக்கட்டமாக பாகிஸ்தானின் சிந்து மாகாண முதல்வர் டாக்டர் அர்பாப் குலாம் ரஹீம் தனது தாத்தாவுக்கு முன்பு பிரிட்டிஷ் அரசு வழங்கிய 'சர்' என்னும் கவுரவ பட்டத்தை தூக்கி எறிவதாக பகிரங்கமாக அறிவித்தார்.
முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ தனது தாத்தாவுக்கு பிரிட்டன் அரசு வழங்கிய 'சர்' பட்டத்தை திருப்பியடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ருஷ்டி மற்றும் பிரிட்டிஷ் ராணி எலிசபெத்தின் உருவ பொம்மைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. உடனடியாக பிரிட்டன் அரசு தங்கள் அறிவிப்பினையும் விருதினையும் திரும்பப் பெறவேண்டும் என்று கிறிஸ்தவப் பேராயர் ரெஹ்மட், இஸ்லாம் ஆன்லைன் வலைதளத்தின் நேர்காணலில் தெரிவித்தார்.
சல்மான் ருஷ்டிக்கு கண்டிப்பாக விருது கொடுத்தே ஆக வேண்டும் என்ற ஆசை பிரிட்டனுக்கு இருந்தால் 'உங்ஸ்ண்ப் நண்ழ்' (பிசாசு சர்) என்று விருது கொடுத்து அழைத்துக் கொள்ளட்டும் என்று கூறிய பிராட்டஸ்டன்ட் கிறிஸ்தவ திருச்சபையின் தலைவர் பிஷப் ஏஜாஸ் இனாயத், பிரிட்டிஷ் அரசு கோடிக்கணக்கான முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை அவமானப்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேரும் கிறிஸ்தவர்களும் ஒன்றல்ல. முஸ்லிம்கள் ருஷ்டியை விரும்புவதில்லை. அவ்வாறே கிறிஸ்தவர்கள் டோனி பிளேரை விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம் லி கிறிஸ்தவ ஒற்றுமையைக் குலைக்கும் சதி இது என்றும் அவர் எச்சரித்தார்.
இது சமூக ஒற்றுமையைக் குலைக்கும் முயற்சி என்றும் ஹிந்துக்கள் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் கராச்சி ஹிந்து சமுதாயத்தின் தலைவர் ரோபின்தாஸ் தெரிவித்தார்.
இதற்கிடையில் 2000 உலமாக்களைக் கொண்ட உலமா கவுன்சில் அறிவித்த அதிரடி அறிவிப்பு மேற்குலகை எரிச்சலில் ஆழ்த்தியது.முஸ்லிம்களை எரிச்சலில் ஆழ்த்த பிரிட்டன் அரசு சல்மான் ருஷ்டிக்கு விருது அளித்ததற்கு பதிலடியான அறிவிப்பாக அது அமைந்தது.
அல்காயிதா என்ற அமைப்பின் நிறுவனர் உஸாமா பின்லேடனுக்கும், பிரபல ஆப்கன் தலைவர் முல்லா உமருக்கும் அல்லாஹ்வின் வாள் என்ற அர்த்தம் தொனிக்கும் 'சைபுல்லாஹ்' என்ற பெயரில் விருது வழங்குவதாக அறிவித்து விட்டனர்.
உலக அமைதியின் பாதுகாவலனாக தன்னை அழைத்துக் கொண்ட பிரிட்டன், தனது முதிர்ச்சியற்ற செயலால் சேற்றில் சிக்கிய யானையாய் தவிக்கிறது

Friday, June 29, 2007

முதல்இ ந்திய சுதந்திரப் போர்1857;
வரலாற்றுப் பக்கங்களில் மறைக்கப்பட்ட மாவீரர்கள்
அபூசாலிஹ்
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்த முஸ்லிம்களின் தியாகம், வரலாற்றின் நெடிய பக்கங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டது.
பகதூர்ஷா ஜாஃபரும், சிராஜுத் தவ்லாவும், மைசூர் வேங்கை ஹைதர் அலியும், அவரது மகன் வீரத் திப்புவும், கரிய மனம் கொண்ட கயவர் களாலும் மறைக்க முடியாத அளவு மக்களின் மனதில் நிலை நிறுத்தப்பட்டதால் வரலாற்றின் பக்கங்களில் இந்த வீரக் கதாநாயகர் களின் வாழ்வு வெளிச் சத்துக்கு வந்தது. இந்த வெளிச்சத்தின் ஒளிச் சத்து பரவி இன்றும் இந்தியத் தலைமுறை யினரின் நாடி நரம்பு களை முறுக்கேற்றி நாட்டுப் பற்றும் வீர உணர்வும் பெருக் கெடுத்து ஓடச் செய்து வருகிறது. மறைக்கப்பட்ட மாவீரர்களின் உயிர்த் தியாகம் பாடநூல்களிலும் வரலாற்று ஆய்வுகளிலும் வெளிவந்தால் இந்திய மக்களின் மனதில் புதிய உத்வேகமும் வீர உணர்வும் கூர் தீட்டப்படும்.

'முதல் இந்திய சுதந்திரப் போர்' என்ற சிப்பாய் புரட்சிக்கு முன்பாகவே ஆங்கிலேயரை எதிர்த்து ஆர்த்தெழுந்த வர்கள் முஸ்லிம் மாவீரர்களே. அதிலும் முஸ்லிம் மார்க்க அறிஞர்களின் தியாகம் லி வீரப் போர், மெய்சிலிர்க்க வைத்தது.
2 லட்சம் பேர் சிப்பாய் புரட்சியில் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். அதில் 51,200 பேர் உலமாக்கள் எனப்படும் முஸ்லிம் அறிஞர்கள் ஆவார்கள். அவர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்தனர், வீரமரணம் அடைந்தனர். தலைநகர் டெல்லியில் மட்டும் 500 உலமாக்கள் வீரமரணம் அடைந்தனர் என்ற உண்மைகள் எத்தனைப் பேருக்குத் தெரியும்?
மன்னர் பகதூர்ஷா
ஆனால் மார்க்க நெறிகளை மட்டுமே வரையறைப்படுத்திய அந்த உலமா பெரு மக்கள் சிந்திய ரத்தம் இந்திய நாடு என்ற கம்பீர கட்டிடத்தின் ஒவ் வொரு செங்கலையும் சிவப்பாக்கி விட்டது.
முதல் அமைப்பு ரீதியான இந்திய சுதந்திரப் போர் அல்லது இந்தியப் புரட்சி என்பது 1857ல் ஏற்பட்டது. இதுவே சிப்பாய் புரட்சி என்றும் அழைக்கப்பட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து நிகழ்ந்த ஆயுதம் தாங்கிய புரட்சியை சிப்பாய் புரட்சி என்றே வரலாற்று நூல்களில் குறிக்கப்படுகின்றன.
பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கம் முடிவடைந்து பிரிட்டிஷ் அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இந்தியா கொண்டு வரப்பட்டது. அந்த வகையில் முதல் சுதந்திரப் போர் முதல் வெற்றியை ஈட்டியது. அதன்பிறகு இந்தியத் துணைக்கண்டம் 90 ஆண்டுகாலம் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. லண்டன் இந்திய நிர்வாகத்தின் தலைமைப்பீடமாக மாறியது. லண்டனில் உள்ள பிரிவியூ கவுன்சில் இந்தியாவின் உச்சநீதிமன்றமாக அறியப்பட்டது.
உத்தரப்பிரதேசத்தின் முஸாஃபர் நகர் மாவட்டத்தில் உள்ள தானா பவனிலும் ஆங்கிலேயருக்கு எதிராக முஸ்லிம்கள் பொங்கி வெடித்தனர். உலமாக்கள் பிரிட்டிஷாரை எதிர்த்து வீர சமர் புரிந்தனர். ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிரி மக்கீ என்பவரின் தலைமையில் நடைபெற்ற புரட்சிப் போர் ஆங்கிலேயரை அதிர வைத்தது. ஷம்லி என்ற இடத்தில் நடைபெற்ற போரில் ஆங்கிலேயர்கள் சிதறடிக்கப்பட்டனர். இதில் உலமாக்கள் காட்டிய வீரம் செறிந்த போரினை ஆங்கிலேயர்கள் மறக்க இயலாது. தற்போது முதல் சுதந்திரப் போரின் 150ஆம் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. முதல் இந்திய சுதந்திரப் போர் வரலாற்றில் மறைக்கப்பட்ட மாவீரர்களின் வரிசையில் ஹாஜி இம்தாதுல் லாஹ் முஹாஜிரி மக்கி போற்றப்பட்டிருக்க வேண்டிய மாவீரர் ஆவார்.
உலமாக்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இயல்பாகவே அடக்குமுறைகளையும், அக்கிரமங்களையும் எதிர்ப்பதை அடிப்படை கடமையாக இஸ்லாம் போதிப்பதால் அதை வழிமொழிந்து பின்பற்ற வேண்டிய முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து ஆர்த்தெழுந்ததில் வியப்பில்லை.
வங்காள மாவீரன் சிராஜுத் தவ்லா, கிழக்கிந்திய கம்பெனியின் படைகளை எதிர்த்து வீரமரணம் அடைந்ததிலிருந்தே முஸ்லிம்களின் வீரப்போர் தொடங்கி விட்டது என்பதே வரலாற்று உண்மையாகும்.
உலமாக்களின் வீரம் செறிந்த விடுதலைப் போர் தியாக வரலாறு குறித்து பிரிட்டிஷ் தரைப்படைத் தளபதி தாம்ஸன் (தங்க்ஷங்ப்ப்ண்ர்ய் ஈப்ங்ழ்ண்ஸ்ரீள் பக்கம் 49ல்) தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
ஷா வலியுல்லாஹ் (1703லி1762)
ஷா வலியுல்லாஹ் தெஹ்லவி, ஆங்கிலே யருக்கு எதிரான புரட் சிக்கு தலைமை தாங்கி னார். ஐரோப்பிய ஆட்சி யாளர்கள் ஊழல் முறை கேடுகளுடன் இந்த உலகின் பல பகுதிகளை யும் அடக்குமுறைக்கு உட்படுத்தினார்கள். முழுக்க ஐரோப்பிய ஆதிக்கத்துக்கு எதிராகவே பொங்கியெழ வேண்டும் என அழைப்பு விடுத்தார். அவர் ஹஜ் புனிதப் பயணத்தின் போது ஆக்கிரமிப்பு சக்திகளை அகற்றி சமத்துவம் சமநீதி கொண்ட சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்ற ஆர்வம் அவரது உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது.
முகலாயப் பேரரசின் வீழ்ச்சியையும் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளிலும் மக்கள் விரும்பிய ஆட்சி வீழ்த்தப்பட்ட காட்சிகளையும் அவர் கண்டார். 1707ல் மாமன்னர் அவ்ரங்கஜேப் காலமானார். ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி தனது அதிகார ஆட்டத்தைத் துவங்கியது. 1757ல் பிளாசி போர்முனையில் வங்கத்து மாவீரன் சிராஜுத் தவ்லாவை துரோகத்தின் துணை கொண்டு ஆங்கிலேயர் வீழ்த்தினர். மனிதநேயத்தை மீட்கவும் அடிமைத் தனத்தை அழிக்கவும் ஷா வலியுல்லாஹ் உறுதி பூண்டார். 'ஹுஜ்ஜத்துல்லாஹி பலிகா' என்ற தனது நூலில், உழைக்கும் மக்களே சமுதாயத்தின் உண்மைச் சொத்து என்றார். சமூகத்திற்கு உடலாலும் மூளையாலும் உழைப்பவர்கள் யாரோ அவரே சிறந்தவராக இருக்க முடியும் என்றார். விடுதலை உரிமை நம்நாட்டு சொத்துக் களின் மீதான பாதுகாப்பு உணர்வு ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டும் என்றார். இவரது வரலாறு லி பாடப்புத்தகங்களில் மறக்கடிக்கப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது.
திப்பு சுல்தானின் தியாக பூமி
வீரத் திப்புவின் தியாகம் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஊக்கத்தையும் உத்வேகத் தையும் அளித்தது. 1757 முதல் 1857 வரை அவ்ரங்கஜேப்பின் வாரிசுகள் தனியாக பலம் பொருந்திய ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டனர். முஸ்லிம்கள் அனை வருக்கும் சுதந்திர நெருப்பூட்டியவர் மாவீரன் திப்பு சுல்தான். மே மாதம் 4ஆம் தேதி 1799ல் திப்பு சுல்தான் ஸ்ரீரங்கப்பட்டினம் போர்க் களத்தில் வீர மரணம் அடைந்தபோது, தரையில் வீழ்ந்து கிடந்த அவரது உடலைப் பார்த்து ஆங்கிலேய ஆட்சியாளர் லார்டு ஹாரிஸ் என்பவன் கொக்கரித்தான். 'இப்போது இந்தியா எங்களுடையதாகி விட்டது' என் றான். அந்த மாவீரனின் மறைவுக்குப் பிறகு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு சவால்விடும் அளவுக்கு எந்த ஆட்சியாளரும் தோன்ற வில்லை என்பதே வரலாற்று உண்மை.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிரான ஃபத்வாக்கள்
1803ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஏகாதி பத்தியம் டெல்லியை கைப்பற்றியது. கொதித்தெழுந்தார் மார்க்க அறிஞர் ஷா வலியுல்லாஹ்வின் மகன் ஷா அப்துல் அஜீஸ் தெஹ்லவி. ஆங்கிலேய ஆதிக்கத் துக்கு எதிரான ஃபத்வாக்களை பிரயோகித் தார். முதல் ஃபத்வா நமது நாடு அடிமைப் படுத்தப்பட்டுள்ளது, நாட்டின் அடிமைத் தனத்தை மீட்க விடுதலைப் போராட்டத்தை துவக்குவது நமது முக்கியக் கடமை என அந்த ஃபத்வா குறிப்பிடுகிறது.
ஸையத் அஹ்மத் ஷஹீத் (1786லி1831)
ஸையத் அஹ்மத் ஷஹீத், உத்தரப்பிரதேச மாநில ரெய்பரேலியின் விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். ஆங்கில அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தினார் இந்த மார்க்க அறிஞர். 1808ல் இவரது வீர வரலாறு தொடங்குகிறது. மஹாராஜா ஜஸ்வந்த் ராவ் மற்றும் நவாப் அமீர் அலிகான் இருவரும் இணைந்து ஆங்கில அரசுக்கு எதிராகப் போராடினர். மார்க்க அறிஞர் ஷா அப்துல் அஜீஸ் தனது மாணவருக்கு கட்டளையிட்டார். உடனடியாக ஸையத் அஹ்மத் ஷஹீத் தனது படையை நவாப் அமீர் அலி படையினருடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றார். இருவரும் இணைந்து ஆறு ஆண்டுகள் ஆங்கில அரசை எதிர்த்துப் போராடினார்கள். ஸையத் அஹ்மத் ஷஹீத் தலைமையில் எல்லைப்புறத்தில் தற்காலிக சுதந்திர இந்திய அரசை துவக்கினர். அது பல ஆண்டுகள் நீடித்தது. பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தை எதிர்த்து முதன்முறையாக எழுந்த அரசு அது என்பது குறிப்பிடத்தக்கது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு முன்பாகவே ஓர் சுதந்திர அரசை நிறுவியவர் ஒரு முஸ்லிம் மார்க்க அறிஞர்தான் என்பது வரலாற்றின் பக்கங்களில் சரியாகப் பதிவு செய்யப்படவில்லை. பஞ்சாபை ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து மீட்பதற்காகப் போராடிய ரஞ்சித்சிங் குறித்து மட்டும்தான் பாடப்புத்தகங்ளில் காணப்படுகிறது. இன்றைய பாகிஸ்தான் பகுதியிலுள்ள பஞ்சாபின் முஜாஹிதீன்களின் உதவியுடன் சுதேசி பட்டான் படை என்ற பெயரில் புரட்சி நடத்திய மக்களின் பலகோட் போர்க்களத்தில் ஆங்கிலேயர்களை வீரத்துடன் எதிர்த்த மக்களைப் பற்றிய குறிப்பும், பலகோட் போர்க்களத்தில் 300 பேர் வீரமரணம் அடைந்தனர் என்ற உண்மை வரலாறும் ஒன்றுபட்ட இந்தியாவை ஆங்கிலேயரிட மிருந்து மீட்க உயிர்த்தியாகம் செய்த தகவல்கள் பதிவு செய்யப்படவே இல்லை.
இந்தப் போராட்டத்தை சாதிப்பூர் உலமா முன்னெடுத்தார். 1845 முதல் 1871 வரை ஆங்கிலேயரை எதிர்த்து சாதிப்பூர் உலமா தலைமையிலான போராட்டம் தீவிர மடைந்தது. 1857ல் நிகழ்ந்த முதல் சுதந்திரப் போரில் ஆங்கிலேயருக்கு எதிரான உடனடிப் போரை தொடங்க வேண்டும் என 34 உலமாக்கள் ஃபத்வா வழங்கினர். மவ்லானா காசிம் (தேவ்பந்த் மதரஸாவின் நிறுவனர்) மற்றும் மவ்லானா ரஷீத் அஹ்மத் மற்றும் ஹஃபீஸ் ஜமீன் உள்ளிட்ட உலமாக்களும் ஹாஜி இம்தாதுல்லாஹ் தலைமையில் ஷாம்லி போர்க்களத்தில் போராடி வீர மரணம் அடைந்தனர்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வர்த்தக சமூகத்திற்கும் ஆதிக்கசாதிகளுக்கும் ஆதரவு கொடுக்கும் விதமாகவே செயல்பட்டு வந்தனர். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் எந்த ராணுவமும் இத்தனைக் கொடூரமாக நடந்திருக்க முடியாது என நினைக்கும் வண்ணம் படுகொலைகளை இந்தியாவெங்கும் நடத்தி வந்தனர். இது ஒரு பிரிட்டிஷ் வீரரின் உரிமை என்றே அவர்கள் கருதினர்.
முஸ்லிம் சிற்றரசான அவ்த்தில் மட்டும் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதில் ஒரு லட்சம் பேர் பொதுமக்கள் என்பது அதிரவைக்கும் உண்மையாகும். சிறந்த உருதுக்கவிஞரான மிர்ஸா காலிஃப் எழுதுகிறார்: ''என் முன்னால் ரத்த ஆறு ஓடியதை நான் பார்க்கிறேன். ஒவ்வொருவரும் கொல்லப் படுவதை நான் பார்த்தேன். ஒருபுறம் மக்களின் பொருட்கள் கொள்ளையடிக் கப்படுவதைப் பார்த்தேன்'' என்று தனது கவிதையில் குறிப்பிடுகிறார்.
பஹதூர்ஷா ஜாஃபரின் வீர புதல்வர்கள் மூவரும் ஹூனி தர்வாஜா என்ற பகுதியில் பொதுமக்களின் மத்தியில் படுகொலை செய்யப்பட்டனர். கண்கள் குருடாக்கப் பட்ட நிலையில் பஹதூர்ஷா ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார். 1862ல் உயிர் துறந்தார். சற்றும் கருணை காட்டாத பிரிட்டிஷ் அரசின் கொடூரச் செயல் கண்டு பஹதூர்ஷா ஜாஃபர் மனம் கலங்காது மரணத்தை எதிர்கொண்டார். அவர் உயிர் பிரியும்போது உடல் சற்று ஆடியிருக்கலாம். ஆனால் அவரது தியாக மரணம் பிரிட்டிஷ் ஆட்சியை அசைத்துப் பார்த்தது என தாமஸ் லோவே தெரிவித்தார். பலமிக்க பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்து உலமாக்கள் வீர சமர் புரிந்தார்கள்.
1857 முதல் சுதந்திரப் போர் தோல்வியில் முடிந்தது என்று கூறுவார்கள். ஆனால் ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியை அதுதான் விரட்டியடித்தது. 'மவ்லவி' என்ற சொல்லைக் கேட்டாலே ஆங்கிலேயர்கள் அலறினர். தீவிரவாதிகள் என்ற பெயரிட்டு ஆவணங்களிலும் குறித்தார்கள். ஜான்ஸிராணி லக்குமிபாய், மங்கள் பாண்டே போன்றவர்களை மட்டுமே போற்றிப் பாடும் இந்திய வரலாற்று ஆசிரியர்கள், கல்வித்துறை வல்லுனர்கள்(!) உண்மைகளை மறைத்து விட்டனர். இருப்பினும் எம் இந்திய தேசம் முழுக்க முழுக்க அறிவார்ந்த மக்களைக் கொண்ட நாடாக மாறும்போது மவ்லவிகள் உள்ளிட்ட அனைத்து மாவீரர்கள் பற்றிய உண்மைகளும் உலகில் உரத்து ஒலிக்கும்

Thursday, May 31, 2007


காந்தியைக் கொல்ல பிராமணர்கள் சூழ்ச்சி செய்தனர்காந்தியின் கொள்ளுப்பேரன் தகவல்

காந்தியைக் கொல்ல பிராமணர்கள் சூழ்ச்சி செய்தனர்காந்தியின் கொள்ளுப்பேரன் தகவல்காந்தியடிகளைப் படுகொலை செய்தவன் நாதுராம் கோட்சே என்ற ஹிந்துத்துவ வெறியன் என்பதும், ஆர்எஸ்எஸ் இயக்கப் பின்னணியை உடைய அந்த ஆசாமி, மகாராஷ்ட் டிரவின் சித்பவன் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதும் வரலாற்று உண்மை.காந்தி படுகொலை செய்யப்பட்டார் என்பது மட்டுமே உண்மை என்பதுபோலவும் கொலையாளிகள் குறித்து எந்தவித விரிவான தகவல்களும் விவரிக்கப்படாத நிலையே இன்றுவரை தொடர்ந்து வருகிறது. காந்தியின் படுகொலையில் சங்பரிவார் அமைப்பின் சதியும், பிராமணர்களின் கைவரிசையும் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளாய் சரித்திரத்தில் அழுத்தமாக பதிவு செய்யப்பட்ட பின்பும்கூட இன்றுவரை முஸ்லிம்களை குற்றப்பரம்பரை யைப் போல அவர்கள் சித்தரித்து வருகின்றனர். இந்நிலையில் ஆதிக்க சக்திகளின் ஆணவத்தை தோலு ரித்துக் காட்டும் வகையில் காந்தியடிகளின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி உலுக்கும் உண்மைகளை வெளியிட்டார்.தமது ''கங்ற்'ள் ஃண்ப்ப் ஏஹய்க்ட்ண்'' என்ற நூலை வெளியிட்டு உரையாற்றுகையில், ''காந்தியடிகளை கொலை செய்ய நடந்த பல்வேறு சம்பவங்களில் பிராமணர்களின் சதி இருந்துள்ளது'' என்று குறிப்பிட்ட துஷார் காந்தி, ''பிராமண சமூகம் இந்தியாவை ஹிந்துத்துவா நாடாக மாற்ற விரும்புகின்றனர்'' என்றும் கூறினார்.'காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு அவர் தேசப் பிரிவினைக்கு காரணமாக இருந்தார். பாகிஸ்தானுக்கு இந்திய அரசு கொடுக்க வேண்டிய 55 கோடி ரூபாயை காந்திதான் வற்புறுத்தி கொடுக்க வைத்தார்; அதனால்தான் அவர் கொலை செய்யப்பட்டார்' என வரலாற்றை திரித்துக்கூறும் சங்பரிவார் இயக்கத்தின் செயலை துஷார் காந்தி வன்மையாகக் கண்டித்தார்.பிராமண சமூகம் இந்தியாவை ஒரு ஹிந்துத்துவ தேசமாக மாற்றும் முயற்சியிலே காந்தியை கொலை செய்ய நடைபெற்ற சம்பவங்களின் பின்னணியில் அவர்கள் செயல்பட்டனர் என அழுத்தமாக தமது நூல் வெளியீட்டு விழாவில் கூறினார்

Sunday, May 27, 2007


hyderabad bomb blast abusalih news in tamil

ஹைதராபாத் பயங்கரம்!தொடரும் முஸ்லிம்களுக்கெதிரான சதித்திட்டங்கள்...
அபூசாலிஹ்
ஆந்திரத் தலைநகர் ஹைதரா பாத்தில் பழம்பெருமை வாய்ந்த மக்கா மஸ்ஜித் (18லி05லி07) வெள்ளிக்கிழமை அன்று ஜும்ஆ தொழுகையின் போது நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 16 பேர் உடல் சிதறி, ரத்த வெள்ளத்தில் பலியாயினர். 50க்கும் மேற்பட்டோர் உஸ்மானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின் றனர்.
முஸ்லிம்களை குறிவைத்து திட்ட மிட்டு தாக்கப்படும் நிகழ்வுகள் தொடர்வது நாடெங்கும் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிவாசல் களின் மீது நிகழ்த்தப்படும் பயங்கரவாத தாக்குதல்கள் பெருகி வருகின்றன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வெளியேயும் முஸ்லிம்களின் மீதான பயங்கரவாத தாக்குதல்கள் சமீபகாலமாக தொடர்ந்து வருகிறது.
2006 ஏப்ரலில் வரலாற்றுச் சிறப்புமிக்க டெல்லி ஜும்மா மஸ்ஜிதில் குண்டு வெடித்தது. பலர் காயமடைந்தனர்.
2006 செப்டம்பர் மாதம் மகாராஷ்ட்ரா மாநிலம் மாலேகான் பள்ளிவாசலில் குண்டு வெடித்தது. 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்து பலர் மரணமடைந்தனர்.
ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் இரண்டு சக்தி வாய்ந்த குண்டுகளை வெடிக்காத நிலையில் கைப்பற்றி விட்டதாக ஆந்திர காவல்துறை தலைவர் பாஸித் தெரிவித்தார். குண்டு வெடிப்புகளால் அப்பாவி மக்கள் பலியாகி வருவது மக்க ளிடையே அவநம்பிக் கையையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முஸ்லிம்களின் சமூக பொருளாதார வாழ்வை சீர்குலைக்கும் நோக்கில் இது நடத்தப்பட்டிருப்பதாகவும் சமூக நல ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.மிகப்பெரிய சதிச்செயல்களான டெல்லி ஜும்மா மஸ்ஜித் குண்டு வெடிப்புக்கு ஊழியர்களிடையே ஏற்பட்ட தகராறு தான் காரணம் என காவல்துறை கூறியது. அதில் ஒரு கும்பல் இந்தச் சதிச்செயலை செய்தது என காவல்துறை விரிவுரை எழுதியது.
பள்ளிவாசல் குண்டு வெடிப்பு சிமி இயக்கத்தினரால் நடத்தப்பட்டது என மகாராஷ்ட்ர காவல்துறை தெரிவித்தது.
கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த ஹைதராபாத் பள்ளிவாசல் குண்டு வெடிப்பில் ஜெய்ஷிலிமுஹம்மத், லஷ்கர்லிஇலிதொய்பா, (முட்டை லாப்பா, கொத்துப் பரோட்டா என்று சொல்லாதது மட்டும் தான் பாக்கி) போன்ற இயக்கங்கள் இன்னும் பல இயக்கங்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என காவல்துறை தரப்பிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதையே ஈயடிச்சான் காப்பியாக சன் டிவி (சங் டிவி?) உள்ளிட்ட ஊடகங்களும் செய்தி ஏடுகளும் பரபரப்பை ஏற்படுத்தின.அதற்கு காவல்துறையின் புலனாய்வுப் பிரிவு கூறும் காரணம் பள்ளிவாசல்களில் குண்டு வெடிப்பு சதி நிகழ்த்துவதின் மூலம் முஸ்லிம்களின் ஆத்திரத்தை ஹிந்துக் களின் மீது திருப்பி கலவரங்களை ஏற்படுத்துவதற்காக நிகழ்ந்த சதி என்று பக்கம் பக்கமாய் காரணம் கூறுகிறார்கள்.
குண்டு வெடிப்பு சதிகாரர்களுக்கு, சவூதியிலிருந்து அதிகமான தொலைபேசி அழைப்புகள் வந்தன என முதலில் அந்திர மாநில புலனாய்வு அமைப்புகள் அறிவித்தன.
குண்டு வெடிப்பு சதிகாரனுக்கு சவூதி அரேபியாவிலிருந்து கட்டளையிடப் பட்டது என்ற செய்திகள் ஊடகங்களில் மதியம் செய்திகளாய் பரப்பப்பட்டது.அதன்பிறகு இரவு துபாய்யிலிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்ததாக செய்திகள் பரப்பப்பட்டது.
அதன்பிறகு இரவு துபாய் இலிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்ததாக செய்திகளை அதே தொலைக்காட்சி சேனல்கள் வாசித்தன. வெடித்த குண்டு நாட்டு வெடிகுண்டு வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம் என உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் கூறுகிறார்.
ஆர்.டி.எக்ஸ்லிவகையைச் சேர்ந்ததாக ஆந்திர காவல்துறை கூறுகிறது.வெடித்தது எதுவாக இருந்தாலும் பலியானவர்கள் ஏதுமறியாத அப்பாவிகள். தங்களின் உயிர் எதற்காக பறிக்கப் படுகிறது, யாரால் இது நடத்தப்பட்டது, ஏன் இது நமக்கு நிகழ்ந்தது என்பதை அறியாத நிலையிலே ரத்த வெள்ளத்தில் மாண்டு போனார்கள்.
இந்த சதிக்கு சஹீத் பிலால் என்னும் நபர் பின்னணியில் இருந்ததாக தகவல்கள் புலனாய்வுத் துறையினரால் வெளியிடப் படுகின்றன.
பர்தா போட்ட பெண், குண்டு வெடிப்புக்கு சில நிமிடங்களுக்கு முன் செல்போனுடன் அலைந்தாக நேரில் பார்த்த ஒரு சாட்சி இருப்பதாக (21லி05லி07) நாளிதழ் ஒன்று குறிப்பிடுகிறது.
ஹைதராபாத் பள்ளிவாசல் குண்டு வெடிப்பு மற்றும் அதற்கு முன்பு நடைபெற்ற குண்டு வெடிப்புகள் குறித்து காவல்துறை கூறும்போது ஹிந்துலிமுஸ்லிம் மத மோதல்களை ஏற்படுத்துவதற்காக இந்தச் சதிகள் முஸ்லிம் பயங்கரவாதி களால் நிகழ்த்தப்பட்டதாக கூறுகின்றன.
இந்த ஒரே ஒரு புள்ளியைச் சுற்றி 18 ஆம் தேதியிலிருந்து புலனாய்வு சுற்றி சுற்றி வருகின்றது. புலனாய்வுத்துறையின் இந்தப் பிரச்சாரம் குறித்து நடுநிலை ஊடகவியலாளர்களும் சமூக நல ஆர்வலர்களும், முஸ்லிம் உரிமை அமைப்புகளும் பெரும் வியப்பும்லி விமர்சனமும் தெரிவித்து வருகின்றனர்.
பள்ளிவாசல்களில் குண்டு வெடித்து விட்டது. வைத்தது ஹிந்துக்கள் தான் என ஆத்திரம் கொண்டு முஸ்லிம்கள் கலவரம் விளைவிப்பார்கள் என மனதிலே திட்டம் போட்டு சில பாகிஸ்தான் தீவிரவாதிகள் இதை செயல்படுத்தி யிருக்கிறார்கள் என புலனாய்வுத்துறை யினர் கிட்டத்தட்ட முடிவெடுத்து விட்டதாகவே தெரிகிறது.
இங்கு தான் நடுநிலையாளர்கள் கடந்த கால சம்பவம் ஒன்றை நினைவு படுத்துகிறார்கள்.
1992 டிசம்பர் 6 அன்று மனித குலத்தையே வெட்கித் தலைகுனிய வைக்கும் வண்ணம் பாபரி மஸ்ஜித் தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டது.
இதை நிகழ்த்தியது சங்லிபரிவார் என்ற ஹிந்துத்துவ வெறியர்கள் தான். ரத்தத்தை கொதிக்கச் செய்யும் இந்த கொடிய செயல் நடந்த போது முஸ்லிம்கள் வேதனையில் துடித்தார்கள். ஆவேசத்தில் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் ஹிந்து சகோதரர்களுக்கு ஒரு சிறு தீங்கும் நிகழா வண்ணம் பார்த்துக் கொண்டார்கள்.
பாபரி பள்ளிவாசலை தகர்க்க விட்டு வேடிக்கை பார்த்த நரசிம்ம ராவ் தலைமையிலான இந்திய அரசை எதிர்த்து அவர்களது கோபம் புறப்பட்டதே தவிர சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படவில்லை.ஆர்ப்பாட்டங்களும் கடையடைப்புகளும் மத்திய அரசை எதிர்த்து நடத்தப்பட்டன.
உ.பியின் பாஜக அரசை எதிர்த்துப் கூட போராட்டம் நடத்தப்படவில்லை. காரணம் உ.பி பாஜக அரசு அப்போது டிஸ்மிஸ் செய்யப்பட்டது.
மும்பையில் (பம்பாய்) சிவசேனா வினரால் வன்முறைகள் கட்ட விழ்த்து விடப்பட்டன. மும்மை முஸ்லிம்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாயினர். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதை போன்ற இந்நிகழ்வை எதிர்த்துக் கூட ஆவேசம் கொண்டு அகில இந்திய அளவில் முஸ்லிம்கள் ஹிந்துக்களின் மீது எந்த தாக்கு தலையும் தொடுக்காது கண்ணியம் காத்தனர்.
வேதனையின் விளிம்பில் இருந்தபோது கூட ஆவேசத்தின் உச்சத்தில் இருந்தபோது கூட முஸ்லிம்கள் ஹிந்துக்களை நேசித்தனர். இதில் முஸ்லிம்களை ஆத்திரம் கொள்ள செய்வதற்காக பள்ளிவாசல் குண்டு வெடிப்புகள் முஸ்லிம் பயங்கரவாத இயக்கங் களால் நடத்தப் பட்டது என்று கூறுவதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றே நடுநிலையாளர்கள் கூறுகின்றனர்.
சமாதான சகவாழ்வை நேசிக்கும் இந்திய முஸ்லிம்களை உசுப்பி விட்டு மதக்கலவரங்களை நடத்தி விடலாம் என்று எந்த தீய சக்திகள் நினைத்தாலும் அது நிறைவேறாது என்பது ஏற்கெனவே (1992ல்) நிரூபிக்கப்பட்ட ஒன்று.
இது புரியாமல் எந்த மக்கு தீவிரவாதி இருக்கிறான் என்பது தெரியவில்லை.
புலனாய்வுப் பிரிவினரின் கண்ணோட்டத்தை உடைப்பதைப் போன்றே ஹைதராபாத் பள்ளி வாசல் குண்டு வெடிப்பு நிகழ்ந்த பிறகு ஒரு முஸ்லிம் எந்த ஹிந்துவையும் குதறியதாகவோ, குறைந்த பட்சம் கிள்ளிவிட்டதாக வோக் கூட தகவல்கள் இல்லை. மாலேகான் பள்ளிவாசலில் 50க்கும் மேற்பட்டோர் பலியான குண்டு வெடிப்பிலும் கூட முஸ்லிம்கள் ஹிந்துக்களின் மீது பாயவில்லை. மதக் கலவரங்கள் ஏற்படவில்லை. ஆனாலும் புலனாய்வுத்துறையினர் மட்டும் ஒரே 'கதையை' அதே கற்பிதத்தை மீண்டும் மீண்டும் கூறி பதட்டத்தை ஏற்படுத்துவதோடு அப்பாவி முஸ்லிம்களை வளைத் துப் பிடிக்கும் சதி இருக்கக்கூடுமோ என சமூகவியலாளர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
குண்டுசட்டியில் குதிரை ஓட்டும் இத்தகைய போக்குகளை புலனாய் வுத் துறையினர் கைவிட வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் கோரிக்கை.
புலனாய்வு பல கோணங்களில் இருக்க வேண்டுமேயொழிய ஒரே செக்கு மாட்டுச் சிந்தனையை, முஸ்லிம்களை மட்டுமே குறைகூறி பழிபோடும் போக்கை கைவிட வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.
பள்ளிவாசல்களில் நடக்கும் குண்டு வெடிப்புகள் தொடர்பாக தீவிரவாத ஹிந்துத்துவ இயக்கம் ஒன்றின் மீது சந்தேகம் எழுப்பப் பட்டது.
மகராஷ்ட்ராவில் பார்பபானியில் உள்ள முஹம்மதி மஸ்ஜித் பள்ளி வாசலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிலர் காயம் அடைந்தனர்.
நான்டெட் என்ற இடத்தில் பஜ்ரங்தள் என்ற ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கத்தின் வெடி குண்டு தொழிற்சாலையில் குண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் போது நால்வர் பலியாயினர். இதைப் போன்ற ஒரு சம்பவம் கடந்த ஆண்டும் நடந்தது.
பூனாவில் உள்ள மஸ்ஜிதிலும் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.
ஜால்னாவில் உள்ள மஸ்ஜிதி லும் குண்டுவெடிப்பு நடந்தது.
50லிக்கும் மேற்பட்டோரை பலிகொண்ட மாலேகான் குண்டு வெடிப்பிலும் பஜ்ரங்தள் இயக்கத் தினரின் கைவரிசை இருந்தாக உள்ளூர் மக்கள் குறிப்பிட்டனர். ஆனால் இந்திய அளவிலான ஊடகங்கள் எல்லாம் சிமி, சிமி என்றே அலறினநான்டெட்டில் பஜ்ரங்கதள் வெடிகுண்டு தொழிற்சாலையில் ஒட்டுத்தாடிகளும் தொப்பிகளும் கண்டு பிடிக்கப்பட்டன. அவ்வாறே மாலேகானில் பள்ளிவாசல் குண்டு வெடிப்புக்குப் பிறகு பலியான உடல்களுக்கு நடுவே தாடியும் தொப்பியும் வைத்திருந்த உடலை ஆம்புலன்ஸில் ஏற்றும்போது தாடி கையோடு வந்துவிட்டதாக பிணத்தை ஆம்புலன்ஸில் ஏற்றிய உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
ஆனால் அவ்வாறு எந்த ஒரு பிணமும் இல்லை இல்லை என மகராஷ்டிரா மாநில காவல்துறையினர் மறுத்திருக்கின்றனர். அதாவது எந்த அசம்பாவிதமும் நிகழ்ந்தாலும் இப்படித்தான் விசாரணையின் போக்கு அமைய வேண்டும் என்று எழுதப்படாத ஒரு விதியை வைத்துக் கொண்டே செயல் படுவதாகத் தெரிகிறது.
ஹைதராபாத் குண்டு வெடிப்பு சம்பவம் அவ்வாறு ஆகிவிடக்கூடாதே என்பது தான் நாட்டு மக்களின் கவலை. புலனாய்வுத் துறையினர் குறிப்பிடும் எந்த இயக்கத்தினர் மீதும் விசாரணை நடத்தட்டும். ஆனால் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வகையில் அது அமைய வேண்டும்.
மாலேகான் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோது ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கமான பஜ்ரங்தள் இயக்கத்தினர் மீது ஏன் விசாரணை நடத்தவில்லை என உள்ளூர் மக்களும் நடுநிலையாளர்களும் காவல்துறை யினரிடம் வினா எழுப்பிய போது அவ்வாறு நடத்தினால் பதட்டம் ஏற்படும் நிலைமை விபரீதம் ஆகும் என மகராஷ்டிரா மாநில காவல்துறை உயர் அதிகாரி பஸ்ரிச்சா அப்போது தெரிவித்தார்.( இது எப்படி இருக்கு)
குறிப்பிட்ட ஹிந்துத்துவ இயக்கத்தினர் தான் இதை நிகழ்த்தியிருப்பார்கள் என இங்கு வேண்டுமென்றே யாரும் கூறவில்லை, நாடெங்கும் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கக் கோரி தமுமுக உள்ளிட்ட இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. ஆனால் அவ்வாறு இருக்கலாம் என்ற சாத்தியக் கூறுகளை மறுக்க முடியாது. பாப்பா கையில் இருக்கும் பலூன் வெடித்தால் கூட பாய்ந்து சென்று முஸ்லிம் இளைஞர்களை இம்சை செய்யும் காவல்துறை மேற்குறிப்பிட்ட இயக்கங்களை விசாரணை செய்வதற்கு தயங்குவது ஏன்?
தப்லீக் ஜமாத்தார்களைக் கொல்ல நடந்த சதியா?ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து மூன்று மணிநேரம் கழித்து சக்தி வாயந்த இரண்டு குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன. அந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பள்ளிவாசல் வளாகத்தில் நுழைகிறார். ஆயிரக்கணக்கான மக்கள் அவரை சூழ்ந்து கொண்டனார்.
குண்டு வெடித்த 100 மீட்டருக்கு இடைவெளியில் இந்த சக்திவாய்ந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. குண்டு வெடிப்புகள் நடைபெற்ற பிறகு மக்கா மஸ்ஜிதில் அஸர், மக்ரிப், இஷா தொழுகைகள் வழக்கம்போல் நடந்தன. வழக்கம்போல் சிறிதுகூட கூட்டம் குறையாமல் மக்கள் தொழுகைக்காக குழுமினர். தப்லீக் ஜமாத் என்ற அமைப்பு உலகளாவிய மாநாடு ஒன்றிற்கு அழைப்பு விடுத்திருந்தது. சிறிது தூரம் உள்ள மிமித பள்ளியில் நடைபெற இருந்தது. லட்சக்கணக்கான தப்லீக் ஜமாத்தினர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
தப்லீக் ஜமாத் இஜ்திமா நடைபெறும்போது குண்டுகள் வெடிப்பது இது மூன்றாவது முறையாகும். கடந்த 2000ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி குண்டூரில் தப்லீக் இஜ்திமா நடக்கவிருந்தது. இதில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 6 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தீன்தார் அன்ஜுமன் இயக்கத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். தப்லீக் இஜ்திமாவின் சேவையைக் கண்டு எரிச்சலுற்ற வி.எச்.பி.யினர் மிரட்டல் கடிதங்களை அனுப்பியுள்ளனர். தொடர்ந்து மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டு வருவது ஹிந்து இயக்கத்தின் வெறித்தனத்திற்கு சான்றாக விளங்குகிறது.
குண்டுவெடிப்பைக் கண்டித்து போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது காவல்துறையினர் வெறிச்செயல்.
ஹைதராபாத் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை 18லி05லி07 அன்று ஜும்ஆ தொழுகையின்போது குண்டு வெடித்ததைக் கண்டு குமுறி எழுந்த இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உண்மை குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கக் கோரி போராட்டங்கள் நடத்தினர். 10,000 மக்கள் ஒரே நேரத்தில் தொழக்கூடிய அந்த மஸ்ஜிதில் நிகழ்ந்த குண்டுவெடிப்பினால் மக்களிடையே பதட்டம் ஏற்பட்டது உணர்ச்சி வசப்பட்ட மக்கள் மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தத் தொடங்கினர். குண்டுவெடிப்பையும் அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளையும் ஒரு தெலுங்கு தனியார் தொலைக்காட்சி படம் பிடித்துக் கொண்டிருந்தது.
ஆந்திர மாநில காவல்துறைத் தலைவர் பாசிச சம்பவ இடத்துக்கு விரைந்தார். மஜ்லீúஸ இத்திஹாதுல் முஸ்லிமீன் அமைப்பின் தலைவர் அசதுத்தீன் ஒவைஸி முழுகடையடைப்புக்கு உத்தரவிட்டார்.
இறந்தவர்களின் போஸ்ட் மார்ட்டம் (பிரேத பரிசோதனை அறிக்கை) அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. இறந்தவர்கள் அனைவரும் நங்ப்ச் ப்ர்ஹக்ண்ய்ஞ் தண்ச்ச்ப்ங் (நகத) என்னும் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளனர். இறந்தவர் களின் உடல்களில் குண்டுகள் துளைத்து வெளியேறியுள்ளன என பிரேத பரிசோதனை அறிக்கையை வெளியிட்ட உஸ்மானியா மருத்துவமனையின் தடய வியல் துறைத்தலைவர் எம்.நாராயணரெட்டி குறிப்பிடுகிறார்.
காவல்துறையினரால் கண்மூடித்தனமாக சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் அஹ்மத்(35) காலில் தோட்டா துளைத்த காயம் உள்ளது. இவர் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த ஒருவரை, தூக்கிக் கொண்டு செல்லும் போது இரக்கமே இல்லாமல் காவல்துறை யினர் காலில் சுட்டதால் அளவுக்கதிகமாக ரத்தம் வெளியேறி இறந்திருக்கிறார். இவர் உடனடியாக கொண்டு வரப்பட்டால் உயிர் பிழைத்திருப்பார் என பேராசிரியர் டாக்டர். நாராயணரெட்டி தெரிவித்தார்.
பழைய ஹைதராபாத்தின் மொகல்புரா பகுதியைச் சேர்ந்தவர் இஃப்திகாருத்தீன். இவர் தொழுகையை முடித்து விட்டு தனது குழந்தைகளுக்கு பிஸ்கட் வாங்குவதற்காக சென்ற போது காவல் துறையினரால் சுடப்பட்டு இறந்திருக்கிறார். நாங்கள் கூட்டத்தை கலைப்பதற்காக ரப்பர் குண்டுகளைத் தான் பயன்படுத்தினோம் என காவல்துறையினர் கூறுகிறார்கள். ஆனால் உயிரைப் பறித்தது ரப்பர் குண்டுகள் அல்ல என தெரிவிக்கிறார் இஃப்தி காருத்தீனின் மாமா ரியாஸ் ரவூஃப்.
முஹம்மத் ஜஹிருத்தீன்(27) இவர் நியூ அஹாபுரா பகுதியைச் சேர்ந்தவர். ஜஹீருத்தினின் இடுப்பெலும்பிலிருந்து டாக்டர் குண்டை வெளியிலெடுத்ததை பார்த்த ஜஹீருத்தினின் சகோதரர் குறிப்பிடுகிறார். எவ்விதமான முன்னறிவிப்பும் இன்றி சுடப்பட்ட இந்தச் சம்பவம் கண்டிக்கத் தக்கது என்கிறார். ஜஹீருத்தீன் சகோதரர் முஷீர் இவர் மக்கா மஸ்ஜிதில் குண்டு வெடித்ததைக் கேள்விப் பட்டு சம்பவ இடத்துக்கு வந்தவர்.
மிஸ்ரி கஞ்சை சேர்ந்த முஹம்மத் அக்தர் முஹியுத்தீன் (15) இவரது வயிற்றில் குண்டு பாய்ந்தது. முஹம்மத் சலிம்கான் (35) இவர் கலாபட்டாரைச் சேர்ந்தவர், சையத் ஆதில் அலி(17) இவர் ஃபலருமா பகுதியைச் சேர்ந்தவர் இவர்கள் இருவருக்கும் மார்பின் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளது. இவை அனைத்துமே முகல்புரா காவல்துறை சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்தது. மேலும் காவல்துறையினரின் கண் மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் படுகாய மடைந்தவர்கள் இவர்கள் அனைவருக்கும் நெஞ்சுக்கு மேல் குறி வைத்து காவல்துறை யினரால் குறிவைத்து சுடப்பட்டவர்கள் இவர்கள் ஓவைஸி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
குண்டு வெடிப்பு 1.30க்கு நிகழ்ந்தது. அதனைத் தொடர்ந்து மக்களின் கோபம் வெடித்தது. சரியாக 2.20 க்கு பொதுமக்களை நோக்கி காவல்துறையினர் 12 ரவுண்டு சுட்டுள்ளனர்.மத்திய உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பாட்டில் முதல் அமைச்சர் ராஜசேகர ரெட்டி இருவரும் மக்கா மஸ்ஜிதிற்கு சனிக்கிழமை வந்தபோது ஆத்திரம் கொண்ட மக்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
வெறித்தனமாக சுட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குண்டு வெடிப்புக்கும் காவல்துறையினரின் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூட்டுக்கும் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்தனர். காவல்துறையினரின் அத்துமீறலுக்காக முதல்வர் ராஜசேகர ரெட்டி மன்னிப்புக் கேட்டார். குண்டு வெடிப்பில் 16 பேர் பலியானார்கள். துப்பாக்கி சூட்டிலே ஏழு பேர் பலியானார்கள். இந்த சமூகம் சந்திக்கும் கொடுமைகளுக்கு விடிவே கிடையாதே?

Friday, May 18, 2007


டெல்லியை திணறடித்த சமூக நீதிப் படை

தமிழக முஸ்லிம்களின் இதயத் துடிப்பாக, ரத்த ஓட்டமாகத் திகழும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கடந்த 12 ஆண்டுகளாக மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வீரியமிகு போராட்டங்களை நடத்தி வருகிறது.
அரசியல் மற்றும் சமூக தளங்களில் கடினமாக பணியாற்றிய இந்த சேவைப் படையினர் தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறி விட்டனர்.
தளராத உழைப்பு, சலிக்காத தொண்டுள்ளம் கொண்ட தமுமுக தனது சேவைப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், உலகிலேயே முஸ்லிம்கள் இரண்டாவதாக அதிகம் வாழும் இந்தியத் திருநாட்டில் வாழ்ந்துவரும் முஸ்லிம்களின் அவலநிலை குறித்தும், அவர்களது வாழ்வாதாரங்களை மேம்பாடு அடையச் செய்வது குறித்தும் தமுமுக சிந்தித்தது.
தமிழக முஸ்லிம்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் பேரியக்கமாய் விளங்கி வந்த தமுமுக முதன்முறையாக அகில இந்திய அளவில் தனது பார்வையை அழுத்தமாய் பதித்தது.
அனைத்து இந்திய முஸ்லிம்களின் மறுமலர்ச்சிக்காகவும், அவர்களின் உரிமைகளைப் பேணவும் தமுமுக களம் காண முடிவு செய்தது.
2004ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திருமதி. சோனியா காந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இந்திய முஸ்லிம்களிடம் முக்கிய வாக்குறுதிகளை வழங்கி வாக்கு கேட்டது.
அதில் ஒன்று கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் வாழும் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள முஸ்லிம் தனி இடஒதுக்கீடு உரிமையை அனைத்து மாநில முஸ்லிம்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என ஐக்கிய முற்போக்கு கூட்டணி வாக்குறுதி வழங்கியது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வாக்குறுதிகளில் வலு இருந்ததால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வெற்றிக்கு இந்திய முஸ்லிம்கள் தங்கள் வாக்குகளை பெருவாரியாக வழங்க, காங்கிரஸ் தலைமையிலான திமுக உள்ளிட்ட முக்கியக் கட்சிகளை உள்ளடக்கிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைத்தது.
முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் இடஒதுக்கீடு குறித்து நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஆறு மாதத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மூன்று வருடங்கள் கடந்து விட்டன. முஸ்லிம் இடஒதுக்கீடு குறித்து ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் தனது ஆய்வினை முடிக்கவும் இல்லை, தனது முடிவினை அறிவிக்க வும் இல்லை.
முஸ்லிம்களின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார நிலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதியரசர் ராஜேந்திர சச்சார் தலைமையில் ஓர் உயர்மட்டக் குழுவினை பிரதமர் மன்மோகன்சிங் அமைத்தார். நாடெங்கும் ஆய்வு செய்து சச்சார் குழு வெளியிட்ட அறிக்கை அணுகுண்டுகளாய் இந்திய அரசியல் அரங்கில் வெடித்தது.
ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு மேலாய் இந்தியத் திருநாட்டை திறம்பட நிர்வகித்த இந்த திருச்சமூகம் இன்று பின்தங்கியவர்களிலும் பின்தங்கியோராய் வாழ்ந்து வருவதாக அபாய அறிக்கை வாசித்தது.
கார்கில் முதல் கன்னியாகுமரி வரை வாழும் முஸ்லிம்களின் அவலநிலை இதுதான் என சச்சார் குழு அறைந்து சொல்லி அவலங்களை வெளிச்சப்படுத்திய போது, முஸ்லிம்கள் குறித்து ஆதிக்க சக்திகள் அதுவரை பரப்பிய கற்பிதங்களும் கட்டுக்கதைகளும் அம்பலத்துக்கு வந்தன.
அரசுத் துறையிலும், தனியார் துறையிலும் முஸ்லிம்களின் குறைந்த பிரதிநிதித் துவம் குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தனது வேதனையை வெளிப்படுத்தியிருந்தார். வளர்ச்சியின் கனிகள் முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டும். வளங்களிலும், நலன்களிலும் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்திருந்தார்.
சிறுபான்மையினரின் 15 அம்சத் திட்டமும் பரபரப்பாய் அறிவிக்கப்பட்டன. வசீகர வார்த்தைகள் வாட்டத்தைப் போக்குமா? தவித்த வாய்க்கு தண்ணீர் வேண்டும். பசித்த வயிற்றுக்கு சோறிடல் வேண்டும். உரிமை இழந்தவர்களுக்கு உரிமை வேண்டும்.
அறுபதாண்டுகளுக்கு மேலாக வறண்ட பாலைவனப் பயணத்தை மேற்கொண் டிருந்த இந்திய முஸ்லிம் சமூகத்தின் உரிமை காக்க உத்வேகம் கொண்ட தமுமுக, களமிறங்கியது. மார்ச் 7, 2007 அன்று தலைநகர் டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த முடிவு செய்தது.
தமுமுக தலைமை நிர்வாகிகள் அகில இந்திய அளவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அளவில் முஸ்லிம் சமுதாயத் தலைவர்களை ஒருங்கிணைத்தனர்.
இதற்கு முன்பாக 2004 டிசம்பர் 6 அன்று தலைநகர் டெல்லியில் தமுமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன்விளைவாக ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு தப்பிவிட முயன்ற பாபரி மஸ்ஜித் தகர்ப்பு குற்றவாளிகள் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்பட்டனர்.
இப்போது அகில இந்திய அளவில் இடஒதுக்கீட்டுக்கான போராட்டக் களம் அமைத்து தமிழகத்தின் அனைத்து முஸ்லிம்களுக்கும் தமுமுக அழைப்பு விடுத்தது.
தன்னலமற்ற சேவைகளால் மக்களின் மனதில் இடம்பிடித்த, சரித்திரத்தில் தடம் பதித்த தமுமுகவின் அழைப்பினை ஏற்று தமிழக முஸ்லிம்கள் அணியணியாய் திரண்டனர்.
தமிழக முஸ்லிம் தெருக்களெல்லாம் டெல்லியை நோக்கித் திரும்பின. போராட்டம் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்தே ஓய்வு உறக்கம் அறியாது தமுமுக தொண்டர் கள் களப்பணியாற்றினர். மாநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை தமுமுக சேவைப் படையினரின் போராட்ட அழைப்பு விடுக்கப்பட்டது.
தலைநகர் டெல்லி செல்லும் ரயில்கள் எல்லாம் கறுப்பு வெள்ளைக் கொடிகளை ஏந்தி தமிழ் மணம் கமழ சென்றன.
தமிழகம் டெல்லியை நோக்கி இடம்பெயர்ந்ததோ என ஆச்சரியம் மேலிட டெல்லி ரயில் நிலையம் சமுதாயச் சொந்தங்களால் திக்குமுக்காடியது.
எல்லாம் வல்ல இறைவனின் துணை கொண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்தே தமிழக முஸ்லிம்கள் தலைநகர் படையெடுப்பை நடத்தினர்.
தலைநகர் வந்திறங்கிய தமிழக முஸ்லிம்களை தமுமுக தன்னார்வத் தொண்டர்கள் டெல்லி ரயில் நிலையத்தில் முகமலர்ச்சியுடன் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
தமிழகத்திலிருந்து டெல்லி செல்லும் அனைத்து ரயில்களும் உரிமைப் போராளிகளை சுமந்து வந்தவண்ணம் டெல்லி மாநகரை வந்தடைந்தன. அனைத்து சகோதரர்களுக்கும் கனிவான வரவேற்பு வழங்கப்பட்டது.
அரசியல் கட்சிகளுக்காக கோஷங்கள் எழுப்ப, அரசியல்வாதிகளின் பணத்தில் டெல்லி செல்பவர்கள் உண்டு. ஆனால் இவர்கள் உரிமைப் போராளிகள்.
எந்த அரசியல்வாதிக்காகவும் கோஷம் போட அழைத்து வரப்பட்டவர்கள் அல்ல. தங்களது சொந்த உழைப்பின் ஊதியத்தைக் கொண்டே களம் காண வலம் வருகிறார்கள். ஆயிரம் அலுவல்கள், அடுக்கடுக்கான பணிப்பளுக்கள் என குடும்பத்தோடு நேரம் கழிக்க நேரம் இல்லாது தவிக்கும் இவர்கள்தான் உரிமைகளை வென்றெடுக்க டெல்லி வந்திருக்கிறார்கள். அந்த உணர்வு அவர்களிடம் வெளிப்பட்டது.
அம்பேத்கர் பவன். சமூக நீதிக்கு குரல் கொடுப்பவர்களின் சரணாலயம். ஆயிரக் கணக்கான மக்கள் தங்கும் வசதி இங்குண்டு. ஆயிரக்கணக்கான மக்கள் அணிவகுக்கும் வண்ணம் பிரம்மாண்ட மாநாட்டு அரங்கும் இங்குண்டு. பிரம்மாண்ட உணவு உபசரிப்பு அரங்கம், திமிறித்திரளும் தமிழக மற்றும் பிற மாநில சகோதரர்களுக்கும் அறுசுவை உணவு படைத்து அலுக்காமல் உபசரித்தது.
மார்ச் 6ஆம் தேதி டெல்லி மாநகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜும்மா மஸ்ஜித் முன்பாக உள்ளூர் மக்களின் சார்பாக தமுமுக தலைமையில் டெல்லி பேரணிக்கு ஆதரவாக மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களும் பங்கேற்றார். தலைமைக்கழகப் பேச்சாளர் நவ்ஷாத் அவர்கள் உர்துவில் பேரணியை விளக்கிப் பேசினார்.
2007 மார்ச் 7ஆம் தேதி புதன்கிழமை. அதிகாலை தொழுகைக்குப் பிறகு பேரணி புறப்பாட்டுக்கான பணிகள் துவங்கின.
எறும்புகளும், தேனீக்களும் வெட்கப்படும் வண்ணம் தமுமுக தொண்டர்கள் பம்பரமாய் சுற்றிச் சுழன்றனர்.
இந்திய முஸ்லிம்களது வரலாற்றின் சிறப்புமிகு மற்றொரு அத்தியாயம் அன்று தான் தொடங்கியது.
குளிரில் வெடவெடத்துக் கொண்டிருந்த டெல்லி மாநகர சாலைகள் உரிமைப் போராளிகளின் உணர்ச்சி கோஷங்களை கேட்கத் தயாரானது. 7 மணிக்கு அணிவகுப்பு ஆரம்பமானது. தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளிலிருந்து பேரணி துவங்க இருக்கும் ராம்லீலா மைதானம் நோக்கி அணிவகுத்து வாகனங் களில் புறப்பட்டனர்.
வாகனங்களெல்லாம் கறுப்பு வெள்ளை இரு வண்ணக் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன.
தாய்மார்கள், குழந்தைகள், பெரியவர்கள், சிறுவர் சிறுமியர் என அனைவரும் புத்தெழுச்சியுடன் புறப்பட்ட காட்சி காண்பவர்களை நெகிழ வைத்தது.
கர்நாடகாவிலிருந்து ஃஙஙப, மகாராஷ்ட்ராவிலிருந்து ஙடஓ, கேரளாவிலிருந்து டஉடயைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
கட்டுக்கோப்புக் குலையாத கண்ணியக் கூட்டம். கட்டுக்கோப்பை கட்டிக் காக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தொண்டர் படையினரின் செயல் நேர்த்தியைக் காண முடிந்தது. எங்கள் இதயங்கள் உறுதியானவை. நாளைய தலைமுறையின் வாழ்வுரிமையை உறுதி செய்ய புறப்பட்டுவிட்ட, மனதால் உரமுற்ற வீரச் சகோதரர்களும் விரைந்தனர் ராம்லீலா மைதானம் நோக்கி.
சமுதாய உணர்வு என்ற மின்சாரம் பாய்ச்சப்பட்ட கழக அடலேறுகள் ஆர்த் தெழுந்து வரும் காட்சியை நாம் பார்க்கிறோம். இன்றைய இளைஞர் பட்டாளத் தின் உரிமைப் போர் வெற்றியின் விளைவாக இன்ஷாஅல்லாஹ் உரிமைகளை அனுபவிக்கப் போகும் நாளைய தலைமுறையினர், அணிவகுத்து வரும் கழகக் கண்மணிகள் வாகனங்களில் ஏறுகின்றனர். தமிழகத்திலிருந்து வந்த உரிமைப் போராளிகளை சுமந்து கொண்டு அணிஅணியாய் வாகனங்கள் ராம்லீலா மைதானத்தை நோக்கி சீறின.

பேரணி துவங்குவதற்கு முன்பாக பேரணியை துவக்கி வைக்குமாறு இந்தியாவின் முக்கிய முஸ்லிம் கேந்திரமான ஃபத்தேஹ்பூர் மஸ்ஜிதின் இமாம் முஃப்தி முகர்ரம் அழைக்கப்படுகிறார். முஃப்தி முகர்ரம் அவர்கள் கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். இந்தியத் தலைநகரின் ராம்லீலா மைதானம் தமுமுக தொண்டரணியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டது.
மாவட்ட வாரியாக தமுமுக தொண்டர்கள் அணிவகுத்து உரிமைப் போராட்டத் துக்கு புறப்படத் தயாராயினர். தொண்டரணியினரின் அணிவகுப்புடன் பேரணி புறப்படத் துவங்கியது.
டெல்லி வாழ் மக்களுக்கு இது ஓர் புதுமையான அனுபவம். ஏன் அகில இந்திய ஊடகத்துறையினருக்கும் இது வியப்பூட்டும் பேரணியாக அமைந்திருந்தது.
இந்திய ராணுவ தரைப்படையினரின் அணிவகுப்பை பார்த்திருக்கிறார்கள். வெள்ளுடை அணிந்த இந்திய வான்படையினரின் அணிவகுப்பையும் அவர்கள் பார்த்திருக்கிறார்கள். ஆகாய வண்ணத்தில் சீருடை அணிந்து அணிவகுத்து வரும் இந்தியக் கடற்படையின் அணிவகுப்பையும் பார்த்திருக்கிறார்கள்.

முதன்முறையாக கோவை மாவட்ட தொண்டரணியினர் கறுப்பு வெள்ளை சீருடையுடன் மிடுக்குடன் நடைபோட்ட சமூக நீதிப் படையை முதன்முதலாக டெல்லி மாநகரம் பார்த்தது.
மண்டல் கமிஷனை எதிர்த்து போர்ப் பிரகடனம் செய்த ஆதிக்க சாதியின மாணவர்கள் ஆட்டம் போட்ட அதே டெல்லியில் சமூக நீதிக்காக சமர் புரிந்தனர் சமுதாய சகோதரர்கள்.
டெல்லி லி ஒரு தந்திர பூமி, இந்திர பூமி, மந்திர பூமி என பல்வேறு அரசியல் ஆய்வாளர்களும், ஏராளமான விளக்க உரைகளால் பட்டங்களால் சுட்டிக் காட்டப்பட்ட டெல்லி மாநகரில் தமுமுக நடத்திய பேரணி இதுவரை கூறப்பட்டு வந்த அரசியல் கணக்குகளை மாற்றிப் போட்டது.
சமூக நீதிக்காக உள்ளூர்களில் உணர்ச்சிகரமாக முழங்கியவர்கள் டெல்லியில் சற்று தள்ளியே நிற்க வேண்டிய நிலையில் தமுமுக தனது வீரியமிக்க பேரணியின் மூலம் சமுதாய மக்களைத் திரட்டி சமூக நீதி தளத்தில் இந்திய பூபாகத்தின் முதல் நிலை சக்தி என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்தது.
தமிழகத்தில் மட்டுமே தனது நலப் பணிகளை உரிமைப் போராட்டங்களை முன்னெடுத்திருந்த தமுமுக, அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்காக தனது போர்ப் பிரகடனத்தை துவக்கி விட்டது. நாளை வல்லரசாக மாறப்போகும் இந்தியாவின் எழுச்சிக்கு கட்டியம் கூறும் விதத்தில் தமுமுக பேரணி அமைந்தது.
பேரணி புறப்படத் தொடங்கியதும் பல்லாயிரக்கணக்கான உணர்வாளர்கள் புறப்படத் தொடங்கி விட்டார்கள் என்று மட்டுமா நினைக்கிறீர்கள்... இந்திய அரசியலை அசைத்துப் பார்க்கும் வண்ணம் புதிய அரசியல் அத்தியாயத்தை நோக்கி பயணமும் துவங்கி விட்டது என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கணிப்பு.
பொதுவாக பேரணிகள், ஊர்வலங்கள், புறப்படும் போது புழுதிகள் பறக்கும், தூசு பறக்கும். ஆனால் அங்கு பதவியும் பகட்டும் எங்களுக்கு தூசு என்பதை நிரூபிக்கும் விதமாக தன்னலமற்ற தமுமுக சேவைப் படையினரின் பேரணி அமைந்திருந்தது.
மொத்தத்தில் பேரணியின் தூசு பறக்கவில்லை. ஆனால் சமுதாயத்தில் விரவிக்கி டந்த மாசு பறந்தது, மறைந்தது.
லியோ டால்ஸ்டாய் சாலைக்கு முன்பாக உள்ள சிக்னலில் தொடங்கி பல்வேறு இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. முதலில் தொண்டரணியினர்அணிவகுக்க, தமுமுக தலைமை நிர்வாகிகள், அகில இந்திய முஸ்லிம் தலைவர்கள், அணி நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் என்ற அளவில் பேரணியின் வரிசை அமைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து அன்னையர்களும் குழந்தைகளும் அணி வகுத்தனர். தொடர்ந்து மாவட்ட வாரியாக சேவைப் படையினர் அணிவகுத்து புறப்பட்டனர்.
அயராது, அலட்டாது அட்டகாசமாக புறப்பட்ட பேரணி பல மைல்கள் தூரத்துக்கு நீண்டது. பெருமெடுப்பிலான மக்கள் வெள்ளம் சிறிதும் களைப்பின்றி, அலுப் பின்றி அணிவகுத்து அலையடித்து மேடையை வந்தடைந்தது
டெல்லியை திணறடித்த சமூக நீதிப் படை

தமிழக முஸ்லிம்களின் இதயத் துடிப்பாக, ரத்த ஓட்டமாகத் திகழும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கடந்த 12 ஆண்டுகளாக மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வீரியமிகு போராட்டங்களை நடத்தி வருகிறது.
அரசியல் மற்றும் சமூக தளங்களில் கடினமாக பணியாற்றிய இந்த சேவைப் படையினர் தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறி விட்டனர்.
தளராத உழைப்பு, சலிக்காத தொண்டுள்ளம் கொண்ட தமுமுக தனது சேவைப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், உலகிலேயே முஸ்லிம்கள் இரண்டாவதாக அதிகம் வாழும் இந்தியத் திருநாட்டில் வாழ்ந்துவரும் முஸ்லிம்களின் அவலநிலை குறித்தும், அவர்களது வாழ்வாதாரங்களை மேம்பாடு அடையச் செய்வது குறித்தும் தமுமுக சிந்தித்தது.
தமிழக முஸ்லிம்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் பேரியக்கமாய் விளங்கி வந்த தமுமுக முதன்முறையாக அகில இந்திய அளவில் தனது பார்வையை அழுத்தமாய் பதித்தது.
அனைத்து இந்திய முஸ்லிம்களின் மறுமலர்ச்சிக்காகவும், அவர்களின் உரிமைகளைப் பேணவும் தமுமுக களம் காண முடிவு செய்தது.
2004ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திருமதி. சோனியா காந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இந்திய முஸ்லிம்களிடம் முக்கிய வாக்குறுதிகளை வழங்கி வாக்கு கேட்டது.
அதில் ஒன்று கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் வாழும் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள முஸ்லிம் தனி இடஒதுக்கீடு உரிமையை அனைத்து மாநில முஸ்லிம்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என ஐக்கிய முற்போக்கு கூட்டணி வாக்குறுதி வழங்கியது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வாக்குறுதிகளில் வலு இருந்ததால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வெற்றிக்கு இந்திய முஸ்லிம்கள் தங்கள் வாக்குகளை பெருவாரியாக வழங்க, காங்கிரஸ் தலைமையிலான திமுக உள்ளிட்ட முக்கியக் கட்சிகளை உள்ளடக்கிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைத்தது.
முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் இடஒதுக்கீடு குறித்து நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஆறு மாதத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மூன்று வருடங்கள் கடந்து விட்டன. முஸ்லிம் இடஒதுக்கீடு குறித்து ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் தனது ஆய்வினை முடிக்கவும் இல்லை, தனது முடிவினை அறிவிக்க வும் இல்லை.
முஸ்லிம்களின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார நிலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதியரசர் ராஜேந்திர சச்சார் தலைமையில் ஓர் உயர்மட்டக் குழுவினை பிரதமர் மன்மோகன்சிங் அமைத்தார். நாடெங்கும் ஆய்வு செய்து சச்சார் குழு வெளியிட்ட அறிக்கை அணுகுண்டுகளாய் இந்திய அரசியல் அரங்கில் வெடித்தது.
ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு மேலாய் இந்தியத் திருநாட்டை திறம்பட நிர்வகித்த இந்த திருச்சமூகம் இன்று பின்தங்கியவர்களிலும் பின்தங்கியோராய் வாழ்ந்து வருவதாக அபாய அறிக்கை வாசித்தது.
கார்கில் முதல் கன்னியாகுமரி வரை வாழும் முஸ்லிம்களின் அவலநிலை இதுதான் என சச்சார் குழு அறைந்து சொல்லி அவலங்களை வெளிச்சப்படுத்திய போது, முஸ்லிம்கள் குறித்து ஆதிக்க சக்திகள் அதுவரை பரப்பிய கற்பிதங்களும் கட்டுக்கதைகளும் அம்பலத்துக்கு வந்தன.
அரசுத் துறையிலும், தனியார் துறையிலும் முஸ்லிம்களின் குறைந்த பிரதிநிதித் துவம் குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தனது வேதனையை வெளிப்படுத்தியிருந்தார். வளர்ச்சியின் கனிகள் முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டும். வளங்களிலும், நலன்களிலும் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்திருந்தார்.
சிறுபான்மையினரின் 15 அம்சத் திட்டமும் பரபரப்பாய் அறிவிக்கப்பட்டன. வசீகர வார்த்தைகள் வாட்டத்தைப் போக்குமா? தவித்த வாய்க்கு தண்ணீர் வேண்டும். பசித்த வயிற்றுக்கு சோறிடல் வேண்டும். உரிமை இழந்தவர்களுக்கு உரிமை வேண்டும்.
அறுபதாண்டுகளுக்கு மேலாக வறண்ட பாலைவனப் பயணத்தை மேற்கொண் டிருந்த இந்திய முஸ்லிம் சமூகத்தின் உரிமை காக்க உத்வேகம் கொண்ட தமுமுக, களமிறங்கியது. மார்ச் 7, 2007 அன்று தலைநகர் டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த முடிவு செய்தது.
தமுமுக தலைமை நிர்வாகிகள் அகில இந்திய அளவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அளவில் முஸ்லிம் சமுதாயத் தலைவர்களை ஒருங்கிணைத்தனர்.
இதற்கு முன்பாக 2004 டிசம்பர் 6 அன்று தலைநகர் டெல்லியில் தமுமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன்விளைவாக ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு தப்பிவிட முயன்ற பாபரி மஸ்ஜித் தகர்ப்பு குற்றவாளிகள் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்பட்டனர்.
இப்போது அகில இந்திய அளவில் இடஒதுக்கீட்டுக்கான போராட்டக் களம் அமைத்து தமிழகத்தின் அனைத்து முஸ்லிம்களுக்கும் தமுமுக அழைப்பு விடுத்தது.
தன்னலமற்ற சேவைகளால் மக்களின் மனதில் இடம்பிடித்த, சரித்திரத்தில் தடம் பதித்த தமுமுகவின் அழைப்பினை ஏற்று தமிழக முஸ்லிம்கள் அணியணியாய் திரண்டனர்.
தமிழக முஸ்லிம் தெருக்களெல்லாம் டெல்லியை நோக்கித் திரும்பின. போராட்டம் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்தே ஓய்வு உறக்கம் அறியாது தமுமுக தொண்டர் கள் களப்பணியாற்றினர். மாநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை தமுமுக சேவைப் படையினரின் போராட்ட அழைப்பு விடுக்கப்பட்டது.
தலைநகர் டெல்லி செல்லும் ரயில்கள் எல்லாம் கறுப்பு வெள்ளைக் கொடிகளை ஏந்தி தமிழ் மணம் கமழ சென்றன.
தமிழகம் டெல்லியை நோக்கி இடம்பெயர்ந்ததோ என ஆச்சரியம் மேலிட டெல்லி ரயில் நிலையம் சமுதாயச் சொந்தங்களால் திக்குமுக்காடியது.
எல்லாம் வல்ல இறைவனின் துணை கொண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்தே தமிழக முஸ்லிம்கள் தலைநகர் படையெடுப்பை நடத்தினர்.
தலைநகர் வந்திறங்கிய தமிழக முஸ்லிம்களை தமுமுக தன்னார்வத் தொண்டர்கள் டெல்லி ரயில் நிலையத்தில் முகமலர்ச்சியுடன் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
தமிழகத்திலிருந்து டெல்லி செல்லும் அனைத்து ரயில்களும் உரிமைப் போராளிகளை சுமந்து வந்தவண்ணம் டெல்லி மாநகரை வந்தடைந்தன. அனைத்து சகோதரர்களுக்கும் கனிவான வரவேற்பு வழங்கப்பட்டது.
அரசியல் கட்சிகளுக்காக கோஷங்கள் எழுப்ப, அரசியல்வாதிகளின் பணத்தில் டெல்லி செல்பவர்கள் உண்டு. ஆனால் இவர்கள் உரிமைப் போராளிகள்.
எந்த அரசியல்வாதிக்காகவும் கோஷம் போட அழைத்து வரப்பட்டவர்கள் அல்ல. தங்களது சொந்த உழைப்பின் ஊதியத்தைக் கொண்டே களம் காண வலம் வருகிறார்கள். ஆயிரம் அலுவல்கள், அடுக்கடுக்கான பணிப்பளுக்கள் என குடும்பத்தோடு நேரம் கழிக்க நேரம் இல்லாது தவிக்கும் இவர்கள்தான் உரிமைகளை வென்றெடுக்க டெல்லி வந்திருக்கிறார்கள். அந்த உணர்வு அவர்களிடம் வெளிப்பட்டது.
அம்பேத்கர் பவன். சமூக நீதிக்கு குரல் கொடுப்பவர்களின் சரணாலயம். ஆயிரக் கணக்கான மக்கள் தங்கும் வசதி இங்குண்டு. ஆயிரக்கணக்கான மக்கள் அணிவகுக்கும் வண்ணம் பிரம்மாண்ட மாநாட்டு அரங்கும் இங்குண்டு. பிரம்மாண்ட உணவு உபசரிப்பு அரங்கம், திமிறித்திரளும் தமிழக மற்றும் பிற மாநில சகோதரர்களுக்கும் அறுசுவை உணவு படைத்து அலுக்காமல் உபசரித்தது.
மார்ச் 6ஆம் தேதி டெல்லி மாநகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜும்மா மஸ்ஜித் முன்பாக உள்ளூர் மக்களின் சார்பாக தமுமுக தலைமையில் டெல்லி பேரணிக்கு ஆதரவாக மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களும் பங்கேற்றார். தலைமைக்கழகப் பேச்சாளர் நவ்ஷாத் அவர்கள் உர்துவில் பேரணியை விளக்கிப் பேசினார்.
2007 மார்ச் 7ஆம் தேதி புதன்கிழமை. அதிகாலை தொழுகைக்குப் பிறகு பேரணி புறப்பாட்டுக்கான பணிகள் துவங்கின.
எறும்புகளும், தேனீக்களும் வெட்கப்படும் வண்ணம் தமுமுக தொண்டர்கள் பம்பரமாய் சுற்றிச் சுழன்றனர்.
இந்திய முஸ்லிம்களது வரலாற்றின் சிறப்புமிகு மற்றொரு அத்தியாயம் அன்று தான் தொடங்கியது.
குளிரில் வெடவெடத்துக் கொண்டிருந்த டெல்லி மாநகர சாலைகள் உரிமைப் போராளிகளின் உணர்ச்சி கோஷங்களை கேட்கத் தயாரானது. 7 மணிக்கு அணிவகுப்பு ஆரம்பமானது. தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளிலிருந்து பேரணி துவங்க இருக்கும் ராம்லீலா மைதானம் நோக்கி அணிவகுத்து வாகனங் களில் புறப்பட்டனர்.
வாகனங்களெல்லாம் கறுப்பு வெள்ளை இரு வண்ணக் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன.
தாய்மார்கள், குழந்தைகள், பெரியவர்கள், சிறுவர் சிறுமியர் என அனைவரும் புத்தெழுச்சியுடன் புறப்பட்ட காட்சி காண்பவர்களை நெகிழ வைத்தது.
கர்நாடகாவிலிருந்து ஃஙஙப, மகாராஷ்ட்ராவிலிருந்து ஙடஓ, கேரளாவிலிருந்து டஉடயைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
கட்டுக்கோப்புக் குலையாத கண்ணியக் கூட்டம். கட்டுக்கோப்பை கட்டிக் காக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தொண்டர் படையினரின் செயல் நேர்த்தியைக் காண முடிந்தது. எங்கள் இதயங்கள் உறுதியானவை. நாளைய தலைமுறையின் வாழ்வுரிமையை உறுதி செய்ய புறப்பட்டுவிட்ட, மனதால் உரமுற்ற வீரச் சகோதரர்களும் விரைந்தனர் ராம்லீலா மைதானம் நோக்கி.
சமுதாய உணர்வு என்ற மின்சாரம் பாய்ச்சப்பட்ட கழக அடலேறுகள் ஆர்த் தெழுந்து வரும் காட்சியை நாம் பார்க்கிறோம். இன்றைய இளைஞர் பட்டாளத் தின் உரிமைப் போர் வெற்றியின் விளைவாக இன்ஷாஅல்லாஹ் உரிமைகளை அனுபவிக்கப் போகும் நாளைய தலைமுறையினர், அணிவகுத்து வரும் கழகக் கண்மணிகள் வாகனங்களில் ஏறுகின்றனர். தமிழகத்திலிருந்து வந்த உரிமைப் போராளிகளை சுமந்து கொண்டு அணிஅணியாய் வாகனங்கள் ராம்லீலா மைதானத்தை நோக்கி சீறின.

பேரணி துவங்குவதற்கு முன்பாக பேரணியை துவக்கி வைக்குமாறு இந்தியாவின் முக்கிய முஸ்லிம் கேந்திரமான ஃபத்தேஹ்பூர் மஸ்ஜிதின் இமாம் முஃப்தி முகர்ரம் அழைக்கப்படுகிறார். முஃப்தி முகர்ரம் அவர்கள் கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். இந்தியத் தலைநகரின் ராம்லீலா மைதானம் தமுமுக தொண்டரணியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டது.
மாவட்ட வாரியாக தமுமுக தொண்டர்கள் அணிவகுத்து உரிமைப் போராட்டத் துக்கு புறப்படத் தயாராயினர். தொண்டரணியினரின் அணிவகுப்புடன் பேரணி புறப்படத் துவங்கியது.
டெல்லி வாழ் மக்களுக்கு இது ஓர் புதுமையான அனுபவம். ஏன் அகில இந்திய ஊடகத்துறையினருக்கும் இது வியப்பூட்டும் பேரணியாக அமைந்திருந்தது.
இந்திய ராணுவ தரைப்படையினரின் அணிவகுப்பை பார்த்திருக்கிறார்கள். வெள்ளுடை அணிந்த இந்திய வான்படையினரின் அணிவகுப்பையும் அவர்கள் பார்த்திருக்கிறார்கள். ஆகாய வண்ணத்தில் சீருடை அணிந்து அணிவகுத்து வரும் இந்தியக் கடற்படையின் அணிவகுப்பையும் பார்த்திருக்கிறார்கள்.

முதன்முறையாக கோவை மாவட்ட தொண்டரணியினர் கறுப்பு வெள்ளை சீருடையுடன் மிடுக்குடன் நடைபோட்ட சமூக நீதிப் படையை முதன்முதலாக டெல்லி மாநகரம் பார்த்தது.
மண்டல் கமிஷனை எதிர்த்து போர்ப் பிரகடனம் செய்த ஆதிக்க சாதியின மாணவர்கள் ஆட்டம் போட்ட அதே டெல்லியில் சமூக நீதிக்காக சமர் புரிந்தனர் சமுதாய சகோதரர்கள்.
டெல்லி லி ஒரு தந்திர பூமி, இந்திர பூமி, மந்திர பூமி என பல்வேறு அரசியல் ஆய்வாளர்களும், ஏராளமான விளக்க உரைகளால் பட்டங்களால் சுட்டிக் காட்டப்பட்ட டெல்லி மாநகரில் தமுமுக நடத்திய பேரணி இதுவரை கூறப்பட்டு வந்த அரசியல் கணக்குகளை மாற்றிப் போட்டது.
சமூக நீதிக்காக உள்ளூர்களில் உணர்ச்சிகரமாக முழங்கியவர்கள் டெல்லியில் சற்று தள்ளியே நிற்க வேண்டிய நிலையில் தமுமுக தனது வீரியமிக்க பேரணியின் மூலம் சமுதாய மக்களைத் திரட்டி சமூக நீதி தளத்தில் இந்திய பூபாகத்தின் முதல் நிலை சக்தி என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்தது.
தமிழகத்தில் மட்டுமே தனது நலப் பணிகளை உரிமைப் போராட்டங்களை முன்னெடுத்திருந்த தமுமுக, அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்காக தனது போர்ப் பிரகடனத்தை துவக்கி விட்டது. நாளை வல்லரசாக மாறப்போகும் இந்தியாவின் எழுச்சிக்கு கட்டியம் கூறும் விதத்தில் தமுமுக பேரணி அமைந்தது.
பேரணி புறப்படத் தொடங்கியதும் பல்லாயிரக்கணக்கான உணர்வாளர்கள் புறப்படத் தொடங்கி விட்டார்கள் என்று மட்டுமா நினைக்கிறீர்கள்... இந்திய அரசியலை அசைத்துப் பார்க்கும் வண்ணம் புதிய அரசியல் அத்தியாயத்தை நோக்கி பயணமும் துவங்கி விட்டது என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கணிப்பு.
பொதுவாக பேரணிகள், ஊர்வலங்கள், புறப்படும் போது புழுதிகள் பறக்கும், தூசு பறக்கும். ஆனால் அங்கு பதவியும் பகட்டும் எங்களுக்கு தூசு என்பதை நிரூபிக்கும் விதமாக தன்னலமற்ற தமுமுக சேவைப் படையினரின் பேரணி அமைந்திருந்தது.
மொத்தத்தில் பேரணியின் தூசு பறக்கவில்லை. ஆனால் சமுதாயத்தில் விரவிக்கி டந்த மாசு பறந்தது, மறைந்தது.
லியோ டால்ஸ்டாய் சாலைக்கு முன்பாக உள்ள சிக்னலில் தொடங்கி பல்வேறு இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. முதலில் தொண்டரணியினர்அணிவகுக்க, தமுமுக தலைமை நிர்வாகிகள், அகில இந்திய முஸ்லிம் தலைவர்கள், அணி நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் என்ற அளவில் பேரணியின் வரிசை அமைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து அன்னையர்களும் குழந்தைகளும் அணி வகுத்தனர். தொடர்ந்து மாவட்ட வாரியாக சேவைப் படையினர் அணிவகுத்து புறப்பட்டனர்.
அயராது, அலட்டாது அட்டகாசமாக புறப்பட்ட பேரணி பல மைல்கள் தூரத்துக்கு நீண்டது. பெருமெடுப்பிலான மக்கள் வெள்ளம் சிறிதும் களைப்பின்றி, அலுப் பின்றி அணிவகுத்து அலையடித்து மேடையை வந்தடைந்தது