Monday, September 10, 2007

இடஒதுக்கீடா கேட்கிறீர்கள்...

இடஒதுக்கீடா கேட்கிறீர்கள்... குண்டுவெடிப்பை எதிர்கொள்ள தயாராகுங்கள்ஹிந்துத்துவ இயக்கத்திடமிருந்து வந்த மிரட்டல் கடிதம் எங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் அதில் முஸ்லிம்கள் மீது மட்டுமே பழிசுமத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. சற்றும் அறிவுக்குப் பொருந்தாத முறையில் பள்ளிவாசல்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு களுக்கு கூட முஸ்லிம்களை குற்றம்சாட்டும் போக்கு தொடர்கிறது. இதில் தீவிரவாதிகளைப் பிடிப்பது, தண்டிப்பது என்ற முக்கிய நோக்கங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு முஸ்லிம்கள் மீது குற்றம்சாட்டுவது முக்கிய குறிக்கோளாகப் போய்விட்டது. ஹிந்து பயங்கரவாத இயக்கங்கள் மீது எந்த விசாரணையும் இதுதொடர்பாக எழுப்பப் படுவதில்லை. எந்த ஹிந்துத்துவ தீவிரவாதியும் விசாரிக்கப்படுவதில்லையே ஏன் என்ற கேள்வி நடுநிலையாளர்களின் மத்தியில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
பார்பானியில் உள்ள முஹம்மதி பள்ளிவாசல் குண்டுவெடிப்பின் முக்கியக் குற்றவாளியான சஞ்சய் என்பவன் யார்? எந்த இயக்கத்தைச் சேர்ந்தவன்? நான்டெட்டில் ஆர்எஸ்எஸ்காரர் ஒருவரின் வீட்டில் ஒட்டுத்தாடியுடன் லுங்கி, குர்தா மற்றும் பைஜாமாக்கள் ஒளித்து வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்த விசாரணையின் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லையே ஏன்?
ஹைதராபாத் மக்கள் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த உடனேயே ஷஹீத் பிலால் என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக காவல்துறை தெரிவித்தது. அதோடு மகாராஷ்டிர மாநிலத்தின் ஜால்னா மாவட்டத்திலுள்ள சோஹப் ஜாகிர்தார் என்பவரைப் பிடித்து சிறையிலடைத்தது. இவ்வாறு முஸ்லிம்கள் மீது கெடுபிடி காட்டும் காவல்துறை, ஹிந்துத்துவ பயங்கரவாத அமைப்புகளின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கங்களின் மீது சந்தேகத்தின் சிறிய சாயல்கூட படாதவாறு கவனமாக காவல்துறை செயல்படு வதாலேயே அவர்கள் எத்தகைய பயங்கரவாதச் செயல்களையும் செய்ய துணிந்து விட்டதாக சமூகநீதி ஆர்வலர்கள் சந்தேகம் எழுப்புகிறார்கள்.
ஆந்திராவில் இயங்கும் மூவ்மென்ட் ஃபார் பீஸ் அன்ட் ஜஸ்டிஸ் (ஙடஓ) என்ற முஸ்லிம் அமைப்புக்கு தர்மரக்ஷா என்ற ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கம் மிரட்டல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. சச்சார் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றக் கோரி ஹைதராபாத் இந்திரா பூங்காவில் ஙடஓ பேரணி ஒன்றை நடத்தியது. இவ்வமைப்புக்கு தர்மரக்ஷா என்ற ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கத்தின் தளபதி என தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் வி.சேகர் என்பவர் மிரட்டல் கடிதத்தை எழுதியுள்ளார்.
அந்த மிரட்டல் கடிதத்தில், ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்கு எதிரான யுத்தம் தொடங்கிவிட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹைதராபாத் குண்டுவெடிப்புகள், இடஒதுக்கீடு கேட்பவர்களுக்கான அன்பளிப்பு என்ற தலைப்புடன் தொடங்குகிறது.
எங்கெல்லாம் தீமைகள்(!) வளர்கிறதோ, தவறுகள்(!) ஊக்கமளிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் அதனை அழிக்க வருவேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன் ராமாயணத்தின் நான்கு சுலோகங்களையும் குறிப்பிட்டிருக்கிறார். தர்மாரக்ஷா என்ற இயக்கத்தினை சேர்ந்தவர்கள் தாய்நாட்டின் ஆயுதங்களாகவும், ஆபரணங்களாகவும் உள்ளனர் என தனக்குத் தானே பெருமை யடித்துக் கொள்கிறது. அந்தக் கடிதம் முஸ்லிம்களை அழித்தொழிக்க வேண்டும் என்பதோடு அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் குட்டி அரசியல்வாதிகள், போலி மதச்சார்பின்மைவாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரையும் ஹிந்துக்கள் அல்லாத அனைவரையும் ஒழித்துக் கட்டுவோம், அதற்கான போரை அறிவிக்கிறோம் என்றும் அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.
இதுகுறித்து இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது நமது உளவுத்துறையின் பரிதாப நிலையைக் கட்டுவதாக மில்லி கெஜட் பத்திரிகை குறிப்பிடுகிறது. முஸ்லிம்கள் குறித்து கட்டுக்கதைகள் வெளியிடும் பத்திரிகைகள் கூட ஹிந்து பயங்கரவாத இயக்கம் ஒன்றின் மிரட்டல் கடிதம் குறித்த செய்தியை வெளியிடவில்லை.
யாருக்கு இடஒதுக்கீடு வேண்டுமோ அவர்கள் குண்டுவெடிப்பை சந்திக்கத் தயாராகுங்கள் என்று மிரட்டல் விடுத்துள்ள இந்தக் கடிதம் குறித்து இன்னமும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? இது எத்தகைய கடிதம் என்பது குறித்து ஆய்வு செய்ய நாம் விரும்பவில்லை. துணிச்சலே இல்லாத சில்லறைப் பேர்வழிகளின் மொட்டைக் கடிதமாகக் கூட இருக்கலாம் என காவல்துறை கண்டுகொள்ளாமல் இருந்திருக் கலாம். ஆனால் இம்மாதிரியான ஒரு மிரட்டல் கடிதத்தை முஸ்லிம் ஒருவர் அனுப்பி யிருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும். அவருக்கு சர்வதேச அளவில் தீவிரவாத தொடர்பு இருப்பதாக கதையளந்திருப்பார்கள்.
போகட்டும். சில வாரங்களுக்கு முன்பு அனுப்பப்பட்ட இந்த மிரட்டல் கடிதத்தை முக்கியமில்லாத ஒன்றாக ஆந்திர மாநில மற்றும் மத்திய புலனாய்வுத்துறை எண்ணி யிருக்கலாம். தற்போது மீண்டும் ஒரு குண்டுவெடிப்பை சதிகாரர்கள் நிகழ்த்தி யுள்ளதால் இந்த சதியின் பின்னணியில் இந்த 'மிரட்டல் கடித' ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் உள்ளனரா என்பது குறித்து துரிதமாக புலனாய்வு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதே நாட்டு மக்களின் வேண்டுகோளாகும்

2 comments:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in